26-*-செந்தமிழ் நாடெனும் போதினிலே

செந்தமிழ் நாடெனும் போதினிலே


senthamizh.mp4
nithyahellp_vazhiya_short.mp4

*

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி-என

மேவி யாறு பலவோடத்-திரு

மேனி செழித்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்

பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

------------

THE FINISHING LINES ARE IN MADHYAMAVATHI


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித் திருநாடு!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!