08-MS, முடியொன்றி மூவுலகங்களும், PALLANDU
பெரியாழ்வார்
************************************************
முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்று அருள என்று அவன் பின் தொடர்ந்த
முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்று அருள என்று அவன் பின் தொடர்ந்த
படி இல் குணத்து , பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானை பாடிப்பற !
அயோத்தியர் கோமானை பாடிப்பற !
( செஞ்சுருட்டி )
-----------------------------------------------------------------------------------
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன்
நீள் முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற !
தூமணி வண்ணனை பாடிப்பற!
( புன்னாகவராளி )
-----------------------------------------------------------------------------------------
மாயச்சகடம் உதைத்து மருது இருத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து
வேயில் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினை பாடிப்பற !
ஆநிரை மேய்த்தானை பாடிப்பற!
(பெஹாக் )
-----------------------------------------------------------------------------------------
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கு நீளரசை ஈந்த
ஆரா அமுதனைப்பாடிப்பற !
அயோத்தியர் வேந்தனை பாடிப்பற !
( சிந்துபைரவி )
================================================
Dr.KALAAM has given a wonderful speech in Indian Archeology and Historical Research Conference about the Sethu Bandhanam.
( please see post- )
********************************************************************************
This pasuram is recited invariably in all vaishnavite temples.Periyalwar had participated and won a debate on who is the Supreme Para Daiva?.During the victory procession,the supreme lord and his consort came rushing seated on Garuda.On seeing the Lord ,Periyalwar got worried that such a beautiful Lord may get Drushti and does Mangalasasanam.
------------------------------------------------------------------------------------------------------------------------------