23-தெய்வத் தமிழ் நாட்டினிலே_*
கவியரசர் பாரதியைப் பற்றி கல்கி இரண்டு
அருமையான பாடல்கள் இயற்றியுள்ளார்
here is one
தெய்வத் தமிழ் நாட்டினிலே வெண்ணிலாவே
-----------------------------------------------------------------------------
THE MP4 IS GIVEN AT THE BOTTOOM OF THE PAGE
அற்புதமான ராக மாலிகை . .
கலைவாணி எம் எஸ்
அவர்களின் குரலில் கேட்டு மகிழுங்கள்
LYRICS KALKI ..ON BARATHY.
music by
S.V.VEMNKATARAMAN
1) ஜோன்புரி
தெய்வத்தமிழ் நாட்டினிலே , வெண்ணிலாவே !
நாங்கள் வீரமின்றிப்பேதையர்போல் வாழ்ந்திருந்தோம்!
ஏதும் செய்வதறியாதிருந்த .போதினிலே
ஒரு சிங்க நாதம் கேட்டெழுந்தோம், வெண்ணிலாவே !
2) தேஷ்
இருளடைந்த நாடிதென்று எவரோ சொன்னார் !
அந்த இழிவும் ஒரு பெருமை என்று எண்ணி வாழ்ந்தோம்!
நல்ல அறிவொளியால் இருளகற்ற ஒருவர் வந்தார்!
இதை அமரர் நாடென்றறிந்தோம் , வெண்ணிலாவே!
3) பீலு
கங்கைஎனப்பொங்கிவரும் தண்தமிழினில்
நல்ல கவிதை பல புனைந்தளித்தார் , வெண்ணிலாவே!
வெற்றி சங்கம் ஊதி முரசறைந்து எழுக என்றார் !
இந்த தரணியில் நமக்கு நிகர் இல்லையென்றார்
4) செஞ்சுருட்டி
கவியரசர் பாரதியின் கவிதையின்பம் உந்தன் கதிரொளியில் காண்பதென்ன ?...வெண்ணிலாவே!
இந்தபுவியில் நீயும் தமிழனென பிறந்ததுண்டோ !
அவர் புதுமைக்கவி மதுவருந்தி மகிழ்ந்ததுண்டோ!