18- MS- மாலைப்பொழுதினிலே ,வண்டாடும் சோலைதனிலே
மாலைப் பொழுதினிலே ஒருநாள் ,
மலர்ப் பொழிலினிலே
கோலக் கிளிகளுடன் குயில்கள்
கொஞ்சிடும் வேளையிலே
மாலைக் குலவும் மகள் மருகன்
, மாமதி போல் முகத்தான்
வேலொன்று கையிலேந்தி என்னையே
விழுங்குவான் போல் விழித்தான் . ( செஞ்சுருட்டி)
------------------------------------------------------------------------------------------------------
நீலத் திரைக்கடல் போல் என்நெஞ்சம்
நிமிர்ந்து பொங்கிடவும்
நான் அப்புறம் நோக்கி நாணி நான்
யாரிங்கு வந்ததென்றேன்
ஆலிலை மேல் துயின்று புவனம்
அனைத்துமே அளிக்கும்
மாலின் மருமகன் யான் எனையே
வேலன் முருகன் என்பார். (பெஹாக் )
----------------------------------------------------------------------------------------------------
சந்திரன் வெண்புறும் உன் முகத்தில் ,
சஞ்சலம் தோன்றுவதேன் ?
சொந்தம் இல்லாதவளோ ? புதிதாய்
தொடர்ந்திடும் உறவோ?
முந்தைப் பிறவிகளில் உன்னை நான் ,
முறையினில் மணந்தேன்!
எந்தன் உயிரல்லவோ கண்மணி
ஏன் இந்த ஜாலம் என்றான்! (ஸிந்துபைரவி )
-------------------------------------------------------------------------------------------------
உள்ளம் உருகிடினும் உவகை
ஊற்றுப் பெருகிடினும்
கள்ளத் தனமாகக் கண்களில்
கனல் எழ விழித்தேன்.
புள்ளி மயில் வீரன் மோகனப்
புன்னகை தான் புரிந்தான்.
துள்ளி அருகில் வந்தான் ,என்கரம்
மெல்லத் தொடவும் செய்தான் ( மோஹனம் .)
----------------------------------------------------------------------------------------------------
பெண்மதிப் பேதமையால் அவன் கை
பற்றிடவும் துணிந்தேன்
கண் விழித்தே எழுந்தேன் துயரக்
கடலிலே விழுந்தேன்
வண்ண மயிலேறும் பெருமான்
வஞ்சனை ஏனோ செய்தான்
கண்கள் உறங்காவோ அத்துணைக்
கனவைக் கண்டிடேனோ! (நாதநாமக்ரியா )
****************************************************************************************
"கல்கி புனைந்திருந்த 'மாலைப் பொழுதிலிலே' பாடலும், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளித்தது. இதற்கும் எஸ்.வி. வெங்கட்ராமனே இசையத்திருந்தார். நான் நாயகியாகவும், ராதா முருகப் பெருமானாகவும் நடனமாடினோம். அன்று அது ஒரு புதிய உத்தி. வேடம் போட்டு ஆடவில்லை. தனித்தனியாக பாவம் பிடிப்பதில், அது ஒரு புதிய நாடக பாணியாக அமைந்தது. புள்ளி மயில் வீரன் மோஹனப் புன்னகை தான் புரிந்தான் என்று ராதா கள்ளமற்ற சிரிப்புச் சிரித்ததும் சபையோர் சிரித்து மகிழ்ந்தனர்."
anandi kalki in an article
************************************************************************************************
எட்டயபுரம் விழாவில் மாலைப்பொழுதினிலெ பாடலுக்கு நடனம் பற்றி கல்கியின் புதல்வி ஆனந்தியின் கட்டுரை
============================================
வண்டாடும் சோலைதனிலே
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி
கல்கி .....ஹரிகாம்போதி
வண்டாடும் சோலைதனிலே <iframe src='http://www.4shared.com/web/embed/audio/file/USYDF3ZX?type=NORMAL&widgetWidth=530&showArtwork=true&playlistHeight=0&widgetRid=1004652680176' style='overflow:hidden;height:152px;width:530px;border: 0;margin:0;'></iframe>