தேவ மக்களின் ஆசிர்வாதமும் மோவாபியரின் அழிவும்
இந்த ஏசாயா 25ம் அதிகாரத்தில் தேவ மக்களின் ஆசிர்வாதமும் மோவாபியரின் அழிவையும் காணலாம்.
ஒவ்வொரு தேவபிள்ளையும் இவ்வாறு தேவனை துதிக்க கற்றுக்கொள்ளவேண்டும் "கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்". கர்த்தர் நமக்கு "அதிசயமானவைகளைச் செய்தீர்" என்று அதிசயமானவைகள் நடக்கும் முன்னே வாயின் மூலம் அறிக்கை செய்யவேண்டும். அவர் நமக்கு வேதத்தின் மூலம் அளித்த ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். மனித ஆலோசனைகள் நம்மை சரியான பாதையில் வழிநடத்தாது. அந்த ஆலோசனைகள் உறுதியாக இருக்காது.
எந்த நகரம் அல்லது தேசம் நீதியின்படியும் நியாயத்தின்படியும் ஆட்சி செய்யாவிட்டால் குடிமக்கள் அழுது புலம்புவார்கள். தேவன் அந்த தேசத்தின் நிர்வாகத்தை தண்டித்து பாழாக்குவார் (2)
இப்படி தேவன் அந்த நகரத்தின் அல்லது தேசத்தின் ஆளுநர்களை தண்டிக்கும்போது பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும்.
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில்," நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர் (3-4).
கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில்," நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். ஒரு கொடுங்கோல் ஆட்சி மூலம் எழும்பும் பெருவெள்ளத்திலிருந்து ஏழைகளுக்கும் எளியவனுக்கும் அடைக்கலம் கொடுக்கிறார் (3-4).
இயேசு நம்முடன் இருக்கும் போது நமது வறட்சியான வாழ்க்கையில் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், நம்மை ஆளும் அந்நியரின் மும்முரத்தைத் தேவரீர் தணியப்பண்ணுவார் ; மேகத்தின் நிழலினால் வெயில்தணிகிறதுபோல் நம்மை ஒடுக்கும் பெலவந்தரின் ஆரவாரம் தணியும் (5).
சேனைகளின் கர்த்தர் "இந்த மலையிலே", அதாவது கிறிஸ்துவாகிய கன்மலையின் "சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்". இந்த விருந்து மூலம் ஆவிக்குரிய கொழுமையான பதார்த்தங்கள், பாவங்களை மேற்கொண்டு தேவ சாயலாக மாறும் அனுபவங்கள், உண்மை தீமையை அறிந்துக்கொள்ளும் தெளிந்த ஞானமுள்ள புத்தி கிடைக்கிறது (6).
ஏதேன் தோட்டத்தில் இழந்ததை இந்த மலையில் திரும்ப பெறுகிறோம். சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும் தேவ மக்களான அறியும் அறிவை நாம் பெறுகிறோம் (7).
அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.
இயேசு நமது மரணத்தை ஜெயமாக விழுங்கிவிட்டார். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 1 கொரி 15:55. சரீர மரணம் நம்மை அவரை விட்டு பிரிக்காது. மரண பயத்தை நீக்கி, கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிட்டார்; "கர்த்தரே இதைச் சொன்னார்". (8)
"அக்காலத்திலே", அதாவது இந்த காலத்தில், இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று" சொல்லுவோம். நாம் ஒவ்வொரு காரியத்திலும் ஆண்டவரின் தருணத்திற்காக காத்து இருக்க கற்றுக்கொள்ளவேண்டும். அவர் நம்மை கண்டிப்பாக இரட்சிப்பார், அவரின் சித்தத்தின் படி வேண்டுகிறோமோ அதன்படி நமது இருதய வாஞ்சைகளை நிறைவேற்றுவார். நாம் ஒரு நாள் மகிழ் கூறுவோம் (9).
கர்த்தருடைய கரம் இந்த, கிறிஸ்துவாகிய கன் மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம். தேவனை அறியாத, பெருமை வாய்ந்தஅந்நிய ஜாதியான மோவாப் நாட்டை மிதிக்கப்பட்டுப்போவார்கள். நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்.
"அவர் மோவாபின் மதில்களுடைய உயர்ந்த அரணைக் கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்". இன்று ஆணவம் பிடித்து தேவ மக்களை அடிமை படுத்தும் உயர் அரணில் இருக்கும் எந்த எதேச்சதிகாரியையும் தேவன் கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார் (10- 12)