Jeremiah 5th Chapter
"நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்".
இன்று இரட்சிக்கப்பட்டவர்கள் அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் எங்கே என்று கிறிஸ்தவ மக்கள் தேடி வருகிறார்கள். ஆனால் நியாயஞ்செய்கிற மனிதர்கள் நம் மத்தியில் இருக்கிறார்களா? தேவவசனத்தின் சத்தியத்தைத் தேடுகிறவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்களா? அப்படி தேவமக்கள் இருந்தால், தேவன் அவர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார். அந்தக் காலத்தில் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிட்டார்கள். இன்றும் இதுபோல தேவவசனத்தின் சத்தியத்தை அறியாமல், தேவனுடைய நாமத்தை வீணாக வழங்கி அவரின் பெயரில் பொய் வாக்குத்தத்தங்களை தேவன் கொடுத்தார் என்று கூறிவருகிறார்கள்.
"அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே".
ஆவியானவரின் கண்கள் தேவவசனத்தின் சத்தியத்தை மாத்திரம் நோக்கியிருக்கிறது. ஆனால் தேவவசனத்தை படித்து தியானம் பண்ணி சத்தியத்தை அறிய மனதில்லாமலிருக்கும் தேவன் கண்டித்து உணர்த்தியும், தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் இருக்கிறார்கள்.
"கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்".
ஆவியானவரின் கண்கள் தேவவசனத்தின் சத்தியத்தை மாத்திரம் நோக்கியிருக்கிறது. ஆனால் தேவவசனத்தை படித்து தியானம் பண்ணி சத்தியத்தை அறிய மனதில்லாமலிருக்கும் தேவன் கண்டித்து உணர்த்தியும், தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் இருக்கிறார்கள்.
"அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்".
சத்தியத்தை அறியாதவர்கள் நீசர்கள். மதியற்றவர்கள். ஆதலால் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள். சபையின் மூப்பர்கள் சத்தியத்தை போதியாமல் இருக்கும்போது அந்த மதியற்றவர்கள் தங்களையே அழித்துவிடுவார்கள். தங்களை காப்பாற்றி வந்த நுகத்தடி முறிந்து தேவனோடு இணைக்கும் கட்டுக்கள் அறுந்துவிழுகிறது.
"ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்.
அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான்.
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்".
எப்போது தேவவசனத்திற்கு கீழ்ப்படியாமல் போகிறோமோ, பின் மாற்றம் அடைகிறோமோ, சீர்கேடுகள் பெறுகிறதோ, அப்போது காட்டு மிருகங்களை போலான பொல்லாத மனிதர்களை தேவன் நமக்கு விரோதமாக எழுப்புகிறார். அவர்கள் நம்மை துன்பப்படுத்துவார்கள். தேவப்பிள்ளைகள் தேவனின் வசனத்தைக் கைக்கொள்ளாமல் தேவனை விட்டு விலகும்போதோ, தெய்வம் அல்லாத மனித விக்கிரகங்களை பின்பற்றி ஆவிக்குரிய விபசாரம் பண்ணுகிறார்களோ தேவன் எப்படி மன்னிப்பார்? பாவத்தில் மயங்கி மாமிச இச்சைகளை வெறுக்காமல், முன்னால் பெற்ற ஆவிக்குரிய அனுபவங்களில் மேன்மை பாராட்டி கொழுத்த குதிரைகளைப்போல் பாவ வாழ்க்கையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் அநேக தேவ ஊழியர்களை தேவன் பயங்கரமாக தண்டிப்பார். இவைகளை தேவன் விசாரிக்காமலிருப்பாரோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு தேவனின் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ?
"அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பாவத்தில் வாழும் தேவமக்களை தண்டிப்பதற்கு தேவன் புறஜாதி மக்களை நாம் எங்கே ஒளிந்துக்கொண்டாலும் மதில்கள்மேலேறி அழித்துப்போட கட்டளையிடுகிறார். இவர்கள் தேவனுக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணுகிறார்கள்".
அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
"தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள்.
ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்".
இன்று கள்ள தீர்க்கத்தரசிகள் கிருபையின் காலத்தில் தேவன் நல்லவர் என்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும் என்று கூறிவந்தால் அந்த தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை. இப்படி கள்ள தேவவாக்குளை கொடுத்த போதகர்களை தனது உண்மையான தீர்க்கதரிசன வார்த்தைகள் மூலம் தண்டிப்பார்.
"இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள்".
கீழ்ப்படியாத தேவமக்களை ஒரு பலத்த ஜாதி, தேவனை அறியாத மக்களின் மூலம் தண்டிக்கிறார். இந்த மக்கள் நமக்கு தேவன் மூலம் கிடைக்கும் ஆசீர்வாதங்களை அழித்துவிடுவார்கள். இன்று தேவனின் மூலமாக வரும் ஆசீர்வாதங்களை தடுப்பது கள்ள போதகர்கள் தான். ஏழை எளியவர்களுக்கு கொடுக்காமல் அவர்களுக்கு பணம் கொடுத்தால் தேவன் ஆசீர்வதிப்பார் என்று கள்ள தீர்க்கதரிசனம் கூறிவருகிறார்கள், தேவமக்களின் காணிக்கைகளை வாங்கி அந்த கள்ள போதகர்கள் தங்களுக்கென்ற சாம்ராஜ்ஜியங்களை கட்டி, ஆடம்பர வாழ்க்கை வாழ நீங்கள் உதவினால் உங்களுக்கும் உங்கள் சன்னதிக்கும் வரவேண்டிய ஆசிர்வாதங்கள் வராது.
"ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக".
ஆகிலும் தேவன் தனது மகா இரக்கத்தால் நம்மை சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நம்மை ஏன் இப்படி தண்டித்தார் என்று கேட்போமானால் அவர் நம்மைப் பார்த்து சொல்வார். நீங்கள் அவரின், இயேசுவின் வார்த்தைகளை கேளாமல் , மனிதர்களின் போதனைகளை பின்பற்றினால் நீங்கள் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேசத்தில் ஆசீர்வாதங்களை பெறாமல் சபிக்கப்பட்ட பூமியில் புறஜாதி மக்களுக்கு சேவை பண்ணுவீர்கள்.
"நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால்,
கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.
எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?"
இன்று தேவமக்கள் ஆவிக்குரிய கண்கள் இருந்தும் தங்களில் வாசமாயிருக்கும் பரிசுத்தாவியானவரை காணமுடியாமல் அவரைத்தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய காதுகள் இருந்தும் தேவவசனத்தை தியானித்து ஆவியானவர் என்ன பேசுகிறார் என்பதை கேட்க முடியாத அறிவில்லாமலிருக்கிறார்கள். சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்து அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கு மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய சர்வவல்லமையுள்ள தேவனுக்கு பயப்படாமலிருக்கிறோமோ? பாவத்தை துணிந்து செய்துவருகிறோம். அதனால் ஆவியானவர் அநேக தேவமக்களை விட்டு போய்விட்டார். ஆனாலோ அவர்கள் ஆண்டவர் அவர்களோடு இருக்கிறார் என்று ஏமாந்து போய், அந்நிய பாஷையிலே பேசிக்கொண்டும் ஆராதனையில் கலந்துகொண்டும் இருக்கிறார்கள்.
"இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள்.
அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை.
உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது".
இன்று அந்திக்கிறிஸ்துவின் ஆவியால் வஞ்சிக்கப்பட்டு தேவமக்கள் முரட்டாட்டமும் கலகமுமான இருதயத்துடன் முரட்டாட்டம்பண்ணி தங்களின் ஆத்துமாக்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்தந்தப் பருவத்திலே நமக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை தரும் தேவனுக்கு பயப்படாமல் இருக்கிறோமா? ஆண்டவர் நியமித்த காலத்தில் எழுப்புதல் இன்னும் வரவில்லை. தேவ மக்களாகிய நமது அக்கிரமங்கள் பாவங்கள் நமக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது.
"குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள்.
குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள்".
தேவமக்களின் மத்தியில் மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் காணப்படுகிறார்கள். தேவமக்களுக்கும் இந்த உலகமக்களுக்கும் வித்தியாசம் கிடையாது. இன்று அநேக ஊழியர்கள் உலக ஆதாயத்தால் தங்கள் சொத்துக்களை பெருக்கி தங்கள் வீடுகளை கபடத்தால் திரப்பியிருக்கிறார்கள். அநேக ஊழியர்கள் ஐசுவரியவான்களாகிறார்கள். இயேசுவை பின்பற்றவில்லை.
"கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.
இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்".
இன்று ஐசுவரியத்தில் கொழுத்துப்போய் ஊழியம் என்ற பெயரில் ஆண்டவரின் நாமத்தை உபயோகித்து கட்டிடங்கள், சொகுசு வாகனங்கள் வாங்கி கொண்டிருக்கிறார்கள். அரசியல் செல்வாக்கு , பணபலம் படைத்த துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள். தங்களது சபைகளிலும் ஊழியங்களிலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு சரியாக சம்பளம் கொடுப்பதில்லை. சமூகத்தில் திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள். இன்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் நம்மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவது நமது கடமையல்லவா? இப்படி நாம் நிர்விசாரத்துடன் இருப்போமானால் தேவன் நம்மை தண்டிக்காமலிருப்பாரா?
"திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது.
தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்? "
தேவமக்கள் இப்படி நடந்துக்கொள்ளும்போது நமது தேசத்தில் திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் நடந்துவருகிறது. தேவனால் ஊழியத்திற்கு அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். கிறிஸ்துவின் போதனைகள், அப்போஸ்தலர் போதனைகள் போன்ற கிறிஸ்துவத்தின் அஸ்திவாரத்தின் மேலே தங்களின் ஊழியங்களை கட்டாமல் மக்களை பிரியப்படுத்தும்படி அவர்களின் விருப்பத்தின்படி செய்திகளை கொடுத்து இதுதான் தேவசெய்தி என்று கூறிவருகிறார்கள். இந்த தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேட்டு அவர்களின் கீழே பணிபுரியும் pastors தங்களின் சபைகளின் மக்களை ஆளுகிறார்கள்.