COM.RANADIVE ON AMBEDKAR' S DEMANDS

PRESENTED BY RSR

=================

தாழ்த்தப்பட்டோர் விடுதலை

தோழர் ரணதிவே

1945ம ஆண்டு ஜனசக்தி யில் வெளியான கட்டுரை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் , மகத்தான தலைவர்களுள் ஒருவரும், 1948ம ஆண்டில் , அகில இந்தியாவிலும் , புரட்சி இயக்கத்தை நடத்தியவருமான தோழர் . ரணதிவே அவர்கள், தலித் மக்களின் விடுதலை குறித்து எழுதிய கட்டுரை ஜனசக்தி இதழில் பிப் 1945ம ஆண்டில் வெளியிடப்பட்டது. ..இதில் உள்ள கருத்துக்கள் இன்றளவும், உண்மையாக உள்ளன.

****************************************************

காங்கிரசும் தீண்டாமையும்

1920ம் வருடம் நடந்த ஒத்துழையாமை இயக்கம் ,இந்தியாவில் உள்ள பொதுமக்களால் நடத்தப்பட்ட முதல் சுதந்திர இயக்கம். இந்தப்போராட்டத்தின் திட்டங்களில் முக்கியமான திட்டம் ,தீண்டாமை ஒழித்தல். தீண்டாமையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை ,சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்துவைத்த கௌரவம் , காந்திஜியுடையது. .

காங்கிரசும் தீண்டாமையும்

1920ம் வருடம் நடந்த ஒத்துழையாமை இயக்கம் ,இந்தியாவில் உள்ள பொதுமக்களால் நடத்தப்பட்ட முதல் சுதந்திர இயக்கம். இந்தப்போராட்டத்தின் திட்டங்களில் முக்கியமான திட்டம் ,தீண்டாமை ஒழித்தல். தீண்டாமையை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை ,சுதந்திரப் போராட்டத்துடன் இணைத்துவைத்த கௌரவம் , காந்திஜியுடையது. .


.ஒத்துழையாமை இயக்கத்தின் தலைவரான அவர் இவ்விரண்டு விஷயங்களுக்குமுள்ள தொடர்பை உணர்ந்த்திருந்தார். தேசத்தின் அரசியலில் ,தீண்டாமைப் பிரச்னையை முக்யமான பிரச்னையாக எடுத்து வைத்தவர் காந்திஜி. ..

நாகபுரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் வருடாந்தரக்கூட்டம் பிரசித்தி பெற்ற கூட்டம். அந்த மாநாட்டில்தான், காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்துவதாக முடிவு செய்தது.

அதே மாநாடுதான் , காந்திஜியின் முயற்சியால் " தீண்டாமை மிகப்பெரிய பாவம்" என்று முடிவு கூறி , பிரகடனமும் செய்தது. ..காந்திஜி , சலியாதபடி, தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டார். அவரது இடைவிடாபிரசாரம் ,கோடிக்கணக்கான இந்தியர் மனதில் ஆழ்மகப்ப் பதிந்தது. தீண்டாதவர்களின் ,சொல்லொணாத் துயர்களையும் ,அத்யாவச்யக் கோரிக்கைகளையும் இந்தியர் உணர ஆரம்பித்தனர்.

"தீண்டாமையை ஒழிக்காத வரையில் .,சுதந்திரம் வேண்டுமென்று கோருவதற்கு எவ்வித தார்மிக உரிமையும் நமக்குக் கிடையாது " என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் காந்திஜி கூறினார். ..

சுதந்த்ரத்திற்கென திரட்டப்படும் மாபெரும் பொதுஜன அணிவகுப்பில் மகத்தான ஒற்றுமையைக்கட்டும் முதல் முயற்சி 1920ல் நடந்தது. .

அதுதான் கிலாபத் கோரிக்கையும், தீண்டாதவர்கள் கோரிக்கையும், காந்திஜியும் காங்கிரசும் ஏற்றுக்கொண்டது.

சுதந்திரத்திற்கு போராடும் வீரர்களிடம் சம உரிமைகளை ஏற்றுக்கொண்ட ஒரு தேசிய ஐக்யத்தை உண்டாக்கும் முயற்சி அது. சகல விதமான சந்தேகங்KAளைைைித் தீர்த்து , சமூகத்தில் உள்ள அக்ரமங்களையும் அநீதிகளையும் களைந்தெறியச் செய்யப்பட்ட முயற்சி அது. ..தேசமெங்கும் பரந்த வகையில், மலர்ந்த 1920ம் வருடப் போராட்டத்தில் ,தீண்டாமையை ஒழிப்பது ,சுதந்திர இயக்கத்தின் பகுதி என்பதை நம் நாட்டவர் உணர்ந்தனர்

. 10 வருடங்களுக்குப்பிறகு கராச்சி காங்கிரஸ் மாநாடு கூடியது. பிரஜா உரிமைச் சாசனம் ஒன்றைத் தொகுத்தது. கிணறுகள், குளங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள் போன்ற பொதுவான இடங்கள், எல்லோருக்கும் தங்கு தடையின்றி திறந்து வைக்கப்படும் என்று பிரகனப்படுத்தியது.

இப்படி இந்த விஷயத்தை குறிப்பாக எடுத்துக் கூறுவானேன்? தீண்டாதவர்களுக்கு சுதந்திர இந்தியாவில், எவ்விதத் தடைகளும் இருக்காது என்று வாக்குறுதி அளிப்பதற்காகவே ,தேசிய இயக்கம் ,தீண்டாதவர்களுக்கு அளித்த உறுதிமொழி என்பது தெளிவு.

----------------------------------------------------------------------------

சீர்திருத்தப் போக்கு

...காங்கிரஸ் இவ்வாறு பிரகடனம் செய்திருந்த போதும், சுதந்திர இயக்கத்தில், தீண்டாதவர்களைத் திரட்ட முடியவில்லை. ஏன்? இந்தப் பிரச்னையை ,அரசியல் சம்பந்தமற்ற பிரச்னை என்ற பார்வையில்தான் கண்டனர். இது சரியல்ல.

இதை ஹிந்து சமூகதிற்குள்ளாக உள்ள பிரச்னையாக பார்த்தார்கள். சமூக சீர்திருத்தத்தில் இது ஒரு பகுதி என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள்." குருட்டு நம்பிக்கையினால் ஏற்ப்பட்ட குருட்ட்ப் பழக்க வழக்கம் தீண்டாமை ..எனவே, இந்த எண்ணம் எவ்வளவு தவறானது என்று பிரச்சாரம் செய்துவிட்டால் , சமூகத்தில் உள்ள இந்தக் கேடு ஒழிந்துவிடும் " என்று காங்கிரஸ் நினைத்தது. ...இந்தக் கண்ணோட்டத்துடன் காங்கிரஸ் திட்டமிட்டது.

காங்கிரஸ் வகுத்த திட்டம்வெகு சீக்கிரத்தில், ஒரு சமூக சீர்திருத்த சேவையாக , மனிதாபிமானத்தால் உந்தப்பட்ட ஜன சமூக சேவையாகிவிட்டது .

தீண்டாதவர்களுக்கு பள்ளிக்கூடங்கள், கல்வி வசதி, ஆலயத்திறப்பு முதலிய சில சீர்திருத்த அம்சங்களைக் கொண்ட இயக்கமாகிவிட்டது. தீண்டாமையை ஒழிக்கும் இயக்கம் , ஹரிஜன சேவா சங்கத்தின் திட்டமாக மாறி விட்டது.

