29-இத்தனை நாள் ஆன-*
இத்தனை நாள் ஆன பின்னும் (1949)
LYRICS BY KALKI
MUSIC BY S.V.VENKATARAMAN
RAGAM : A GRAND VARIANT OF SINDHU BAIRAVI
or perhaps it is a variant of DARBARI KAANADAA
இத்தனை நாள் ஆன பின்னும்
ஏழை நெஞ்சே ஏன் துயரம்?
எத்தனை நீ அழுதாலும்
உத்தமர் தாம் வருவாரோ
தன்னுயிரை மன்னுயிறகே
தந்தவர் தாம் மாய்ந்தவரோ!
இன்னுயிரும் எமக்களித்த
ஏந்தல் அன்றோ ,காந்தி மஹான் !
(NOTE THE MUSIC INTERLUDE HERE!)
அன்பினிலே அவரிருப்பார் !
அருளினிலே விளங்கிடுவார் !
துன்பமுற்ற பேதையர்தம்
துயரினிலே திகழ்ந்திடுவார் !
சின்னச்சிறு மதலையரின்
சிரிப்பினிலே மலர்ந்திடுவார்
( note the divine rendering by MS here!)
சின்னச்சிறு மதலையரின்
சிரிப்பினிலே மலர்ந்திடுவார்
கன்னியர்கள்,அன்னையர்தம்
கண்ணீரில் கரைந்திடுவார்
ஏழையர்க்கே இரங்கிடுவோர்
இதயங்களில் வீற்றிருப்பார் !
ஊழியர்கள் உழவோரின்
உழைப்பினிலே ஜ்வலித்திடுவார் !
இத்தனை நான் சொன்ன பின்னும்
ஏழை நெஞ்சே ஏன் துயரம் ?
------------------------------------------------------
RSR