Jeremiah 13th chapter
"கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.
நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன்.
இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார்.
நான் போய், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்திலே ஒளித்துவைத்தேன்.
அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார்.
அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற்போயிற்று.
அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன்.
என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
இந்த தீர்க்கதரிசனத்தின் முக்கியம் என்னவெனில் நமது பெருமையை தேவன் எதிர்த்து நிற்கிறார். என்னதான் ஆவிக்குரிய வரங்களையோடு ஊழியம் செய்தாலும் ஒரு பிரயோஜனம் இல்லை . நாம் தேவனது குரலை அவரின் வார்த்தை மூலம் அறிந்து கீழ்ப்படியாமல் போனால் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவாம். தப்பான உபதேசத்திற்கு செவிக்கொடுத்து அந்நிய தேவர்களை சேவிக்கவும் பணிந்துகொள்ளவும் செய்கிறோம். எப்பொது கிறிஸ்துவின் உபதேசத்தையும் அப்போஸ்தலர் உபதேசத்தையும் புறக்கணிக்கிறோமோ அப்போதே அந்நிய தேவர்களை சேவித்து பணிந்துகொள்ளுகிறோம். கடைசி காலத்தில் எப்போதும் தேவ வசனத்தை தியானித்துக்கொண்டிருக்கவேண்டும்.
"கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்".
கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நாமும் நமது குடும்பத்தாரும் தேவ ஜனங்களாகவும் கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் இருக்க தேவன் விரும்புகிறார். ஆனால் நாமோ பெருமையின் ஆவியால் அவரின் சத்தத்தை கேளாமல் கச்சையை போல அழிந்துபோகிறோம்.
"சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள்.
அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி,
பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்".
இன்று கிறிஸ்துவின் சபையாகிய சரீரத்தில் எல்லா சலுகைகளையும் ஆளுகைகளையும் பெற்ற தேவ மக்கள் சத்தியத்தை விட்டு விலகி அந்நிய தேவர்களையும் அவர்களின் வழிநடத்துதலையும் தேர்ந்தெடுத்து ஆவிக்குரிய பெருமையால் தேவனைவிட்டு விலகிபோகும்போது தேவன் அவர்களை ஒரு திராட்சரசத்தினாலே உண்டாகும் குடி வெறிபோல நிரப்பி அவர்களை தண்டிக்கிறார். இன்று அநேக பிரசித்திபெற்ற மேய்ப்பர்கள், சுவிசேஷகர்கள் திராட்சரசத்தினாலே உண்டாகும் வெறியை பெற்றுக்கொண்டு கிறிஸ்துவின் மந்தையை சிதறடித்து நரகத்தின் பாதையில் நடத்திவருகிறார்கள். தேவன் அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுகிறார். அவர்கள் சத்திய பாதையில் தேவ வசனத்தின் வெளிச்சத்திலே நடக்காததால் அவர்கள் மோதி விழுகிறார்கள். இந்த மேய்ப்பர்கள், தீர்க்கத்தரசிகள் எல்லோரையும் அவர்களை நம்பி மோசம் போகிறர்வர்களின் மேலே தேவகோபம் வெளிப்பட்டு தேவன் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று சொல்லுகிறார். ஜாக்கிரதை. இந்த உலகத்தின் வாழ்க்கையை எல்லா கவனத்துடன் தேவ வசனத்தின் வெளிச்சத்தில் நடத்துவோம்.
"நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார்.
அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்".
தேவவசனத்தின் சத்தியத்தை அறிந்து செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள். அப்படி செவிகொடுத்துக் கேளாமல் போனால் அந்தகாரத்தில் பிரவேசித்து இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறல் அடையும் முன்பு உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள். நீங்கள் இதைக் கேளாமற்போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும் என்று எரேமியா தீர்க்கன் கூறுகிறான். ஒரு உண்மையான தீர்க்கதரிசி உங்களை எச்சரித்து வழிநடத்துகிறான். ஆசீர்வாத வார்த்தைகளை காண்பித்து உங்களை தேவனிடமிருந்து பிரித்து தன்னண்டை வரும்படி வழிநடத்தமாட்டான்.
"நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள்.
தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போம்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போம்.
உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே?
அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ?"
வஞ்சிக்கப்பட்டு ஆளுமை செய்யும் தலைவர்களை "தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று தீர்க்கதரிசனம் சொல்லுங்கள். தேவமக்கள் சிறைப்பட்டுப் போகமாலிருக்க போராடுங்கள். உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் வஞ்சிக்கவிடாமல் பார்த்துக்கொள்வது உங்களின் கடமையல்லவோ? ஒருநாள் ஆண்டவர் உன்னிடம் இந்த வஞ்சிக்கப்பட்ட ஆட்டு மந்தையை குறித்து கணக்கு கேட்பார். அந்த ஆட்டு மந்தையை காக்கும்படிபிரசவவேதனை அடையவேண்டாமா?
"இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன.
எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப்பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும்.
ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன்".
தேவன் நம்மை தண்டிக்கும்போது நமது திரளான அக்கிரமத்தினிமித்தமே இவைகள் நேரிடுகிறது என்று அறியவேண்டும். எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? அப்படியே மாற்றினாலும் தீமைசெய்யப்பழகின நாம் நன்மை செய்தாலும் தேவன் நம்மை வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்பண்ணுவார். துரும்பைப்போல நம்மை அவர்களைச் சிதறடிப்பார். தேவன் நம்மை விசாரிக்கும் காலத்தில் நாம் செய்த நன்மைகளைக் காண்பித்து அவரின் கைகளிலிருந்து தப்பித்துக்கொள்ளமுடியாது.
"நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டாக எடுத்துப்போடுவேன்.
உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்".
நாம் தேவனை மறந்து கள்ள உபதேசத்தை நம்பினால் நம்மேல் வரும் தேவனால் அளக்கப்பட்ட கோபாக்கினையின் அளவு குறையாது. நம்மை எல்லோரும் காணும்படியாக தண்டனை கொடுப்பார். நாம் தேவனுக்கு விரோதமாக எல்லா செயல்களும் அவரின் கண்களுக்கு முன்பாக இருக்கும்.
நீங்கள் இந்த உலகத்தில் பிரசித்தி பெற்ற ஊழியராக இருக்கலாம். தேவனின் சித்தத்தின் படி ஊழியம் செய்யாமல் தனக்கென்று ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி ஒரு ராஜ்ஜியத்தைக்கட்டினால் நீங்கள் இப்போது சுத்திகரிக்கப்படவேண்டும். இந்த கொடிய தண்டனை இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்பதை தேவன் அறிவார். ஆகவே காலம் தாழ்த்தாமல் உடனே மனம்திரும்பி கோணலானவைகளை செவ்வையாக்கவேண்டும்.