காங்கிரசின் சுதந்திரப் போராட்டத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லாமல் போய்விட்டது. தீண்டாதவர்களுடைய விசேஷ கோரிக்கைகளோ, அல்லது அரசியல் கோரிக்கைகளோ , காங்கிரஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாகவில்லை.

-----------------------------------------------------------------------------------

உருப்படியான நடவடிக்கை தேவை

தீண்டாதவர் பிரச்னை என்பது ஏதோ சில ஆலயங்களில் அவர்களை அனுமதிப்பதுடன் தீர்ந்துவிடும் என்ற எண்ணம் தவறானது.

சில பொது இடங்களில், அவர்களையும் அனுமதித்துவிட்டால் ,இந்தத் தீமை ஒழிந்துவிடும் என்பதும் தவறு.

மத சம்பந்தமாக ஏற்ப்பட்டுள்ள ஏற்றத்த் தாழ்வை ஒழிப்பதினால் மட்டும் ,தீண்டாமை ஒழிக்கப்பட முடியாது.

சமூகத்தில் பல தலைமுறைகளாக தாழ்த்தப்பட்டு, சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டு வந்தவர்களின் நலன்களுக்காகப் போராடும் விஷயம் அது.

.வாழ்க்கை வசதிகள் பிடுங்கப்பட்டு ,பல்லாண்டுகளாக பொருளாதார அடிமைகளாகவே அவர்கள் வாழும்படி நேர்ந்தது.

கிராம வாழ்க்கையிலிருந்து விலக்கப்பட்டு , ஊருக்கு வெளியே குடிசைகளிலும், சேரிகளிலும், அவர்கள் வாழும்படி நேர்ந்தது.

அவர்களுடைய அந்தஸ்து , தாழ்த்தப்பட்ட அந்தஸ்து.

கிராமப் பண்ணை அடிமைகளாக வாழ்வதைத் தவிர வேறு வழியில், அவர்கள் ஜீவிப்பதற்கு இடமில்லை. ....தீண்டாதவர்களில் பெரும்பான்மையானவர்களுக்கு, சொந்தமான நிலம் கிடையாது. இதனால் அவர்கள், பிறர் தயவில் வாழ வேண்டி வந்தது.

தீண்டாதவர் என்ற அடிமைச்ச்சன்கிலி உறுதியாகிற்று. ஊருக்கு வெளியே காலங்கழித்து வந்தனர். வியாபாரத்தில் இறங்க முடியாது.

===

ஜீவனோபாயம் ஒன்றுக்கும் வழியே கிடையாது. அவர்களது ஏழ்மை , படித்து உத்தியோகம் தேட முடியாமல் செய்துவிட்டது. வியாபாரம் செய்யவோ , வேறு தொழில் செய்யவோ அவர்களுக்கு சக்தியில்லாமல் போய்விட்டது.

புராதன ஹிந்து சமூகப் பழக்க வழக்கம் ,அவர்கள் மீது பூட்டிய அடிமைத்தளைகள், நாலாபக்கங்களிலும் அவர்களைத் தடுத்துக்கொண்டு நின்றன. இந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கான விசேஷ முயற்சி செய்யப்படாவிட்டால், தீண்டாதவர்களின் அந்தஸ்து மாற முடியாது. .

..இத்தகைய போராட்டத்தை நடத்தவேண்டியது தேசிய இயக்கத்தின் பொறுப்பு.

ஹிந்து சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு நிற்கும் நிலைமையை மாற்றி அமைக்கும்படியான விசேஷ உரிமைகளையும்,சட்டங்களையும் கோருவது தேசிய இயக்கத்தின் பொறுப்பு.

வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும், கல்வி, உத்தியோகங்கள், சமூக நிர்வாகம் ஒவ்வொன்றிலும், அவர்களுக்கு சமத்துவம் ஏற்ப்படுத்தி, அவர்களுடைய சம அந்தஸ்தை உறுதியாக்கும் சட்ட திட்டங்களை ஏற்ப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வதே முக்கியமான பிரச்னை. ...

சமமான சமூக அந்தஸ்தை தீண்டாதவர்களுக்கு ஏற்ப்படுத்த வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும்?

=====

படிப்பதற்கு விசேஷ வசதிகள் ஏற்ப்படுத்த வேண்டும். உத்தியோகங்களிலும் நிர்வாகத்திலும் அவர்களுக்கு பங்களிக்க விசேஷ கவனம் செலுத்தவேண்டும்.

நில பாத்யதையில் அவர்களுக்கில்லாத உரிமைகளை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

சுருங்கச்சொன்னால், ஜீவனோபாயத்திற்கு உண்டான வசதியை , பிறர் தயவை எதிர்பார்க்காமல், வாழ்க்கை நடத்துவதற்கான தனி வசதியை, அளிக்க தனி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ..

மற்ற ஜாதியினரை எதிர்நோக்கி வாழ்க்கை நடத்தும் அடிமைத்தனத்தை அகற்ற வேண்டும்.

அவர்களுடன் சம அந்தஸ்தை அளிக்க வேண்டும்.

தீண்டாதவர்களுக்கென்று ஒரு அரசியல் ,பொருளாதார உரிமைச்சாசனம் வகுக்கப்பட வேண்டும். .

..இப்பேர்ப்பட்ட சாசனம்தான் கோடிக்கணக்கான தீண்டாதார்களையும் தேசிய இயக்கத்தின் சுதந்திர அணிக்குள் சேர்த்து வைத்திருக்கும்.

..துரதிருஷ்ட வசமாக , காங்கிரசில் உள்ள போக்கு அத்தகைய விசேஷ உரிமைகளை , தீண்டாதார்களுக்காக கோரிக்கை வைக்கும் போக்கல்ல.

சர்க்காரிடம், தேசிய கோரிக்கை கேட்ட போதெல்லாம், தீண்டாதார்களின் உரிமைகள் குறிப்பிடப்படவில்லை. .ஹிந்து சமூகத்திற்கு உள்ளே உள்ள பிரச்னை என்று கருதிகொண்டு, காங்கிரஸ் அந்த கோரிக்கைகளை குறிப்பிடாமல் விட்டுவிட்டது.

தீண்டாதார் வகுப்பிலுள்ள பாமரகளின் நம்பிக்க்யைப்பெறவில்லை. ...தங்களுக்கு விசேஷ சலுகைகள் வேண்டுமென்று யாராவது கேட்டால் அது பிற்போக்கான கோரிக்கை என கருதப்பட்டது.

அதனால் அத்தகைய கோரிக்கைகள் எதிர்க்கப்பட்டன. ..1935ம் வருடத்திய காங்கிரஸ் , லட்சக்கணக்கான தீண்டாதவர்களைத்த் தட்டி எழுப்ப முடியவில்லை.

தேசிய இயக்கம் ஆரம்பித்த போராட்டங்களில் அவர்கள் பங்கேடுக்கசெய்ய முடியவில்லை. காங்கிரஸ் மந்திரி சபைகள் ,அவர்களுடைய உரிமைகளை கவனிக்கவில்லை. தீண்டாதார் சம அந்தஸ்து பெற தேவையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஹோட்டல்களுக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.

