11-மாலைப் பொழுதினிலே-*
மாலைப் பொழுதினிலே ஒரு நாள்
LYRICS BY KALKI
![](https://www.google.com/images/icons/product/drive-32.png)
if there is any problem in playing this,
just click on the arrow in right-hand corner
(pop-up), and then click 'download'. it will play in vlc.
you can also download it.
( the problem is because of video-format)
THIS IS WMV FILE WITH SLIDES
(also , wait for some time, for download to complete)
( செஞ்சுருட்டி)
மாலைப் பொழுதினிலே ஒருநாள் ,
மலர்ப் பொழிலினிலே
கோலக் கிளிகளுடன் குயில்கள்
கொஞ்சிடும் வேளையிலே
வாலைக் குமரன் , மரு இல்
, மாமதி போல் முகத்தான்
வேலொன்று கையிலேந்தி என்னையே
விழுங்குவான் போல் விழித்தான்
-------------------------------------------------------------------------
BEHAG
. நீலக் கடலினைப்போல் என்நெஞ்சம்
நிமிர்ந்து பொங்கிடவும்
நானப்புறம் நோக்கி ,நாணித்தான்
யாரிங்கு வந்ததென்றேன்
ஆலிலை மேல் துயின்று புவனம்
அனைத்துமே அளிக்கும்
மாலின் மருமகன் யான் எனையே
வேலன் முருகன் என்பார்.
=================================================
(ஸிந்துபைரவி )
சந்திரன் வெண்புறும் உன் முகத்தில் ,
சஞ்சலம் தோன்றுவதேன் ?
சொந்தம் இல்லாதவளோ ? புதிதாய்
தொடர்ந்திடும் உறவோ?
முந்தைப் பிறவிகளில் உன்னை நான் ,
முறையினில் மணந்தேன்!
எந்தன் உயிரல்லவோ கண்மணி
ஏன் இந்த ஜாலம் என்றான்!
--------------------------------------------------------------------------------
( மோஹனம் .)
உள்ளம் உருகிடினும் உவகை
ஊற்றுப் பெருகிடினும்
கள்ளத் தனமாகக் கண்களில்
கனல் எழ விழித்தேன்.
புள்ளி மயில் வீரன் மோகனப்
புன்னகை தான் புரிந்தான்.
துள்ளி அருகில் வந்தான் ,என்கரம்
மெல்லத் தொடவும் செய்தான்
-----------------------------------------------------------------------------
(நாதநாமக்ரியா )
பெண்மதிப் பேதமையால் அவன் கை
பற்றிடவும் துணிந்தேன்
கண் விழித்தே எழுந்தேன் துயரக்
கடலிலே விழுந்தேன்
வண்ண மயிலேறும் பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்
கண்கள் உறங்காவோ அத்துணைக்
கனவைக் கண்டிடேனோ
===============================================