எருசலேமின் அழிவவை பற்றிய தீர்க்கதரிசனம்

ஏசாயா 22ம் அதிகாரம்  மலையில் கட்டப்பட்ட எருசலேமைக் குறித்த தீர்க்கதரிசனத்தை வெளிப்படுத்துகின்றது. இன்னும் ஒரு உயர்த்த மலை இந்த பட்டினத்தை சுற்றியிருக்கிறது. மூன்று பள்ளத்தாக்குகளில் இந்த பட்டினம் இருக்கிறது. இது தான் பள்ளத்தாக்கின் தரிசனம்.


இன்று பின்மாறிபோன சபைகளுக்கும் தேவ மக்களும் எப்படி தேவன் தன் தேர்ந்தெடுத்த யுத மக்களையும் எருசலேம் பட்டினத்தையும் அழித்தார் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

 

எருசலேம் பட்டினம் ஒரு விக்கிர ஆராதனையின் இடமாக மாறினதால் ஏசாயா தீர்க்கதரிசி ஆண்டவரின் கோபாக்கினையை வெளிப்படுத்துகிறான். நடக்கும் காரியங்களை காணும்படி எல்லாரும் வீடுகளின்மேல் ஏறும்படி அழைப்பு வருகிறது.

 

"சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும், மிதியுண்குதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது; இது அலங்கத்தைத் தகர்த்து, பர்வதத்துக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது".

 

"சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை... உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும், வில்வீரரால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள். ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள்" என்று தீர்க்கதரிசி புலம்புகிறான் .

 

ஏலாமியன் மூலமாக எருசலேம் பட்டினத்திற்கும் யூத மக்களுக்கும் கீழே குறிப்பிட்டபடி அழிவு வருகிறது. ஏலாமியன் பாபிலோனின் அயல்நாடு. பாபிலோனிய நாட்டிற்கு உதவி செய்து அசீரிய நாட்டை எதிர்த்து நின்றது.

 

 “ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும்.

 

மகா வடிவான உன் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்; குதிரைவீரர் வாசல்கள் மட்டும் வந்து அணிவகுத்து நிற்பார்கள்.

 

அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய்.

 

நீங்கள் தாவீது நகரத்தின் இடிதல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு, கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டிவைத்து,

 

எருசலேமின் வீடுகளை எண்ணி, அலங்கத்தை அரணிப்பாக்கும்படி வீடுகளை இடித்து,

 

இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள்.

 

சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.

 

நீங்களோ, சந்தோஷித்துக்களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள்.

 

மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது".

 

ஏசாயாவை பார்த்து, "சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால்,  உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்?

 

இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.

 

அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய், அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும்.

 

உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய். அந்நாளிலே இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து:, உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான்".

 

தேவ மக்களுக்கு தண்டனை கொட்டும்படி நியமிக்கப்பட்ட ஏலாமியனுக்கு ஆண்டவர் தாவீதுடைய வீட்டின் திறவுகோலை இவ்விதம் கொடுக்கிறார்:

 

"அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.

 

அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.

 

அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய புத்திரர் பௌத்திரருடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கி வைப்பார்கள்.

 

தேவன் உபயோகிக்கும் பாத்திரங்கள்

 

அதின்மேல் (அந்த மகிமையான சிங்காசனத்தில் மேல்) அவர் பயன்படுத்தும் பாத்திரங்களாக இருக்கவேண்டும். 

 

"மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?

 

தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,

 

தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? (ரோமர் 9: 21-25). அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்களளாக இருந்த நம்மை எல்லோரையும் மிகவும் நீடிய சாந்தத்தோடே குயவனாகிய தேவன் நம்மை கனமான காரியத்துக்கு உபயோகிக்கும் படி மாற்றி வருகிறார்.

 

உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்துவிழும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தரே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்"

 

மேலே கூறப்பட்ட தீர்க்கதரிசன வார்த்தைகள் இயேசுவை ஏற்றுக்கொண்ட மக்களுக்காகத்தான்.

 

திறக்கவும் பூட்டவும் அதிகாரங்கள்

 

இந்த உலகத்தில் ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு எந்த கதவும் இருந்தால் நாம் திறப்போம். மனிதனால் முடியாத காரியங்கள் எதுவும் இருந்தால் தேவமக்களான நாம் ஜெபத்துடனும் தீர்க்கதரிசன வார்த்தைகளாலும் திறப்போம்.  அதேபோல யாரும் திறக்கக்கூடாதபடிக்கு எந்த வாசலும் இருந்தால் அதை பூட்டுவோம். இது அரசியலாக இருக்கட்டும்.

 

தேவராஜ்யத்தின் கதவுகள் புறஜாதி மக்கள் பிரவேசிக்கமுடியாதபடி பழுதடைந்த நிலைகளில் இருக்கிறது. இவைகளை திறக்கவும் பூட்டவும் முடியாமல் இருக்கின்றது. தேவ பிள்ளைகளின் வாழ்க்கைகள் கிறிஸ்துவை வெளிப்படுத்தாமல் இருக்கிறது. கிறிஸ்துவை பிரசிங்கிக்கும் ஊழியர்களின் வாழ்க்கை கிறிஸ்துவின் போதனைக்கும், வாழ்க்கைக்கும் முரணாக இருக்கிறது. நமது வாழ்க்கைகளை வேதவசனத்தின் படி சரி செய்வோமாக.

 

பூட்டக்கூடாதபடிக்கு உள்ள கதவை சரிபண்ணி, அதை பூட்டி திறக்கும் படியும் திறக்கக்கூடாதபடிக்கு உள்ள வாசலை சரிபண்ணி அதை அடைத்து பூட்டவும் முடியும்.

 

அரண்மனையின் ஆணிகள்

 

நாம் உறுதியான இடத்திலே கிறிஸ்துவாகிய சரீரம்  ஆணியாகக் கடவப்பட்டு இருப்போம். அந்த ஆணியானது பிடுங்கப்படும்போது நம்மில் மேலேயுள்ள பாரமெல்லாம் நீங்கிவிடும்.

 

அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான்.

 

மகிமையான சிங்காசனம்

 

இயேசு ராஜாவின் ராஜ்யத்தில் அவரை அமர்த்தும்  சிங்காசனமாக இருப்போம். நாம் நமது வாழ்க்கையில் இயேசுவை பிரதிலிபதித்து காண்பிக்கும்போது இந்த உலக மக்கள் இந்த சிங்காசனத்தைப் பார்த்து அதின் மேலே அமர்ந்திருக்கும் கிறிஸ்துவை காண்பார்கள். இன்று இந்த உலக மக்கள் காண்பது ஒவ்வொரு தனித்தனியான ஊழியர்களின் சிங்காசனங்களைத்தான்.

 

நாம் எல்லோரும் அவருடைய ராஜரீக அரண்மனையை தாங்கும் ஆணிகளாக கடவுப்பட்டு இருப்போம். இந்த ஆணிகள் பிடுங்கப்பட்டால் அவரின் அரண்மனை "முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்துவிழும்". இன்று இயேசுவின் அரண்மனையை அசைக்கமுடியாமல் நிலைத்திருக்கும்படி ஆணிகள் அவசியம். அவரின் மகிமை இந்த அரண்மனையில் தங்கிருக்கிறது. இன்று அனேக கள்ள போதகர்கள் தப்பான உபதேசத்தால் அவரின் மகிமையை திருடியோ அழித்தும் வருகிறார்கள்.