"தீண்டாதவர் நுழையக்கூடாது" என்று போடப்பட்டிருந்த நோடிஸை ஹோட்டல்காரர்கள் எடுத்துவிடும்படி செய்தார்கள். அவ்வளவுதான். .காங்கிரசும், மந்திரி சபையும் ,

இதை நடைமுறையில் கொண்டுவர நிர்பந்தத்தை பொதுஜனக் கிளர்ச்சி மூலமாகவோ, சட்ட விதிகள் மூலமாகவோ ஏற்படுத்த ஒன்றும் செய்யவில்லை. இன்னும் பல கஷ்டங்கள் அவர்களுக்கு உண்டு. அவற்றைப் போக்குவதற்கு காங்கிரஸ் மந்திரி சபைகள் ஒன்றும் ..செய்யாததினால் ,

தீண்டாதவர்களுடைய மனக்கசப்பு அதிகரித்தது.

தீண்டாதவர்களின் இயக்கம் ,தேசிய இயக்கத்தின் வெள்ளப்பெருக்கில் ,தனியாகப்போய்விட்டது.

-----------------------

தாழ்த்தப்பட்டவர் சம்மேளனம்.

சென்னையில் 29-9-1944ல் நடந்த தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளைப் பார்ப்போம். அதைக் கவனித்தால் நம் நாட்டின் முக்கிய பகுதியான இந்த வகுப்பினருடைய அரசியல் நமக்கு விளங்கும்.

...சம்மேளனத்தின் தலைவர்கள், தீண்டாதவர்களுடைய ஆதரவு தங்களுக்குத்தான் என்று கூறுகின்றனர். இது சரியாயிருக்காது. ஆனால் இது முற்றிலும் சரியா இல்லையா என்பதல்ல பிரச்னை. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்துக்கு அவ்வகுப்பினரில் பெருவாரியானவர்களின் ஆதரவு இருக்கிறது. தீண்டாதவர்களிடையே மலர்ந்த படிப்பாளிகள்தான்

தீண்டாதவர்களுடைய தலைவர்கள். அவர்கள் என்ன கூறுகின்றனர் என்பதையே அவ்வகுப்பினர் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்த படிப்பாளிகள் அனைவரும் இந்த சம்மேளனத்தில் இருக்கின்றனர். ஆதலால், தாழ்த்தப்பட்டவர் அவர்களுடைய ஸ்தாபனமாக பலப்படுத்துவது , தீண்டாதவர்களுடைய கடமை என்பதை மறுக்க முடியாது.

சென்னையில் நடந்த சம்மேளனத்திற்கு ஆறு மாகாணங்களில் இருந்து பிரதிநிதிகள் வந்திருந்தனர். அதில் , வங்கத்திலிருந்து மாகாண மந்திரி ஒருவர். அஸ்ஸாமிலிருந்து இன்னொரு மந்திரி. ஆக இரண்டு மந்திரிகள். ஒரு பார்லிமெண்டரி காரியதரிசி. ஒன்பது சட்டசபை அங்கத்தினர்கள். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையான பிரதிநிதிகள், டாக்டர்கள், வக்கீல்கள், அல்லது பத்திரிகைத் தொழிலில் இருப்பவர்கள். ஒரே ஒருவர்தான் வர்த்தகர். ....

தேசிய காங்கிரசிலும், முஸ்லிம் லீகிலும் தலைமை வகிக்கும் பகுதியைப் போன்ற பகுதியே , இந்த சம்மேளனத்திலும் தலைமை வகிக்கின்றது என்பதையே இது காட்டுகிறது. எத்தனயோ கஷ்டங்களைத் தாண்டி தீண்டாதவர்களில், ஒரு பகுதி கல்வி கற்றனர். அவர்களுடைய வகுப்பிலிருந்து மலர்ந்த இந்த படிப்பாளிகளில் தங்களுடைய தலைவர்களை, தீண்டாதவர் கண்டுவிட்டனர். அவர்கள் காட்டும் வழியில் தங்கள் ஸ்தாபனத்தை அமைத்துகொண்டுள்ளனர். அதன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் இருக்கிறார். ..

.."நாங்கள் அரசாளும் வகுப்பாகவேண்டும் என்று விரும்புகிறோம்" என்று அம்பேத்கர் கூறினார். கோடிக்கணக்கான தீண்டாதார் மனதிலுள்ள எண்ணத்தை இந்த வாக்கியத்தின் மூலம் அம்பேத்கர் கூறிவிட்டார். இந்த விருப்பத்தை அநியாயமென்று யாரும் கூற முடியாது.

மற்ற ஜனங்களுடன், தங்களுக்கும் அரசாங்க நிர்வாகத்தில், ஒரு பங்கு உண்டு என்று நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை கொண்ட பகுதி விரும்புவது சர்வ சாதாரண ணமான ஜனநாயகக் கொள்கை

.சுதந்திர இந்தியா ஜன நாயக இந்தியாவாக இருக்க வேண்டுமென்றால், அரசாங்கத்தை நடத்துவதில், இந்த கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்களுக்கு உரித்தான பங்கை அளிக்க வேண்டும்.

-------------------------------------------------------------------------------------

தீண்டாதவர்களின் லட்சியம் 1942ம் வருடம் நாகபுரியில் கூடிய தாழ்த்தப்பட்டோர் சம்மேளன மாநாட்டுத் தீர்மானத்தில் காணலாம். சமீபத்தில் கூடிய சென்னைக் கூட்டத்தில் அது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது . அவர்கள் லட்சியத்தை அடைவதற்கு கீழ்க்கண்ட முக்கியமான கோரிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

1...நாட்டின் அரசியல் சட்டம் ,தீண்டாதவர்களிக் கலந்து வகுக்கப் படவேண்டும்....

..2.. ...இந்தியாவின் தேசிய வாழ்க்கையில் தீண்டாதவர்கள், ஒரு தனிப்பகிதியாக ஏற்றுக்கொள்ளப் படவேண்டும்.

3.....அவர்களுடைய எண்ணிக்கைக்குத் தகுந்தபடி, மத்திய நிர்வாகத்திலும், மாகாண நிர்வாகங்களிலும் ,சர்கார் உத்தியோகங்களிலும், அவர்களுக்குப் பங்களிக்கும் சட்டம் வேண்டும்.

..4 சர்கார் செலவுத்திட்டத்தில் தீண்டாதவர்களின் உய்ரதரக் கல்வி வசதிக்கு போதுமான பணம் ஒதுக்க வேண்டும். ..

.5...சர்க்கார் நிலங்களை குடிவாழ்வதற்கு தனி "செட்டில்மெண்ட் கமிஷன் " அமைக்கவேண்டும். அந்நிலங்களில் தீண்டாதவர்கள் குடிவாழ்வதற்கு குடியமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

6. ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் சட்ட சபைகளுக்கும் தீண்டாதவர்கள் பிரதிநிதிகள், தனித்தொகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.

இந்த கோரிக்கைகள், தேசிய இயக்கத்திற்கோ , ஜனநாயகத்திற்கோ விரோதமானவையா?

தீண்டாதவர்கள், சமூகத்தில், ஒரு விசேஷப் பகுதி என்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அரசியல் சட்டம் அவர்களுடைய அனுமதியுடன் வகுக்கப்படவேண்டும். என்ற கோரிக்கையை எடுத்துக்கொள்வோம்.

