முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அந்தோணியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஆன்மீக வாழ்வில் சிறந்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பரிசுத்த நற்கருணை நாதரின் தூதராகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: திருக்குடும்பத்தின் பக்தராகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கார்மலின் தாயின் அன்பு மகனாகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கேரள மாநிலத்தில் உள்ள கைநாக்கரி என்னும் கிராமத்தில் பிறந்தவரான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இறைப்பணி மட்டுமன்றி சமூகத் பணியிலும் சிறந்து விளங்கிய சீர்திருத்தரான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: 1864இல், ஒவ்வொரு கோவிலிலும், ஒரு கல்விக் கூடம் தொடங்கி அனைவருக்கும் இலவசக்கல்வி கிடைக்க ஏற்பாடு செய்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இந்திய கத்தோலிக்க திருச்சபையில் முதன்முறையாக மன்னானத்தில் அச்சுக்கூடத்தை ஏற்படுத்தியவரான புனித குரியாக்கோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கீழ்ப்படிதலின் முன்மாதிரியான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பணிவு மற்றும் சமர்ப்பணத்தின் சின்னமாகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தர்மத்தின் எடுத்துக்காட்டாகிய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: எதிரிகளையும் அன்பு செய்யும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அடிமைபோல் பணிபுரிய மாசற்ற தேவதாயின் முன் தம்மைத் தாமே அர்பணித்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஆதரவற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் புகலிடமாக விளங்கும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: விசுவாசத்தின் ஊற்றிடமாக விளங்கும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பரிசுத்த ஆவியின் கொடைகளைப்பெற்ற புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பரிசுத்த திருச்சபையின் உண்மை ஊழியரான புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துக்க, வேதனைகள், துயரங்களைத் தயவுள்ள தந்தை போல் செவிகொடுத்து, அவர்களை ஆறுதல்படுத்திய புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இறையன்பை அனுபவித்துத் தம் எளிமையான வாழ்வின் வழிகாட்டல் மூலமாக எல்லோரையும் கிறிஸ்துவில் ஒன்று சேர்த்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பிள்ளைப் பேறற்ற துரயத்தால் மனவேதனைக்கு உள்ளான தம்பதியினருக்காக இறைவனிடம் வேண்டி, அவர்களுக்கு உதவி பெற்றுக் கொடுத்த புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சகோதர அன்பிலும், தேவ தயவிலும் காலத்தைச் செலவிட்டு, இறை சமூகத்தில் வீற்றிருந்து எம் எல்லோருக்கும் மோட்ச உரிமை கிடைக்க வழியாயிருக்கும் புனித குரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குகளுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக.
அனைவரும்: புனித குரியாகோஸ் அடிகளாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: எல்லாம் வல்ல தந்தையே! புனித குரியாகோஸ் அடிகளாரின் ஆதரவை நாடும் பிள்ளைகள் எல்லோரும் அவருடைய மன்றாட்டினால் உமது உபகார சகாயங்களை அடையும்படியாகவும், நித்திய பேரின்பத்திற்கு பாத்திரமாயிருக்கத் தக்கதாகவும் கிருபை கூர்ந்தருளும். ஆமென்
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாககேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அந்தோணியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறைசாட்சியான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: போர்த்துகல் நாட்டிலே லிஸ்பன் நகரிலே, 1647-ல் உதித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அரச சபையிலே இளவரசர் டான் பேத்ரோவின் தோழராய் வளர்ந்தாலும் கறையில்லாத் தூய்மையாலும், கண்ணியமிக்கப் பொறுமையாலும், 'வானதூதர்' என்றும், 'மறைசாட்சி' என்றும் அழைக்கப்பட்ட புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இளமையில் கொடிய நோயுற்றபோது, புனித சவேரியாருக்கு வேண்டுதல் செய்து குணமடைந்ததால், துறவிகளின் ஆடை