84-KOLUVAMARE KADAA(TODI)
தியாகராஜ கிருதி - கொலுவமரெ கதா3 - ராகம் தோடி - Koluvamare Kadaa - Raga Todi
பல்லவி
கொலுவமரெ கதா3 கோத3ண்ட3 பாணி
அனுபல்லவி
நலுவகு பலுகுல செலியகு ருக்மிணிகி
லலிதகு ஸீதகு லக்ஷ்மணுனிகருதை3ன (கொ)
சரணம்
சரணம் 1
1வேகுவ ஜாமுன வெலயுசு தம்பு3ர
சேகொனி கு3ணமுல செலுவொந்த3 பாடு3சு
ஸ்ரீ-கருனிகாஸ்1ரித 2சிந்தாமணுனிகி
ஆகலி தீர பாலாரகி3ம்பனு 3ஜேஸே (கொ)
சரணம் 2
வினவய்ய 4ஸரி ப்ரொத்3து3 வேள நாது2னிகி
சனுவுன பன்னீட ஸ்நானமு காவிஞ்சி
க4னுனிகி 5தி3வ்ய போ4ஜனமுனு பெட்டி
கம்மனி விடெ3மொஸங்கு3சு மரவக 3ஸேவிஞ்சே (கொ)
சரணம் 3
பா4க3வதுலு கூடி3 பா3கு3க3 6க4ன நய
வேக3மே ஸ்ரீ ஹரி விருலபை பவ்வளிஞ்ச
ஜோகொ3ட்டி த்யாக3ராஜு ஸுமுகு2னி 3லேபே (கொ)
பொருள் - சுருக்கம்
கேளய்யா!
கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
நான்முகனுக்கும், நாமகளுக்கும், ருக்மிணிக்கும், லலிதைக்கும், சீதைக்கும், இலக்குவனுக்கும் அரிதான கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
விடியற்காலை திகழ்ந்து, தம்புரா கையிலேந்தி,
(அவன்) புகழை, காதலுடன் பாடிக்கொண்டு,
மங்களமருள்வோனுக்கு, சார்ந்தோரின் சிந்தாமணிக்கு,
பசி தீரப் பாலருந்துவிக்கப் புரியும் கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
நள்ளிரவு வேளையில், நாதனுக்கு, கனிவுடன், பன்னீரில் திருமஞ்சனம் செய்வித்து,
மேலோனுக்கு, உயர்ந்த படையல்களை இட்டு,
மணக்கும் வெற்றிலையை அளித்துக்கொண்டு, மறவாது சேவிக்கும் கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
பாகவதர்கள் கூடி, சிறப்பாக, கன, நய, இராகங்களுடன், தீபாராதனை செய்வித்து,
விரைவில், அரி மலரணை மீது பள்ளிகொள்ளத் தாலாட்டி, (பின்னர்)
தியாகராசன் இன்முகத்தோனை எழுப்பும் கோதண்டபாணியின் தொண்டு அமைந்ததன்றோ!
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கொலுவு/-அமரெ/ கதா3/ கோத3ண்ட3/ பாணி/
தொண்டு/ அமைந்தது/ அன்றோ/ கோதண்ட/ பாணியின்/
அனுபல்லவி
நலுவகு/ பலுகுல/ செலியகு/ ருக்மிணிகி/
நான்முகனுக்கும்/ நா/ மகளுக்கும்/ ருக்மிணிக்கும்/
லலிதகு/ ஸீதகு/ லக்ஷ்மணுனிகி/-அருதை3ன/ (கொ)
லலிதைக்கும்/ சீதைக்கும்/ இலக்குவனுக்கும்/ அரிதான/ தொண்டு...
சரணம்
சரணம் 1
வேகுவ ஜாமுன/ வெலயுசு/ தம்பு3ர/
விடியற்காலை/ திகழ்ந்து/ தம்புரா/
சேகொனி/ கு3ணமுல/ செலுவு-ஒந்த3/ பாடு3சு/
கையிலேந்தி/ (அவன்) புகழை/ காதலுடன்/ பாடிக்கொண்டு/
ஸ்ரீ/-கருனிகி/-ஆஸ்1ரித/ சிந்தாமணுனிகி/
மங்களம்/ அருள்வோனுக்கு/ சார்ந்தோரின்/ சிந்தாமணிக்கு/
ஆகலி/ தீர/ பாலு/-ஆரகி3ம்பனு/ ஜேஸே/ (கொ)
பசி/ தீர/ பால்/ அருந்துவிக்க/ புரியும்/ தொண்டு...
சரணம் 2
வினு/-அய்ய/ ஸரி ப்ரொத்3து3/ வேள/ நாது2னிகி/
கேள்/ அய்யா/ நள்ளிரவு/ வேளையில்/ நாதனுக்கு/
சனுவுன/ பன்னீட/ ஸ்நானமு/ காவிஞ்சி/
கனிவுடன்/ பன்னீரில்/ திருமஞ்சனம்/ செய்வித்து/
க4னுனிகி/ தி3வ்ய/ போ4ஜனமுனு/ பெட்டி/
மேலோனுக்கு/ உயர்ந்த/ படையல்களை/ இட்டு/
கம்மனி/ விடெ3மு/-ஒஸங்கு3சு/ மரவக/ ஸேவிஞ்சே/ (கொ)
மணக்கும்/ வெற்றிலையை/ அளித்துக்கொண்டு/ மறவாது/ சேவிக்கும்/ தொண்டு...
சரணம் 3
பா4க3வதுலு/ கூடி3/ பா3கு3க3/ க4ன/ நய/
பாகவதர்கள்/ கூடி/ சிறப்பாக/ கன/ நய/
ராக3முலசே/ தீ3ப/-ஆராத4னமு/-ஒனரிஞ்சி/
இராகங்களுடன்/ தீப/ ஆராதனை/ செய்வித்து/
வேக3மே/ ஸ்ரீ ஹரி/ விருலபை/ பவ்வளிஞ்ச/
விரைவில்/ ஸ்ரீ ஹரி/ மலர் (அணை) மீது/ பள்ளிகொள்ள/
ஜோகொ3ட்டி/ த்யாக3ராஜு/ ஸுமுகு2னி/ லேபே/ (கொ)
தாலாட்டி/ (பின்னர்) தியாகராசன்/ இன்முகத்தோனை/ எழுப்பும்/ தொண்டு...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஜேஸே - ஸேவிஞ்சே - லேபே : ஜேயு - ஸேவிஞ்சு - லேபு : ஜேஸெடு3 - ஸேவிஞ்செடு3 - லேபெடு3.
மேற்கோள்கள்
1 - வேகுவ ஜாமுன - பொழுது விடிவதற்கு முன்னம் மூன்று மணி நேரம்.
2 - சிந்தாமணி - விரும்பியதை வழங்கும் மணி
4 - ஸரி ப்ரொத்3து3 - நள்ளிரவு.
5 - தி3வ்ய போ4ஜனமு - நைவேத்தியம் எனப்படும் படையல்கள்.
6 - க4ன நய ராக3முலு - கன, நய ராகங்கள் - ராகங்களின் தொகுப்பு. தியாகராஜர் தமது 'நாத3 ஸுதா4 ரஸம்' என்ற ஆரபி4 கீர்த்தனையில், 'க4ன' என்பதற்குப் பதிலாக, 'து3ர' என்று குறிப்பிடுகின்றார் - (து3ர நய தே3ஸ்1ய).
'க4ன', 'நய' மற்றும் இசைக்கலைச் சொற்களின் விளக்கம்
விளக்கம்
லலிதை - பார்வதி
தீபாராதனை - விளக்காலாத்தி