இந்த கோரிக்கை ஏன் போடப்பட்டிருக்கிறது? எப்படி அந்தக் கோரிக்கை வந்தது என்று பார்ப்போம். தீண்டாதவர்கள் தாழ்த்தப்பட்ட அடிமைகளாக இருப்பதால் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. காங்கிரசோ, ஹிந்து சமுதாயமோ அவர்களுடைய விசேஷ உரிமைகளுக்காகப் போராடவில்லை. அரசியல் துறையில் ஹிந்துக்கள் என்ற முறையில், ஹிந்து சமூகம் தீண்டாதவர்களுடைய நலன்களிக் காக்க முடியும் என்று கூறப்படுவதை எதிர்த்து கிளம்பியுள்ள கோரிக்ககை அது. காங்கிரஸ் அவர்கள் சார்பில் பேசுகிறது என்பதையும் ஆட்சேபிக்கிறது. பிரிட்டிஷ் சர்கார் அவர்களைக்கலக்காமல் இதர கட்சிகளுடன் ஒரு முடிவுக்கு வந்து விட்டால், தீண்டாதவர்கள்,ம் ஹிந்துக்களால் நசுக்கப் படுவார்கள் என்ற பயத்திலிருந்து இந்த கோரிக்கை கிளம்பியிருக்கிறது. அவர்களுக்கு பாதுகாப்பு விதிகள் வேண்டுமென்ற உணர்வால் ஏற்ப்படுகின்றது.

--

பல்லாண்டுகளாக அடக்கி ஒடுக்கி வைத்திருக்கப்பட்ட பகுதியை எங்கள் சமூகத்தின் தனிப்பட்ட பகுதியில்லை என்று மனச்சாட்சியுள்ள ஒருவரும் கூற முடியாது. அரசியல் வாழ்க்கையில் அவர்களுடைய தனிப்பட்ட ஸ்தாபனம் இருக்கவேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. காங்கிரஸ் அவர்களுடைய கோரிக்கைகளுக்காகத் தீவிரப் போராட்டம் செய்யவில்லை. அதனால் அவர்களுடைய இலட்சியங்களைப் போதிய அளவுக்கு தேசிய காங்கிரஸ் பிரதிபலிக்கின்றது என்று யாரும் கூற முடியாது.

-----------------------------------------------------------------------------------

சந்தேகங்கள்.

காங்கிரஸ்காரர்களுடைய மனதில் தோன்றுவது என்ன? தீண்டாதவர்களின் தலைவர்களுடைய காங்கிரஸ் எதிர்ப்பு மனப்பான்மையைக்கண்டு சந்தேகம் கொள்கின்றனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆட்சியை நீடித்துக்கொள்வதற்காக சமஸ்தான அதிபர்களை தட்டிக்கொடுப்ப்தைப்போல் தீண்டாதவர்களையும் நம்முடைய சுதந்திரத்தை எதிர்க்கும் ரிசர்வ் பட்டாளமாக பயன்படுத்தும் என்று எண்ணுகின்றனர்.

தீண்டாதவர்களை தனிப்பகுதியாக ஏற்றுக்கொண்டு , அரசியல் சட்டத்தை வகுக்க அவர்களுடைய சம்மதமும் வேண்டும் என்று ஒப்புக்கொண்டு விட்டால், அவர்கள், எவ்வித முற்போக்கான அரசியல் நடவடிக்கையையும் தடைப்படுத்தி விடுவார்கள். சுதந்திரப் பாதையின் குறுக்கே முட்டுக்கட்டையாக நிற்பார்கள் என்று அஞ்சுகிறார்கள்.

தீண்டாதவர்களுக்கு அளிக்கப்படும் இச்சலுகையை ஏகாதிபத்தியம் நம்மிடையே உள்ள பிளவுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் என்று நினைக்கிறார்கள். ஏகாதிபத்தியம் , காங்கிரஸ் எதிர்ப்பு அணியை உருவாக்கி ,ஜனநாயக அரசியல் அமைப்பையே உடைத்துவிடும் என்று எண்ணுகிறார்கள்.

இப்படி நினைப்பது, தேசிய இயக்கத்தில் உள்ள ஒரு பவீனத்தையே குறிக்கின்றது. எல்லாத் துறைகளிலும் சுதந்திரம் வேண்டும் என்று கோரும் காங்கிரஸ் கோடிக்கணக்கான அடிமைகளைக்கண்டு , அவர்களுடைய விடுதலைக கோரிக்கையைக்கண்டு , சற்றும் தயங்க வேண்டியதில்லை.

சமஸ்தான அதிபதிகள் , தங்கள் சுயநலச் சுரண்டலைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நிற்கும் சிறு கும்பல்.

ஆனால், அடிமைப்பட்டுக்கிடந்த பாமரர்களின் புரட்சி விழிப்பை பிரதிபலிக்கும் பகுதி, தீண்டாதவர் இயக்கம்.

இந்தப் பகுதியை ஜனநாயக அரசியல் சட்டத்திற்காகவும் சுதந்திரப் போராட்டத்திற்காகவும் திரட்டாமல் , ஏகாதிபத்திய பிற்போக்கு லட்சியம் கொண்ட சுயநலமிகள் ,அவர்களை உபயோகப்படுத்திக் கொள்ள விட்டுவிட்டால் , அது தேசிய இயக்கத்திற்கே ஒரு அவமானம

சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டம் , இந்த கோடிக்கணக்கான மக்களின் சம்மதத்தைப் பெற்றாக வேண்டும். ..தொழிலாளிகள் , விவசாயிகளுடைய சம்மதத்தைப் பெறவேண்டியிருப்பதைப்போலவே ,தீண்டாதாரின் சம்மதத்தையும் பெற வேண்டும். இதை யாரும் மறுக்க முடியாது. இன்றைக்கே அதை ஏற்றுக்கொள்வது - அவர்கள் ஒரு விசெஷப்பகுதி என்று ஏற்றுக்கொண்டு, ஹிந்து மெஜாரிடியினால் அவர்கள் நசுக்கப் படமாட்டார்கள் என்ற உறுதி மொழியை அளிப்பது - சுதந்திரத்திற்காக நடைபெறும் பொதுவான பேரணியில், அவர்களையும் அழைத்து இணைத்துக்கொள்வது அவசியம். நியாயத்தையும், ஜனநாயகத்தையும் முன்னிட்டு அது அவசியமாகிறது....

இப்படிசெய்வதின் மூலமே ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி முறியடிக்கப்படும்.சுதந்திர இந்தியாவில், தீண்டாமை என்ற தீமை இருக்காது. என்ற உணர்வை தீண்டாதார் இவ்வழியில் தான் உணர்வார்கள்.

கல்வித்துறையில் விசேஷ வசதிகளைக் கோருகின்றனர். உத்யோகங்களிலும் , சட்ட சபைகளிலும் ஸ்தல ஸ்தாபனங்களிலும் போதிய பங்கு வேண்டுமென்று கேட்கின்றனர். அவைகளும் நியாயமான கோரிக்கைகள்தான்.