அணிந்து வாழ்ந்த புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பதினைந்து வயதிலே உலகைத் துறந்து, அன்னையையும் சுற்றத்தார் நண்பர்களையும் விட்டு, இயேசு சபையில் நுழைந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உள்ளத்தின் தாழ்மையினாலும் உடலின் ஒறுத்தலினாலும் பெரியோருக்குக் காட்டிய கீழ்ப்படிதலினாலும் ஞான வாழ்விலே உயர்ந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பாரத நாட்டிலே மறைபரப்ப இறைவன் அழைப்பதை உணர்ந்ததும் அன்னையின் கண்ணீரையோ, அரசரின் வற்புறுத்தலையோ பொருட்படுத்தாமல், மனத்திடன் காட்டினவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: 1673-ல்; பாய்மரக் கப்பலில் பயணமாகி, பாரத நாட்டிற்கு வரும் வழியில், புயலிலும் நோயிலும் பயணிகள் அவதியுற்றபோது, செபத்தாலும், புன்முறுவல் மாறாத பணியாலும் அனைவரையும் கவர்ந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவா நகரிலே பல்வேறு பணிகளைப் பாங்குடன் செய்ததால் இரண்டாம் சவேரியார் என்ற சிறப்புப் பெயர் பெற்றவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: 14 ஆண்டுகளாக மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கோல்கொண்டா ஆகிய ஐந்து பகுதிகளிலும் ஆர்வத்துடன் திருமறையைப் போதித்த திருத்தூதுவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தமிழ்நாட்டின் மாண்புமிக்க அப்போஸ்தலரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: வேதியர்களைப் பக்குவமாகத் தயாரித்தும் ஊக்குவித்தும் அவர்கள் வழியாகத் திருமறையை நிலைநாட்டியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பல புதுமைகளால் இயேசுவின் திவ்விய போதகத்தைத் துலங்கச் செய்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கிறிஸ்தவர்களைத் திடப்படுத்தவும், ஏனையோரை மனம் திருப்பவும் சொல்லிலடங்காத் துணிவோடும் துயர்களோடும் நாடெங்கும் விசாரணைக் குருவாய் அலைந்து பணியாற்றியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்:: குறையாத பக்தியும், குன்றாத விசுவாசமும், சலியாத தயையும், மெலியாத தவமும் கொண்டு நற்பண்புகளின் குன்றாக விளங்கியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துன்பங்களைத் துணிவோடு எதிர்கொண்டு, துயருறும்போது எல்லையற்ற பொறுமை காட்டியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தாழ்ந்தவர்கள் எனக் கருதப்பட்ட மக்களுக்கு அருட்பணி ஆற்றுவதற்காக, பண்டார சுவாமிகள் என்ற நிலையைத் தேர்ந்து கொண்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பகைவர் உம்மைக் கொல்ல பலமுறை முயன்றாலும் இறையருளால் பலமுறை தப்பியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறைசாட்சி முடி அடைய வேண்டுமென்ற ஆவலால் பற்றியெரிந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சண்டாளர் கையில் பிடிபட்டு மங்கலம், காளையார் கோவில், பாகணி முதலிய இடங்களில் நிந்தையையும், அடிமிதிகளையும் அனுபவித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உம்முடன் வாதிக்கப்பட்ட சிலுவை நாயக்கர் வேதியரின் தெறித்து விழுந்த கண்ணை புதுமையால் குணப்படுத்தியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உமது அருள் வாக்கிலே வியப்புக் கொண்ட சேதுபதி அரசரால் வியப்புறுவிதமாய் விடுதலையாக்கப்பட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உயர் பொறுப்பிற்காக 1686-ஆம் ஆண்டு இறுதியில் ஐரோப்பாவிற்கு திரும்பியபோது அரசராலும் பெரியோர்களாலும் மிகுந்த ஆர்வத்தோடு வரவேற்கப்பட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: எத்தனையோ தடைகளையெல்லாம் பொறுமையுடன் அகற்றி, மகிழ்வுடன் பயனமாகி, மீண்டும் எங்கள் நாட்டுக்கு 1690-ல் வந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சில மாதங்களுக்குள்ளாகவே மறவ நாட்டில் திரளான மக்களுக்கு மெஞ்ஞானத்தை ஊட்டியவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புகழ்பெற்ற தடியத்தேவரையும், இன்னும் பல பெருமக்களையும் திருச்சபையில் சேர்த்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறவ நாட்டின் மங்காத மாணிக்கமான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இயேசுவைப் பின்பற்றி, உம்மைப் பிடிக்க