11-மாலைப் பொழுதினிலே-*

மாலைப் பொழுதினிலே ஒரு நாள்

LYRICS BY KALKI

MALAIPPOZHUTHINILAE.wmv

if there is any problem in playing this,

just click on the arrow in right-hand corner

(pop-up), and then click 'download'. it will play in vlc.

you can also download it.

( the problem is because of video-format)

THIS IS WMV FILE WITH SLIDES

(also , wait for some time, for download to complete)

( செஞ்சுருட்டி)

மாலைப் பொழுதினிலே ஒருநாள் ,

மலர்ப் பொழிலினிலே

கோலக் கிளிகளுடன் குயில்கள்

கொஞ்சிடும் வேளையிலே

வாலைக் குமரன் , மரு இல்

, மாமதி போல் முகத்தான்

வேலொன்று கையிலேந்தி என்னையே

விழுங்குவான் போல் விழித்தான்

-------------------------------------------------------------------------

BEHAG

. நீலக் கடலினைப்போல் என்நெஞ்சம்

நிமிர்ந்து பொங்கிடவும்

நானப்புறம் நோக்கி ,நாணித்தான்

யாரிங்கு வந்ததென்றேன்

ஆலிலை மேல் துயின்று புவனம்

அனைத்துமே அளிக்கும்

மாலின் மருமகன் யான் எனையே

வேலன் முருகன் என்பார்.

=================================================

(ஸிந்துபைரவி )

சந்திரன் வெண்புறும் உன் முகத்தில் ,

சஞ்சலம் தோன்றுவதேன் ?

சொந்தம் இல்லாதவளோ ? புதிதாய்

தொடர்ந்திடும் உறவோ?

முந்தைப் பிறவிகளில் உன்னை நான் ,

முறையினில் மணந்தேன்!

எந்தன் உயிரல்லவோ கண்மணி

ஏன் இந்த ஜாலம் என்றான்!

--------------------------------------------------------------------------------

( மோஹனம் .)

உள்ளம் உருகிடினும் உவகை

ஊற்றுப் பெருகிடினும்

கள்ளத் தனமாகக் கண்களில்

கனல் எழ விழித்தேன்.

புள்ளி மயில் வீரன் மோகனப்

புன்னகை தான் புரிந்தான்.

துள்ளி அருகில் வந்தான் ,என்கரம்

மெல்லத் தொடவும் செய்தான்

-----------------------------------------------------------------------------

(நாதநாமக்ரியா )

பெண்மதிப் பேதமையால் அவன் கை

பற்றிடவும் துணிந்தேன்

கண் விழித்தே எழுந்தேன் துயரக்

கடலிலே விழுந்தேன்

வண்ண மயிலேறும் பெருமான்

வஞ்சனை ஏனோ செய்தான்

கண்கள் உறங்காவோ அத்துணைக்

கனவைக் கண்டிடேனோ

===============================================