அவைகளை ஒரு வகுப்புவாதக் கோரிக்கைகளாகவோ ,பிற்போக்கான கோரிக்கைகளாகவோ . கருதக்கூடாது.தற்போதுள்ள சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான கோரிக்கைகள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

உத்தியோகங்களை இந்தியர்மயமாக்குவதும், ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபைகளை அமைப்பதும் தம்மைத் தாழ்திவரும் ஜாதிகளுக்கே பயன் அளித்திருப்பதாக அவர்கள் நினைக்கின்றனர். .மற்ற ஜாதிக்காரகளே பல உத்தியோகங்களை வகிக்கின்றனர். சட்டசபை பிரதிநிதிகளும் அவர்களே. அரசியல் அதிகாரமும் அவர்களுடையதே என்று கருதுகின்றனர்.

அதிகார அமைப்பில் எம்முடைய பிரதிநிதிகள் வேண்டும் ,அதற்கு வேண்டிய யோக்யதையை தேடிக்கொள்ள விசேஷ கல்வி வசதி வேண்டும் என்று கோருகிறார்கள், எல்லா மக்களோடும், தாங்களும் சமமாக வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள விசேஷ தடைகளை ஒழிக்க ஏற்ப்படும் விசேஷ சலுகைகளின் மூலம் இந்தக் கோரிக்கையை பெறுவதற்கு வழி தேடுகின்றனர்.

---------------------------------------------------------------------------------------------------

நியாயமான கோரிக்கைகள்

=======================

தீண்டாமையை ஒழிக்கும் போராட்டத்தில், விசேஷக் கல்வி வசதிகளை ஏற்படுத்துவது ஒரு புரட்சித்தன்மை வாய்ந்த செய்கை. அடக்கும் ஜாதிகளின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றால், தீண்டாதவர்கள், சுயேச்சையாக உத்யோகங்களையோ , தொழில்களையோ தேடிக்கொள்ள வசதி வேண்டும்.

கிராமங்களில் தீண்டாதவர்களுக்கு நிலம் கிடையாது. வேறு ஜீவியம் கிடையாது. அதனால்தான், கிராமாந்தரங்களில், தீண்டாமை ஒழியவில்லை.

கல்வி கற்றால், உத்தியோகங்களுக்கு வேண்டிய யோக்யதையை அடைகின்றனர்.,வேறு தொழில்களை நடத்தும் திறமையைப் பெறமுடியும்.

இவ்வாறு ஜீவியம் நடத்த ,கல்வி வழி திறந்து விடுகிறது.

பிறரை எதிர்நோக்கி ,பிறர் தயவில் வாழாமல், தீண்டாதவர்கள் சுதந்திரம் பெறுவதற்கு வழி அளிக்கிறது.

தீண்டாமையின் வேர் பொருளாதாரத்தில் உள்ளது.

கல்வி அந்த வேரை அரித்துவிடும். தங்களுடைய வாழ்க்கையை நடத்துவதற்கு அவர்கள், அடிமைகளாக , பொருளாதார அடிமைகளாக வாழவேண்டியதில்லை.

கல்வி வசதியும் , உத்தியோகங்களும் தனிப்பட்டவர் நிலையை உயர்த்தும் வழி மட்டுமல்ல. ..சமூக விடுதலை மார்கமாகவும் ஆகின்றன.

தேசிய காங்கிரசும் அதனுடைய இளம் பருவத்தில் இத்தகைய கோரிக்கைகளை எழுப்பியிருக்கிறது. இந்தியர்களுக்கு நிர்வாகப் பதவிகள் வேண்டும், உயர்தரக் கல்வி வேண்டும் என்று காங்கிரஸ் ஏன் கேட்டது? இந்தியருக்கும் ஐரோப்பியருக்கும் இடையே எழுப்பப்பட்ட ஏற்றத்தாழ்வு சுவரை உடைத்தெறியும் கருவிகளாக அவை கருதப்பட்டன.

தீண்டாதவர்களின் கோரிக்கையும் அதே நோக்கத்துடன் இன்று முன்வைக்கப்படுகிறது.

....தற்போதுள்ள ஹிந்து கிராமங்களில் ஒதுக்கப்பட்டு சேரிகளில் வாழாமல், சர்கார் மானியத்தில் பயிர் செய்து வாழ்க்கை இடங்களை ஏற்ப்படுத்துவதற்கு விசேஷ settlement களை சம்மேளனம் கோருகிறது. ....தீண்டாதவர்களில் மிகப்பெரும்பான்மையினருக்கு சொந்தமான நிலம் கிடையாது. அவர்கள் நிலமில்லா விவசாயக்கூலிகள் . ஜீவனம் செய்வதற்கு கிராமத்தில் உள்ள இதர ஹிந்துக்களின் தயவைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் அவர்கள் சிறிய பகுதியாக உள்ளார்கள்

இதர ஜாதியினரின் ஆதரவில்லாமல் எவ்வித வியாபாரத்தையும் அவர்கள் நடத்த இயலாது. தங்கள் அடிமைத்தனத்திலிருந்து ,தங்களை விடுவித்துக் கொள்வதற்கான எந்த .தொழிலையும் ,சுயேச்சையான தொழிலையும் அவர்கள் நடத்த முடியாது. இதுதான் தீண்டாமையை நீடித்து வைக்கிறது. ...

.சர்கார் நிலங்களில் இருந்து அவர்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டால் , அந்த மானியங்களில் 'சுதந்திர' சமூகங்களாக அவர்கள் அமைக்கப்பட்டால் , அவர்களுடைய வகுப்பிலிருந்தே வியாபாரிகளையும் , வர்த்தகர்களையும் பிறப்பிக்க முடியும். பொருளாதார முன்னேற்றத்தில், தாங்களும் சுதந்திர மனிதர்களாக பங்கெடுத்துக் கொள்வதை உணர்வார்கள். இவ்வாறுதான், தீண்டாமையைத் தாங்கி நிற்கும் அச்சுவேரைப் பெயர்த்தி எடுக்க முடியும்

தாழ்த்தப்பட்ட இந்த மனித சமூகம் , இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இருக்கவேண்டுமென்று விரும்பும் அனைவரும் , இந்த நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு அளிக்க கடமைப்பட்டவர்கள்.

------------------------------------------------------------------------------------------

தனித்தொகுதி

தனித்தொகுதி கோரிக்கையை எடுத்துக்கொள்வோம். தனித்தொகுதிகள் வகுப்புப்பிரிவினைகளை நீடித்து வைத்து வகுப்புவாதத்தை வளர்க்கும் என்று தேசியவாதிகள் நினைத்து வருகின்றனர். தேசிய இயக்கத்திற்கு எதிரான மனோபாவத்தைப்பரப்ப பிற்போக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ளும் கருவி , தனித்தொகுதி என்று கருதுகின்றனர்.

நம்முடைய சுதந்திரப்போராட்டத்தில் , பொதுத்தொகுதியா, தனித்தொகுதியா என்ற பிரச்னை மிகப்பெரிய பிரச்னையாக சர்ச்சை செய்யப்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள் விஷயத்தில், அது பொதுமக்கள் முன் வந்தது. காங்கிரஸ் பொதுத்தொகுதிதான் இருக்கவேண்டும் என்று கூறிக்கொண்டுவந்துள்ளது.

தனித்தொகுதி வேண்டும் என்பவர்களுடைய மனதை மாற்ற முடியாமல் போன பிறகுதான் வேறு வழியின்றி ,தனித்தொகுதியை கொடுக்க காங்கிரஸ் ஒப்புக்கொண்டுள்ளது. .தேசியப்போராட்டத்தில் , முஸ்லிம்கள் தனித்தொகுதிகளைப் பெற்றார்கள்.