வந்தவர்களிடம் உம்மையே கையளித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கொடுமையாய்க் கட்டுண்டு, நெடும் பயணத்தில் மானபங்கமாய் இழுக்கப்பட்டு, இருண்ட சிறையில் அடைக்கப்பட்டு துயருற்றவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மாந்திரியக்காரரின் வித்தை சகுனங்களையெல்லாம் திரு விசுவாசத்தால் முறியடித்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஓரியூரிலே 1693, பெப்ருவரி 4-ஆம் தேதி, புதன்கிழமை நண்பகல் வேளையிலே, எண்ணற்ற மக்களின் முன்னிலையிலே மறைசாட்சியாகக் கொல்லப்பட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மகிழ்வோடும் ஆவலோடும் இயேசுவுக்காய் உயிரைத் தந்தவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அஞ்சாத நெஞ்சத்தினராய் கொலைஞன் முன் தலை நீட்டி முழந்தாளிட்டவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தம் சடலத்தைக் காட்டு விலங்குகளுக்கு உணவாக்கிய புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தலைவெட்டுண்டதும் வேதாளைப் பங்குக்குரு அருள்தந்தை ஜான்-டி கோஸ்டாவுக்கு கனவில் தோன்றி, வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியவராகக் காட்சி தந்த புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: விண்ணரசில் ஒளிமிக்க மறைச்சாட்சிகள் நடுவில் முடிசூடி நிற்பவரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உம்மை மன்றாடுவோருக்கு எண்ணிறந்த புதுமைகளைச் செய்யும் வள்ளலான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஆன்மப் பிணிகளையும், உடல்நோய்களையும் அறவேயொழிக்கும் நல்ல வைத்தியரான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மறைப்போதகர்களுக்கு முன்மாதிரியான புனித அருளானந்தரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: இயேசு கிறிஸ்துவின் திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக,
எல்: புனித அருளானந்தர் அடிகளாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: செபிப்போமாக:
மனிதருக்கு மனவுறுதி அளிக்கும் இறைவா! மறைச்சாட்சியான புனித அருளானந்தருக்குத் தளராத் திடனையும் விடாமுயற்சியையும் கொடுத்து, உமது நற்செய்தியை எம் மக்களுக்கு அறிவிக்கச் செய்தீர். அவர் இரத்தம் சிந்தி நாட்டிய விசுவாச சாட்சியத்தை நாங்கள் நன்றியோடு நினைவு கூர்வதுடன், கிறிஸ்துவின் நற்செய்தியை சுவைத்து மகிழவும் எங்களைச் சுற்றி வாழும் மக்களுக்கு அதை மகிழ்வோடுஅறிவிக்கவும் அருள்தாரும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்.
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித சூசையப்பரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அந்தோணியாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித தோமா அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவாவின் பெனவ்லிம் எனும் ஊரில் பிறந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கிறிஸ்டோபர் வாஸ் மரியா மிராண்டா ஆகிய பெற்றோரிடம் ஞான வாழ்க்கையைப் பழகிப் பயிற்சி பெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சிறுவனாயிருந்த காலம் முதல் “சின்னப் புனிதர்” என அன்புப் பெயரால் அழைக்கப்பட்ட புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இலங்கையின் கத்தோலிக்க விளக்கு அணையாது காக்கத் தேவ விருப்பத்தின்படி குருவாக அழைக்கப்பட்ட புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கர்நாடக பிரதேசம் முழுவதும் மறை மணம் பரவச் செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இலங்கையின் கத்தோலிக்கர் வேத கலாபனையில் கைவிடப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த துயரத்துக்குள்ளான புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவைக்குச் சென்று ஓரட்டோறியன் சபையை மீண்டும் உயிர் பெறச் செய்து, உயரிய தலைவராக மதிக்கப்பட வரம்பெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துன்புறும் இலங்கைத் திருச்சபைக்கு உதவ வேறு குருக்கள் யாரும் முன்வராத போதும், அப்பணியை நிறைவேற்ற உறுதியுடன் முன்வந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அடிமைபோல் பணிபுரிய மாசற்ற தேவதாயின் முன் தம்மைத் தாமே அர்பணித்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: வாணிபக் கூலியாள் போல மாறுவேடத்தில் படகேறித் துன்புறும் கத்தோலிக்கரைத் தேடி மன்னார் கரையை வந்தடைந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: ஒல்லாந்தர் ஆட்சியில் துன்ப துயரங்களைப் பாராமல் சில்லாலைக் கிராமத்தினை மையமாகக் கொண்டு மறை மணம் பரப்ப ஆரம்பித்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உளவாளியென இரண்டாம் விமலதர்ம சூரிய மன்னனின் கட்டளைப்படி வாவுட கிராமத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: மலைநாடு முழுவதும் ஏற்பட்ட பெருவறட்சியின் போது, அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி, உறுதியான விசுவாசத்துடன், செப வல்லமையால் மழை பெய்வித்துப் புதுமை புரிந்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இருண்ட கானகங்களின் ஊடாக கால்நடையாகச் செல்கையில் எதிர்ப்பட்ட கொடிய விஷப் பாம்புகளையும், பயங்கர மிருகங்களையும், சிலுவையின் பலத்தால் விலகி ஓடச் செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கல்கமுவை, வாகக்கோட்டை ஆகிய பிரதேசங்களுக்குச் சிதறிச் சென்ற கத்தோலிக்க மக்களைத் தேடிச் சென்று, அவர்களை இறை விசுவாசத்தில் உறுதிபெறச் செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தினமும் செபமாலை சொல்வதனால் தேவதாயின் மட்டில் மிகுந்த பக்தியுள்ளவராக எமக்கு வழிகாட்டும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: துக்க, வேதனைகள், துயரங்களைத் தயவுள்ள தந்தை போல் செவிகொடுத்து, அவர்களை ஆறுதல்படுத்திய புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: இறையன்பை அனுபவித்துத் தம் எளிமையான வாழ்வின் வழிகாட்டல் மூலமாக எல்லோரையும் கிறிஸ்துவில் ஒன்று சேர்த்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: பிள்ளைப் பேறற்ற துயரத்தால் மனவேதனைக்கு உள்ளான தம்பதியினருக்காக இறைவனிடம் வேண்டி, அவர்களுக்கு உதவி பெற்றுக் கொடுத்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கண்டியை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் மீண்டும் மீண்டும் நடந்து, மக்களுக்குப் பெரும் சேவை செய்த புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: அப்போஸ்தலிக்க சேவையினில் ஈடுபடும் இல்லற வாசிகளுக்கு முன்மாதிரியாயிருந்து, இல்லற வாழ்வு மூலமும் திருச்சபையை வளமூட்டிய புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கஷ்டமான பிரயாணங்களில் ஈடுபடும் யாராவது உம் பாதுகாப்பை வேண்டிய போது, பயணம் முடியும் வரை சகல அபாயாங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்ற வரம் பெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: வாழ்வின்போது செய்ய முடியாதவைகளை, மரணத்தின் பின் செய்ய முடியாதென்பதைத் தம்மைப் பின் தொடர்ந்தவர்களுக்குத் தம் மரணப் படுக்கையில் வெளிப்படுத்திய புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: கோவாவில் பிறந்து இலங்கையில் திருத்தூதராகாப் பேறுபெற்ற புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: சகோதர அன்பிலும், தேவ தயவிலும் காலத்தைச் செலவிட்டு, இறை சமூகத்தில் வீற்றிருந்து எம் எல்லோருக்கும் மோட்ச உரிமை கிடைக்க வழியாயிருக்கும் புனித ஜோசப் வாஸ் அடிகளாரே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குகளுக்கு நாங்கள் பாத்திரமாய் இருக்கத்தக்கதாக.
அனைவரும்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முதல்வர்: செபிப்போமாக:
மிகவும் இரக்கம் நிறைந்த தந்தையே, புனித ஜோசப் வாஸ் அடிகளாரை எமக்குத் தந்தமைக்காக உம்மைப் போற்றி நன்றி கூறுகின்றோம். எம் முன்னோரின் விசுவாசத்துக்கு மாபெரும் இடர் வந்தபோது, அவர்களைக் காத்துத் தைரியமூட்டிய அவருடைய வேண்டுதலால், இன்று எம் விசுவாசத்துக்கு வரும் எல்லாவித இடர்களிலும், இருளிலுமிருந்து எம்மைப் பாதுகாத்தருள மன்றாடுகின்றோம். இதை எம் ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்துவின் வழியாக எமக்குப் பெற்றுத் தந்தருளும். ஆமென்.
புனித தேவசகாயம் அடிகளாருக்கு மன்றாட்டு மாலை:
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
எல்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முத: ஆண்டவரே இரக்கமாயிரும்!
