மாண்புயர் இவ்வருள் அனுமானத்தை
தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்.
பழைய நியம முறைகள் அனைத்தும்
இனி மறைந்து முடிவு பெறுக!
புதிய நியம முறைகள் வருக
புலன்களாலே மனிதன் இதனை
அறிய இயலாக் குறையை நீக்கி
விசுவாசத்தின் உதவி பெறுக!
பிதா அவர்க்கும் சுதன் அவர்க்கும்
புகழ்ச்சியோடு வெற்றி ஆர்ப்பும்
மீட்பின் பெருமை மகிமையோடு
வலிமை வாழ்த்து யாவுமாக
இருவரிடமாய் வருகின்றவராம்
தூய ஆவியானவருக்கும்
அளவில்லாத சமபுகழ்ச்சி
என்றென்றுமே உண்டாகுக. -ஆமென்
குரு: பரலோக அப்பத்தை அவர்களுக்குக் கொடுத்தருளினீர்
எல்லோரும்: அதில் சகல மதுரவின்பமும் உண்டாயிருந்தது
குரு: செபிப்போமாக
இறைவா, இந்த வியப்புக்குரிய திருவருட்சாதனத்திலே உம்முடைய திருப்பாடுகளின் நினைவை எங்களுக்கு விட்டு சென்றீர். உமது திருவுடல், திருஇரத்தம் ஆகியவற்றின் மறை பொருளை வணங்கும் நாங்கள் உம்முடைய மீட்பின் பலனை இடைவிடாமல் அனுபவிக்க அருள் புரியும். தந்தையாகிய இறைவனோடு பரிசுத்த ஆவியின் ஜக்கியத்தில் என்றென்றும் ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
தேவ துதிகள்
சர்வேசுரன் - துதிக்கப்படுபவாராக!
அவருடைய பரிசுத்த நாமம் - துதிக்கப்படுவதாக!
மெய்யான தேவனும் மெய்யான மனிதனுமான இயேசுகிறிஸ்து நாதர் - துதிக்கப்படுவராக!
இயேசுவின் திருநாமம் - துதிக்கப்படுவதாக!
அவருடைய மிகவும் பரிசுத்த இருதயம் - துதிக்கப்படுவதாக!
அவருடைய விலையில்லா திரு இரத்தம் - துதிக்கப்படுவதாக!
பீடத்தின் மிகவும் பரிசுத்த தேவதிரவிய அனுமானத்தில் இயேசுநாதர் - துதிக்கப்படுவராக!
தேற்றுகிறவராகிய பரிசுத்த ஆவி - துதிக்கப்படுவாராக!
சர்வேசுரனுடைய தாயாகிய அதிபரிசுத்த மரியம்மாள் - துதிக்கப்படுவாளாக!
அவருடைய பரிசுத்த மாசில்லாத உற்பவம் - துதிக்கப்படுவதாக!
அவளுடைய மகிமை நிறை ஆரோபணம் - துதிக்கப்படுவதாக!
கன்னியும் தாயுமான மரியம்மாளின் பரிசுத்த நாமம் - துதிக்கப்படுவதாக!
அவளுடைய மிக்க விரத்த பத்தாவாகிய புனித சூசையப்பர் - துதிக்கப்படுவதாக!
தம்முடைய சம்மனசுக்களிடத்திலும், புனிதர்களிடத்திலும் சர்வேசுரன் - துதிக்கப்படுவதாக!
நித்திய ஸ்துதிக்குரிய
பரிசுத்த நற்கருணைக்கு
பக்தியாய் ஆராதனை
எத்திசையும் புரிவோம். (3)