1935ம் வருஷ அரசியல் சட்டத்தின்படி, தீண்டாதவர்களுக்கும் தனித்தொகுதி அளிக்கப்பட்டது. ஆனால் , காந்திஜி உண்ணாவிரதம் பூண்டார். கடைசியாக பூனா ஒப்பந்தத்தின் மூலம் ஹிந்துக்களுடன் ,பொதுத்தொகுதிகளில் ,தீண்டாதவர்களையும் சேர்த்து வைத்துக்கொண்டனர்.

-------------------------------------------------------------------------------------------------------

இன்றைக்கு ,அந்த ஏற்பாட்டை விட்டுவிட வேண்டும் என்று தீண்டாதவர்கள் விரும்புகின்றனர். தனித்தொகுதிதான் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். அது வகுப்புவாதக் கோரிக்கையா? தேசிய எதிர்ப்புக் கோரிக்கையா? தற்போதுள்ள பிரிவினைகளை நீடித்து வைக்கும் உபாயமா? அல்லது அவற்றை ஒழிக்கும் வழியா? இந்தக் கோரிக்கை ஏன் கிளம்ப வேண்டும்?

...தீண்டாதவர்களுக்கு உண்மையான குறை ஒன்று உள்ளது. சர்வ சாதாரணமான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்களை மனிதத் தன்மை அற்ற முறையில் சமூகம் நடத்தி வந்திருக்கிறது. அவர்களுடைய நலன்களுக்காக எந்த ஸ்தாபனமும் , தேசிய காங்கிரஸ் கூட , போராடவில்லை. தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடுவதற்கு வேண்டிய பாதுகாப்பை கோரும் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதி அவர்கள்.

ஜாதி ஹிந்துக்கள் விரும்பும் தீண்டாதவர்களையே பிரதிநிதிகளாக்க பொதுத் தொகுதிகள் வசதி அளிக்கின்றன. பல கிராமங்களில் சிதறி

கிடக்கின்றனர். அந்த கிராமங்களில் எல்லாம் ஜாதி ஹிந்துக்கள் தான் மெஜாரிட்டி. ..தாழ்த்தப்பட்ட வகுப்பினர் விரும்பாத எந்த நபரையும் ஜாதி ஹிந்துக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க முடியும்.

-----------------------------------------------------------------------------------------------------

இப்பேர்ப்பட்ட ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமென்று தீண்டாதவர்கள் விரும்புகிறார்கள். ஸீட்டுகள் ரிசர்வ் செய்யப்பட கூட்டுத்தொகுதிகளில், சென்ற தேர்தல் அனுபவம் அவர்களுடைய மனதில் கசப்பை ஏற்ப்படுத்திவிட்டது. சென்ற தேர்தலில் ஜாதி ஹிந்துக்களால், நியமனம் செய்யப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மீது சுமத்தப்பட்டனர். .கூட்டுத்தொகுதி இதற்கு சாதகமாக இருந்தது. கூட்டுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அபேக்ஷகர்கள் , கிராமக் கிணறுகளையும் , ஹோட்டல்களையும் பொது ஸ்தலங்களையும் ,தீண்டாதவர்களுக்கும் திறந்து வைப்பதற்காக எவ்வித முயற்சியும் செய்யவில்லை. காங்கிரஸ் மந்திரிசபைகளும் இதற்கு உதவவில்லை.

தேசிய இயக்கம் தீண்டாதவர்களுடைய நம்பிக்கையைப் பெறவில்லை. தீண்டாதவர்களுக்கு இந்த அனுபவம் ஏமாற்றத்தை அளித்தது. அவர்களுடைய நியாயமான நலன்களைக் காப்பாற்ற அவர்கள் இன்றைக்குத் தனித்தொகுதிகளை கேட்கின்றனர். அப்படிக் கேட்பது யாருடைய குற்றம்? தீண்டாதவர்களுடைய குற்றமா? அல்லது தேசிய இயக்கத்தின் குற்றமா? தேசிய இயக்கம் தங்களுடைய நலன்களைக் காப்பாற்றும் ஸ்தாபனம் என்ற உணர்ச்சியை நடைமுறையில் ஏற்படுத்தி இருந்தால்,இந்த கோரிக்கையைப் போட்டிருக்க முடியாது.

இன்றுள்ள நிலைமை என்ன? காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பினருடைய நம்பிக்கையைப் பெறவில்லை. ஒரு பகுதிக்கும் ,மற்றொரு பகுதிக்கும் இடையே பூரண நம்பிக்கை இல்லாத நிலைமையில், ,கூட்டுத்தொகுதிகளை ஏற்ப்படுத்துவது , அவநம்பிக்கையை அதிகரிக்கிறது. இதனால் பிளவு கூடுகிறது. சீர்குலைவை அதிகரிக்கும். , இது ஜாதி ஹிந்துக்களின் ஆதிக்கத்தை நீடிக்கும் சூழ்ச்சி என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கருதுவார்கள். தனித்தொகுதி வேண்டுமா அல்லது கூட்டுத்தொகுதி வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்வதற்கு , தீண்டாதவர்களுக்கு பரிபூர்ண சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதுவே நியாயம். அதுவே ஜனநாயகம். பிற பகுதிகள் அவர்கள் மீது கூட்டுத்தொகுதியை புகுத்துவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.

தனித்தொகுதிக் கோரிக்கையின் காரணத்தை உணர்ந்து அதன் நியாயத்தை ஏற்றுக்கொள்வதற்கு காங்கிரஸ் முன்வரவேண்டும். ஜனநாயகத்தை முன்னிட்டு அதை ஆதரிக்கவேண்டும். தேசிய இயக்கம் என்றென்றும் அவர்களுடைய நலன்களைப் பாதுகாக்கும் என்ற களங்கமற்ற உறுதிமொழியை காங்கிரஸ் அளிக்க வேண்டும்.

...இப்படித்திட்டமிட்டால்தான் , ஏகாதிபத்தியவாதிகளும், பிற்போக்காளர்களும், இந்த நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் தடுக்க முடியும். தீண்டாதவர் போராட்டத்தை சுதந்திரப்போராடத்துடன் காங்கிரஸ் இணைத்தவுடன் -காங்கிரஸ் தீண்டாதவர்களின் நம்பிக்கையைப் பெற்றவுடன், பிற்போக்காளர்களுக்கு சாவு மணி அடித்துவிடலாம்... தீண்டாதவர் வகுப்பிலிருந்தே அவர்களுடைய நலன்களைக் காத்து தேசிய நலன்களுக்காக போராடும் வீரர்கள் உதிப்பார்கள். ...காங்கிரசின் கராச்சி தீர்மானம் , பிரஜா உரிமை சமத்துவப பிரகடனம் செய்தது. அதை அமுலுக்குக் கொண்டுவரும் வழி , இப்பேர்ப்பட்ட கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு போராடுவதாகும். இவை நியாயத்திலிருந்தும் , தார்மீகத்திலிருந்தும் பிறந்துள்ள கோரிக்கைகள் . தேசிய காங்கிரஸ் ,இவற்றை எடுத்துக்கொள்வதில் சிரத்தை காட்டியிருந்தால்,

தீண்டாதவர் இயக்கம், சுதந்திரப்போராடத்துடன் கலந்த ஒன்றாய் சேர்ந்திருக்கும். தேசிய இயக்கத்தின் போராட்ட சக்திகள், பலமடைந்திருக்கும். ஒடுக்கப்பட்ட மனித வர்கத்தின் பகுதியாக இந்த பல கோடி மக்களும் , தேசியக்கொடியின் கீழ் தேசிய இயக்கத்திற்கு ஆதரவாக திரட்டப்பட்டிருப்பார்கள்.