எல்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முத: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
எல்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முத: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: உலகத்தை மீட்டத் திருமகனாகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: தூய ஆவியாராகிய இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தூய மரியே, இறைவனின் தாயே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அன்னை மரியாவின் கணவரான புனித யோசேப்பே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மறைசாட்சிகளுக்கு அரசியான தூய மரியே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மறைசாட்சியான புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இந்தியாவின் முதல் பொதுநிலையினரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: பன்மொழி, கலைகளில் தேர்ச்சி பெற்றவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனை காரியக்காரராக விளங்கிய மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: குடும்பத்தில் பல இழப்புகள் நேரிட்ட போது மனம் நொந்து ஆறுதல் இன்றித் தவித்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உமது ஆன்ம நண்பரான படைத்தளபதி டிலனாய் வழியாக ஆறுதலைடந்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: நீதிமானாகிய யோபுவின் துன்ப வாழ்வையும், இறுதியில் இறைவன் அவரை மீட்டு ஆசீர்வதித்ததையும் அறிந்து திடம் பெற்றவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இந்த உலகம், அதில் கிடைக்கும் பட்டம், பதவி, பெயர், புகழ் அனைத்தும் நிலையற்றவை என்ற உண்மையை உணர்ந்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இயேசு கிறிஸ்துவை தனது மீட்பராக ஏற்று வடக்கன்குளம் சென்று அருள்தந்தை புத்தாரியிடம் திருமுழுக்குப் பெற்றவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இயேசுவே ஆண்டவர், அவரே நம் மீட்பர், நமக்கு விண்ணக வாழ்வைத் தருபவர் என்பதை ஏற்றுக் கொண்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தன் மனைவி ஞானப்பூவுக்கு அருளுரை வழங்கி அவர்களும் திருமுழுக்குப் பெற்று திருமறையில் சேர்ந்து வாழ வழிசெய்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித செபஸ்தியார் கிறிஸ்துவுக்காக உயிர் விட்டு மறைசாட்சி முடி பெற்றது போல, தனக்கும் மறைசாட்சி முடி கிடைக்கத் தன்னுயிரைக் கொடுக்க உறுதி பூண்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கிறிஸ்துவையும், கிறிஸ்துவ மதத்தையும் விட்டுவிட்டு, மீண்டும் முன்னால் வழிபட்ட அன்னிய தேவர்களை வணங்கும்படி, அரசரால் கட்டாயப்படுத்தப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மன்னர் வணங்கிய அந்நிய தேவர்களை வணங்க மறுத்ததால், மன்னனின் கோபத்துக்கு ஆளானவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கிறிஸ்துவ மதத்தை விட்டுவிட மறுத்ததால் பட்டம், பதவியைத் துறந்து, கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு பல நிந்தனைகளுக்கு ஆளானவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அதிகாரிகளால் நிந்திக்கப்பட்டு, கொடிய தண்டனைகளுக்கு ஆளாக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: சாட்டைகளாலும், தடிகளாலும் இரக்கமின்றி, உடல் கிழிய அடிக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உடலில் ஏற்பட்ட காயங்களில் மிளகுப்பொடி தேய்த்து, அதிக வேதனைகளுக்கு ஆளாக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, கைகால்களில் விலங்கு பூட்டப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: எருமை மேல் ஏற்றி, எருக்கம் பூமாலை அணிவித்து, ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உடம்பெல்லாம் முட்களால் கீறி, அவைகளில் மிளகுப்பொடி பூசி, கைகால் கட்டி, சுடு மணலில் உருட்டி கொடுமைப்படுத்தப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புலியூர்க்குறிச்சியில் கைகால்கள் கட்டி, கடுமையான வெயிலில் சுடுகின்ற பாறை மீது வெகு நேரம் நிறுத்தி துன்புறுத்தப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: பெருவிளையில் பட்டுப்போன வேப்ப மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் ஏழு மாதங்கள் இரவு, பகல், வெயில், மழை, காற்று போன்ற இயற்கைச் சீற்றங்களால் துன்பப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கட்டி வைக்கப்பட்டிருந்த பட்ட வேப்ப மரம், அற்புதமாகத் தளிர்விட்டு, தமக்கு நிழல் தந்த ஆறுதல் பெற்று, ஆண்டவரை போற்றிப் புகழ்ந்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தாகத்தால் துவண்டு போன போது சேவகர்கள் தண்ணீர் கொடுக்காததால் ‘இறைவா தாகம் தீர்க்க தண்ணீர் தாரும்’ என்று வேண்டி, கை முட்டியால் பாறையை இடிக்க, அற்புதமாய் பாறை பிளந்து பாய்ந்தோடிய தண்ணீரால் தாமும், பிறரும் தாகம் தீர்க்க