மனம் குளிர ,கண் குளிர
மனம் குளிர ,உள்ளம் குளிர
இளம் காற்றில் அசைந்து
மணம் கமழும் மலர்களும்
தீங்கனிகளுமே தந்தீர் !
தினம் இன்ப நிழல் தந்தீர் !
அருமை மிகு தருக்காள் !
செழும் செடிகாள் !
மலர்க கொடிகாள் !
இனம்பிரியா இசைக்குயிலே !
இளம் தோகை மயிலே !
இன்சுவைப் பால் எனக்களித்து ,
வளர்த்த செல்வ பசுககாள்!
கனவிலும் எந்தனைப் பிரியா மான்கன்றே !
இனிமேல் கண்டு மகிழ்ந்து
உங்களுடன் கழித்திடும் நாள் என்றோ!
அந்நாள் என்றோ?