---------------------------------------------------------------------------------------------

சுதந்திரப் பிரச்னை புறக்கணிக்கப் படுகின்றது

இந்தக் கோரிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் சம்மேளனத்தில் உள்ள ஒரு குறையைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. தேசத்தின் பரிபூர்ண சுதந்திரம் அதன் திட்டத்தில் இடம் பெறவில்லை. ஆலயப்ரவேசம் வேண்டுமென்ற பால்யப்பருவத்தைத் . தாண்டி .இப்போது அவர்களுடைய இயக்கம் ,அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் இடம் வேண்டுமென்று கேட்கின்றது. ஆனால், இந்த அதிகாரத்தை ப்ரிடிஷாரிடமிருந்து கைப்பற்ற வேண்டும். இந்த உணர்வைப் பிரதிதிபளிக்கும் அம்சம் சம்மேளனத்தின் திட்டத்தில் காணப்படவில்லை.

இந்திய மக்கள், அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமானால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை , நம்முடைய ஒன்றுபட்ட சக்தியால் தாக்க வேண்டும். அதுவே அதிகாரத்தில், தீண்டாதாருக்கு உரிய பங்கை அளிக்கும். இது தெளிவான விஷயம். என்றாலும் சம்மேளனத்தின் திட்டத்தில் சுதந்திரம் என்ற வார்த்தையே காணப்படவில்லை. அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியா பரிபூர்ண விடுதலை அடைவதை அவர்களுடைய திட்டத்தில் காணவில்லை. அதற்கு மாறாக இருக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் பிரசங்கங்கள், டொமினியன் அந்தஸ்து என்ற எல்லைக்குள்தான் அவர்கள் விடுதலையைக் காண்பதாக தோன்றுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் , பிரிட்டிஷ் ஆட்சி இன்த நாட்டில் நீடித்திருக்கும் என்ற எண்ணத்துடன் போடப்பட்டிருக்கின்றன. ஆனால், பிரிடிஷாரிடமிருந்து நாம் கைப்பற்றும் அதிகாரத்தில் ஒரு பங்கை இந்தக் கோரிக்கைகள் கேட்கின்றன. இந்த அதிகாரத்தை பிரிடிஷார் விட்டுக்கொடுக்கும்படியாகச் செய்வதற்கான திட்டம் ஒன்றும் சம்மேளனத்துக்கு கிடையாது. பிரிட்டிஷ் சர்க்கார், தங்கள் தயா தாக்ஷன்யத்தினால் கொடுக்கும் அதிகாரத்தில் ஒரு பங்கை எடுத்துக்கொண்டு திருப்தி அடையப் பார்க்கின்றனர்.

----------------------------------------------------------------------------------

இன்றைய நிலையில் மன்னிக்க முடியாது.

--------------------------------------------------------------------------------

தீண்டாதார் இயக்கத்தின் ஆரம்ப கட்டத்தில், இத்தகைய மனோபாவத்தினால் அதிக பாதிப்பு ஏற்படாது என்றிருக்கலாம். ஆனால் இன்றைக்கு, சம்மேளனத்தின் கொடியில்

பரிபூர்ண சுதந்திரம் என்ற முழக்கம் பொறிக்கப்படாமல் இருப்பது மன்னிக்க முடியாத விஷயம். அப்படிச் செய்யாமல் இருப்பதற்கு யாதொரு காரணமும் கிடையாது.

சுதந்திரப் பிரச்னையில் பாராமுகமாக இருப்பது, தீண்டாதார் நலனுக்கே பாதகமாகும். தீண்டாமையை ஒழிப்பதற்கு பரிபூர்ண ,சுதந்திரமும் , அதிகாரத்தில் தங்களுக்குரித்தான பங்கை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்பது தெள்ளத் தெளிவான விஷயம். அவர்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நாளையே பூர்த்தி செய்யப்பட்டாலும், தீண்டாமை ஒழியாது. தற்போதுள்ள அரசியல் சட்டத்தின் கீழ் எப்படி கோடிக்கணக்கான தீண்டாதார் , விசேஷக் குடியிருப்புகளில் குடியமர்த்தப்படுவார்கள்? எப்படி உத்தியோகங்களில் பங்கு பெற முடியும்?

தேசம் அதி சீக்கிரத்தில், தொழில்மயமாக்கப்படவேண்டும்.

நிலச்சுவான்தார் முறை கரைக்கப்பட்டு ஒழிய வேண்டும். விவசாய முறையில், புரட்சிகரமான மாறுதல் புகுத்தப்படவேண்டும். இவைதான் , தீண்டாதார் தங்கள் ஜீவனம் செய்யும் சுயேச்சைத் தொழில்களைத் தேட வசதி அளிக்கும். இவற்றால்தான் தீண்டாமை ஒழிக்கப்படும். இதற்கு அந்நிய ஆட்சியின் பிடிப்பிலிருந்து, நாம் விடுதலை பெறவேண்டியது அவசியம். தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள், இதை எப்படிப்பார்க்காமல் இருக்க முடியும்? நாட்டின் அடிமைத்தனத்தை நீடிப்பது, தீண்டாதாரின் நிலையை நீடிப்பதாகும்.

இந்த சம்மேளனம் சுதந்திரக் கோரிக்கையை எதிர்க்கவில்லை. கான்பூரில் நடந்த மாநாட்டில் தலைமை வகித்த ராவ் பகதூர் சிவராஜ், "நாங்கள் இந்திய சுதந்திரத்திற்கு எதிராக நிற்கவில்லை. ஆனால் , நாகபுரி சம்மேளனத்தில்

நாங்கள் கோரிய கோரிக்கைகள் அளிக்கப்படும் என்ற உறுதிமொழி வேண்டுகிறோம்" என்று கூறியிருக்கிறார். ..ஆனால் "நாங்கள் சுதந்திரத்தை எதிர்க்கவில்லை" என்று கூறினால் மட்டும் போதாது. மற்ற மக்களுடன் சேர்ந்து போராடி சுதந்திர லட்சியத்தை அடைய வேண்டும் என்று உணர வேண்டும். தீண்டாதார் கோரிக்கையைப் பெறுவதற்கு இது அவசியமான பணி

-------------------------------------------------------------------------------------

சுதந்திரத்திற்காக ஒன்று படுங்கள்.

ஆலயப்ரவேசம் என்ற லட்சியத்திலிருந்து , அரசியல் அதிகாரம் வேண்டுமென்று கோருமளவுக்கு தீண்டாதவர் இயக்கம் வளர்ந்துவிட்டது.

மற்ற கட்சிகளிடத்தும், மற்ற பொதுஜனப் பகுதிகளின்பாலும் இதுவரை அனுஷ்டித்து வந்த கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளவேண்டும்.