வழி செய்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தம் உடல் காயங்கள் கடவுள் அருளால் ஆறி குணமடைந்து ஆண்டவரில் மகிழ்ச்சியடைந்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: ஆராச்சாரருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு செபித்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உயிரிழந்த ஆடு அற்புதமாக உயிர்பெற செபித்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மூடநம்பிக்கைகளையும், மந்திர மாயைகளையும் விட்டுவிட்டு, உலகெல்லாம் படைத்துக் காப்பாற்றுகின்ற உண்மைக் கடவுளை வணங்க வேண்டுமென்று மக்களுக்குப் போதித்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தம்மை சோதிக்க வந்த சாத்தானை, இயேசுவின் பெயரைச் சொல்லி துரத்தியவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உலக ஆட்சியை விட்டு விட்டு, இறை ஆட்சியை தேர்ந்து தெளிந்த மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: தம்மைக் காண வந்த மக்களுக்கு நற்செய்தியைத் தெளிவாகப் போதித்து, நம்பிக்கையை வளர்த்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இவர் மதத் துரோகி, அந்தணரையும், மன்னனையும் பழித்துரைத்தவர் என தம் மேல் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு, மன்னரால் மரண தீர்ப்பிற்கு ஆளாக்கப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: மன்னனின் தீர்ப்பின்படி துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல, காற்றாடி மலை உச்சிக்குக் கிறாத்தடியில் சுமந்து செல்லப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இறப்பிற்கு முன் முட்டூன்றி செபித்து, தமது ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்து நல்ல மரணத்திற்குத் தயாரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: ஐந்து குண்டுகள் உடலில் பாய்ந்து மரணம் அடைந்த போது, தம் உயிரை இறைவனிடம் ஒப்படைத்தவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: உம்மிடம் வேண்டிக்கொள்ளும் அனைவருக்கும் உடல் உள்ள நலன்களைப் பெற்றுத் தருபவரான மறைசாட்சி புனித தேவசகாயம் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அசிசியின் புனித பிரான்சிசே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: அசிசியின் புனித கிளாரம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: பதுவையின் புனித அந்தோணியாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித அருளானந்தர் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித குரியாகோஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித தோமா அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: கொல்கொத்தாவின் புனித அன்னை தெரேசம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித அல்போன்ஸ் அம்மாளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முத: இறைவனின் எல்லா புனிதர்களே, புனிதைகளே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: இறைவனின் எல்லா வான தூதர்களே...
எல்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முத: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே…
எல்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முத: இயேசு கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும் படியாக...
எல்: இறைவனின் மறைசாட்சியான புனித தேவசகாயம் அடிகளாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
முத: மன்றாடுவோமாக! எங்கள் அன்பு தந்தையே இறைவா, மறைசாட்சியான புனித தேவசகாயம் அடிகளார், பல்வேறு துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாகி, இறுதியில் சுடப்பட்டு, இரத்தம் சிந்தி, மரித்து அவர் உம் மீது கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தத் திருவுளமானீர். அவரிடம் வேண்டிக்கொள்ளும் உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் சமர்பிக்கும் மன்றாட்டுகளை உமது திருவுளப்படி எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்: ஆமென்.
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே...
முதல்வர்: புனித சூசையப்பரே
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே
முதல்வர்: புனித அந்தோணியாரே
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே
முதல்வர்: புனித தோமா அடிகளாரே
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே
முதல்வர்: அசிசி நகரில் செல்வக் குடும்பத்தில் பிறந்தவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: உல்லாச இளைஞராக வாழ்ந்து வந்தபோது, நோயில் விழவே, உலக வாழ்வின் வெறுமையை உணர்ந்து முற்றும் மாறியவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: ஏழைகளின் நண்பராய், அப்போஸ்தலர்களின் தோழராய், ஒப்பற்ற தூயவராய் வாழ்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: சிலுவை துயரையும் அவமானத்தையும் உலக செல்வத்துக்கு மேலாகத் தேர்ந்து கொண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: ஊனியல்புக்கு இறந்தவராய், ஆவிக்குரிய வாழ்வு வாழ்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: துன்புறும் தொழுநோயாளிகளை கட்டியணைத்த புனித பிரான்சீசே…