இதை கான்பூர் கூட்டத்தில், அம்பேத்கரே ஒருவாறு ஏற்றுக்கொண்டுள்ளார்.

"இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் , மூன்று பகுதிகள், அதிகாரத்தில் பங்கு கொள்ளும். அவை, ஹிந்துக்கள், முஸ்லிம்கள், தீண்டாதவர்கள்".

சுயராஜ்யம் அடைவதற்கு முன்னரே அதைப்பெருவதற்கு இந்த மூன்று கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியமல்லவா ?

தேசிய காங்கிரசுக்கும் ,தீண்டாதவர்களுக்கும் இடையில் சௌஜன்யமான தொடர்பை ஏற்படுத்தாவிட்டால், இரு கட்சிகளுக்கும் பாதகம் ஏற்ப்படும்.

இந்திய சுதந்திரத்திற்கே அது பாதகம் விளைவிக்கும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதும் தீண்டாமையை ஒழிப்பதும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றவேண்டிய காரியங்கள். ஏனெனில்,ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்தும் செயல் அது. ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதற்காக எல்லா மக்களுடைய கூட்டு முயற்சி அவசியம். தனித்தனியாக முயற்சி செய்வது வெற்றி தராது

நமது நாட்டின் பொதுஜனங்கள் பலர், தேசிய காங்கிரசின் கீழ் நிற்கின்றனர். .

தொழிலாளிகள், விவசாயிகள், படிப்பாளிகள், முதலியவர்கள் அதில் திரண்டு உள்ளனர்.

அவர்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல், அதிகாரம் பெற முடியாது.

அதனால்தான், தீண்டாதவர்கள், தங்களுடைய கோரிக்கைகளுக்கு காங்கிரசின் ஆதரவைப் பெறவேண்டும்.

காங்கிரஸ் எதிர்ப்பு மனோபாவமும், காந்திஜி எதிர்ப்பு மனோபாவமும் , மற்ற மக்களிடமிருந்து அவர்களைப் பிரித்து வைத்துவிடும்.

எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டால்தான், இந்தியா சுதந்திரம் அடைய முடியும். ,தீண்டாதவர்களும், அதிகாரத்தில் ஒரு பங்கைப் பெறமுடியும் என்பதைத் தீண்டாதவர்கள் உணர வேண்டும். தேசிய காங்கிரசிடம் கொண்டுள்ள போக்கை ,இந்த காரணம் கொண்டு அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்.

தேசிய காங்கிரசின் கொடியின் கீழ் பல்லாண்டுகளாக நடத்தப்பட்டுவரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரலாறை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். தொழிலாளிகள் ,விவசாயிகள் இயக்கங்கள், தீண்டாதவர் இயக்கத்திற்கு நெருங்கியுள்ள இயக்கங்கள். ..தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களுடைய வர்க்க ஸ்தாபனம். விவசாய சங்கங்கள், விவசாயிகளுடைய வர்க்க ஸ்தாபனம்.

--

ஜாதி மத பேதமின்றி அந்தந்த வர்கத்தின் கோரிக்கைகளின்மீது தொழிலாளிகளையும் விவசாயிகளையும் ஒன்றுபடுத்திக் கட்டப்பட்ட ஸ்தாபனங்கள அவை.

தீண்டாதவர்களில் பெரும்பான்மையோர் இவ்விரு வர்கங்களிலும் இருக்கின்றனர். தொழிற்சங்கங்களிலும் விவசாயிகள் சங்கங்களிலும் சேர்ந்து அந்த அமைப்புகளை பலப்படுத்தி அவர்களுடைய அன்றாடக் கோரிக்கைகளுக்குப் போராடவேண்டியது தீண்டாதவர் கடமை. ....

இவ்வாறாக தொழிலாளர்களிடையிலும், விவசாயிகளிடையும் ஒன்று சேர்ந்து நிற்பதின் மூலம் , தங்களுடைய வகுப்புக் கோரிக்கைகளை அடைவதற்கான நிர்பந்தத்தை அதிகரிக்கவும், துதப்படுத்தவும் முடியும் என்பதை இந்த வர்க்கங்களில் உள்ள தீண்டாதவர் உணர வேண்டும்.

மற்ற கட்சிகள், மற்ற ஜனங்களை வற்புறுத்தி தீண்டாதவர்களுடைய விசேஷ உரிமைகளை சீக்கிரத்தில் அடைய முடியும். தன்னுடைய வர்க்க அமைப்பில் சேருவது தன்னுடைய கோரிக்கைகள் நியாயமானவை என்பதை அங்குள்ள தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துரைக்கவேண்டும். தீண்டாதவர் இயக்கத்தின் முக்யத்த்வத்தை இதுவரை தேசிய இயக்கம் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை. அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை தேசிய ஸ்தாபனத்தின் கோரிக்கைகளாகவே -

எடுத்துக்கொள்ளவில்லை. இதன் விளைவு தேசிய இயக்கத்திற்கு சாதகமாக இல்லை.

தீண்டாதார் விழிப்படைந்துள்ளனர். தங்களுடைய தேவைகளை உணர்ந்துள்ளனர். அதற்காகத் தனி ஸ்தாபனம் அமைத்துக்கொண்டு விட்டனர். இன்று அதிகாரம் வேண்டும் என்ற உணர்வும் அவர்களுக்கு ஏற்ப்பட்டுள்ளது.

அவர்கள் நடந்துவந்த பாதை , சுய முயற்சியில் ஏற்பட்ட பாதை.

இந்திய சமூகத்தில், மிகவும் தாழ்த்தப்பட்டு ,ஒடுக்கப்பட்ட ஒரு பகுதி, இன்று சுதந்திர ஒளி கண்டு ,விழிப்புற்று வருகிறது. சுதந்திரத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் இதை வரவேற்க வேண்டும். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை ஆதரிப்பதின் மூலம் ,தேசிய இயக்கம் அவர்களிடம் நம்பிக்கை ஊட்டவேண்டும்.

சுதந்திரப் போராத்திற்காக திரண்டுவரும் மாபெரும் வெள்ளப்பெருக்கில் அவர்கள் சேருவதற்கு வழி தேட வேண்டும். பஞ்சத்தையும் ,அரசியல் நெருக்கடியையும் எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் அவர்கள் முக்யமான பகுதி. தேசிய ஒற்றுமைக்காக ,தேசிய சர்காருக்காக நடைபெறும் போராட்டத்தில், அவர்களும் ஒரு முக்யமான பகுதி.

தேசிய காங்கிரசும், பழைய பார்வையை விட்டுவிடவேண்டும். இந்தப பிரச்னையை அரசியல் சமபந்தமில்லாத பிரச்னையாகப் பார்க்கக்கூடாது

தான தருமம், கருணை கடாக்ஷத்திற்காக செய்யும் சேவையாக தீண்டாமை ஒழிப்பைக் கருதக்கூடாது.

ஒற்றுமை, நியாயம் -இவ்விரண்டும் சம்பத்தப்பட்ட ஒரு பெரிய பிரச்னை இது என்று , கருதவேண்டும்.அப்படிச்செய்தால் அதிசீக்கிரத்தில் சுதந்திர இயக்கத்தின் அணிவகுப்பில் தாழ்த்தப்பட்டோர் ,கோடிக்கணக்கில் இந்திய புரட்சிக்காரகளாக சேர்க்க முடியும்.