முதல்வர்: உறவு துறப்பதும் துறவு ஏற்பதும் விண்ணகத் திறவுகோல் என கண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: தனிமைச் செபத்திலும், தியானத்திலும், தவத்திலும் இறைவனின் திருவுளத்தைத் தேடி நின்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: இடிந்துவிழும் என் இல்லத்தைப் பழுது பார்’! என்ற குரல் கேட்டு, புனித தமியான் ஆலயத்தைப் புதுப்பித்தவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: அமைதியையும் அன்பையும் போதித்து, அவற்றையே ஆசியாக வழங்கிய புனித பிரான்சீசே…
முதல்வர்: 27 வயதிலே வறுமையை உம் கோமகனாகத் தேர்ந்துகொண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: பையிலோ கையிலோ காசின்றி, இரந்துண்டு இறைவாக்கை அறிவிக்கத் துணிந்தவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: போதிப்பதற்காகவே திருத்தொண்டர் திருநிலையை ஏற்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: மறுகிறிஸ்து என்று சரியாகப் புகழப்பட்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: குருத்துவத்தின் மீது கொண்டிருந்த ஆழ்ந்த மதிப்பை முன்னிட்டு, குருவாக விரும்பாமல் திருத்தொண்டராகவே வாழ்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: போர்சியுங்குலா சிற்றாலயத்தை இதயம் கவர்ந்த இல்லமாக்கிக் கொண்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: மண்ணுலகிலேயே விண்ணுலகைச் சுவைத்த புனித பிரான்சீசே…
முதல்வர்: தனிமையாக ஒதுங்கித் தவமும் தியானமுமாகப் பல நாள்களைக் கழித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: படைப்புப் பொருள்களில் எல்லாம் கடவுளின் இறைமையைக் கண்டுணர்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: அனைத்தையும் உடன் பிறப்பாகக் கண்ட அரிய மனிதரான புனித பிரான்சீசே…
முதல்வர்: புனித கிளாராமாவுக்கும் அவர் தோழியருக்கும் ஏழை கிளாராம்மாள் சபை என்ற பிரான்சிஸ்கன் இரண்டாம் சபையை ஏற்படுத்திய புனித பிரான்சீசே…
முதல்வர்: தவ வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பிய பொதுநிலையினருக்கும் ஒழுங்குமுறையை வகுத்துத் தந்து பொதுநிலை பிரான்சிஸ்கன் சபையை நிறுவிய புனித பிரான்சீசே…
முதல்வர்: குபியோ சிற்றூரைக் கலங்கடித்த ஓநாய்க்குப் போதித்து, அதைச் சாந்தப்படுத்திய புனித பிரான்சீசே…
முதல்வர்: எகிப்துக்குப் பயணமாகி அங்கே சுல்தானுக்கு நற்செய்தி அறிவித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: புனித நாட்டுக்குத் திருப்பயணமாகி, திருத்தலங்களிலே கிறிஸ்துவின் பேரன்பை எண்ணி உருகிய புனித பிரான்சீசே…
முதல்வர்: சிலுவைப்பாதை பக்தி முயற்சியை பரவச் செய்ய முன்னணியில் நின்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: ‘நீர் இச்சபையின் ஒளியாய்த் துலங்குவீர்!’ என்று புனித அந்தோனியாரை ஆசீர்வதித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: உயிரோடு இருக்கும் போது உம் சபையில் 5000 துறவிகளை காணப் பேறுபெற்றவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் மகத்தான ஆன்மீகப் புரட்சியை விளைவித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: முள் தரையிலும் கடும் பனியிலும் விரும்பி உறங்கினவரான புனித பிரான்சீசே…
முதல்வர்: ஏழ்மை தான் விண்ணுக்கு வழி, தாழ்ச்சிக்குச் செவிலி, நிறைவுக்கு வேர் என்று போதித்த புனித பிரான்சீசே…
முதல்வர்: அல்வேர்னோ மலைமுகட்டில் ஐந்து காய வரம் பெற்ற புனித பிரான்சீசே…
முதல்வர்: போர்சயுங்குலா சிற்றாலயத்தில், குளிர்ந்த தரையில் படுத்து தன் நாற்பத்து நான்காம் வயதில் ஆண்டவரில் கண்ணயர்ந்த புனித பிரான்சீசே…
முதல்வர்: இறந்த இரண்டே ஆண்டுகளில் புனிதர் என அறிவிக்கப்பட்ட புனித பிரான்சீசே…
முதல்வர்: சுற்றுப்புறச் சூழலைப் பேணுவதில் பாதுகாவலரான புனித பிரான்சீசே…
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்: செபிப்போமாக: அன்புமிக்க இறைவா, புனித பிரான்சிஸ் அசிசியார் ஏழ்மையாலும் தாழ்ச்சியாலும் கிறிஸ்துவின் சாயலைத் தாங்கச் செய்தருளினீரே; இப்புனிதரின் வழியில் நடந்து, உம் திருமகனைப் பின்பற்றி மகிழ்ச்சியுடன் அன்பு வாழ்க்கை நடத்தவும், உம்மோடு ஒன்றித்திருக்கவும் எங்களுக்கு அருள்வீராக. எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
அனைவரும்: கிறிஸ்துவே இரக்கமாயிரும்!
முதல்வர்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
அனைவரும்: ஆண்டவரே இரக்கமாயிரும்!
முதல்வர்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அனைவரும்: கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டை நன்றாக கேட்டருளும்.
முதல்வர்: விண்ணகத்தில் இருக்கும் தந்தையாகிய இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
முதல்வர்: உலகத்தை மீட்ட மகனாகிய இறைவா.
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
முதல்வர்: தூய ஆவியாராகிய இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
முதல்வர்: மூவொரு கடவுளாய் இருக்கிற ஒரே இறைவா...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி!
உங்கள் பதில்: எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
முதல்வர்: தூய மரியே, இறைவனின் தாயே
முதல்வர்: புனித சூசையப்பரே
முதல்வர்: அசிசியின் புனித பிரான்சிஸ்குவே
முதல்வர்: அசிசியின் புனித கிளாரம்மாளே
முதல்வர்: புனித அந்தோணியாரே
முதல்வர்: புனித தேவசகாயம் அடிகளாரே
முதல்வர்: புனித ஜோசப் வாஸ் அடிகளாரே
முதல்வர்: புனித அருளானந்தர் அடிகளாரே
முதல்வர்: புனித கூரியாகோஸ் அடிகளாரே
முதல்வர்: புனித தோமா அடிகளாரே
முதல்வர்: புனித அல்போன்சம்மாளே
முதல்வர்: புனித அன்னை தெரேசம்மாளே
முதல்வர்: புனித கார்லோ அகுடிஸ் அடிகளாரே
முதல்வர்: அனைத்துலகம் படைக்குமுன்னே இறைவனால் தெரிந்து கொள்ளப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: இன்ப வனத்திலே முதல் மனிதருக்கு அறிவிக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: பாவமுள்ள இருளை அகற்றுகிற ஞான ஒளியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உதித்தெழும் விண்மீன் என இறைவாக்கினரால் உரைக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: மண்ணுலகிற்குப் பலன் விளைவிக்கும் மேகமென்றும் சொல்லப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: நன்மைத்தனத்துக்குத் தகுதியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: முதுபெரும் தந்தையரால் புனிதை என உரைக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: சென்மப் பாவமின்றி உற்பவித்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அகங்காரமுள்ள பசாசின் தலையை மிதித்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: புனிதர்களான அன்னம்மாள் சுவக்கீன் இடமாய் பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: முதிர் வயதான தாய் தகப்பனிடத்திலிருந்து பிறந்தவரான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அவர்களுடைய வேண்டுதலாலும் அறச்செயல்களாலும் பிறந்தவரான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அனைத்து வானத்தூதர், புனிதர்களைவிட மிகுந்த ஒளியோடே பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: படைப்புப் பொருள்களிலேயே அதிக அறிவோடு பிறந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: திருவருட் கொழுந்தான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: அறநெறியிலே நிறைவுடனே நடந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உம்முடைய பிறப்பைக் கொண்டு விண்ணுலகோருக்கு மகிழ்ச்சி வருவித்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: நீர் பிறந்தவுடனே தந்தைக்குக் காணிக்கையாக ஒப்புக் கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: மிகுந்த மகிமையுள்ள மரியா என்னும் பெயர் அடைந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: மூன்று வயதிலே கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: கன்னிமையைத் தேர்ந்து கொண்ட புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: கன்னியர் மடத்தில் இருக்கிறபோது அனைவருக்கும் நன்மாதிரிகையாய் நடந்த புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: நோயாளிகளுடைய வேதனையை அகற்றுகிற புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உம்மை நம்பினவர்களை ஒரு போதும் கைவிடாத கருணைத் தாயாகிய புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உம்மை நம்பினவர்களை ஒருபோதும் கைவிடாத பேருபகாரியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: புனிதர்கள் அனைவருக்கும் விண்ணுலக முடியான புனித ஆரோக்கிய அன்னையே...
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்!
முதல்வர்: உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே...
அனைவரும்: எங்கள் மேல் இரக்கமாயிரும்!
முதல்வர்:
செபிப்போமாக
அன்பே உருவான இறைவா, உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவின் அன்னையை எங்களுக்கு ஆரோக்கிய அன்னையாக அளித்து, அந்த அன்னையை அண்டி வரும் மக்கள் எல்லாருக்கும் நீர் செய்து வருகின்ற அனைத்து நன்மைகளுக்காகவும் நாங்கள் நன்றியோடு உம்மைப் புகழ்கின்றோம். அன்னையின் அருட்காவலைத் தேடி வருகின்ற நாங்கள், அவர் எங்களுக்குக் கூறியபடி, உம் திருமகன் இயேசு கிறிஸ்து சொல்வதெல்லாம் செய்திட உதவி புரிந்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.- ஆமென்.