அருட்பணி: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே...
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
பாவத்துயர்ச் செயல்
அருட்பணி: சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வுகளைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவனிடமும்,
எல்லோரும்: சகோதர சகோதரிகளே,
உங்களிடமும் நான் பாவி என ஏற்றுக்கொள்கின்றேன்;
ஏனெனில் என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும்
கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன்.
என் பாவமே, என் பாவமே, என் பெரும் பாவமே.
ஆகையால், எப்போதும் கன்னியான புனித மரியாவையும்,
வானதூதர், புனிதர் அனைவரையும்,
சகோதர சகோதரிகளே உங்களையும்
நம் இறைவனாகிய ஆண்டவரிடம்
எனக்காக வேண்டிக்கொள்ள மன்றாடுகின்றேன்.
அருட்பணி: எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல்லோரும்: ஆமென்.
➕ ➕ ➕
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
அருட்பணி: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: கிறிஸ்துவே, இரக்கமாயிரும்.
அருட்பணி: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
எல்லோரும்: ஆண்டவரே, இரக்கமாயிரும்.
வானவர் கீதம்
அருட்பணி: உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக.
எல்லோரும்: உலகினிலே நன் மனத்தோருக்கு அமைதி ஆகுக.
உம்மைப் புகழ்கின்றோம்.
உம்மை வாழ்த்துகின்றோம்.
உம்மை ஆராதிக்கின்றோம்.
உம்மை மாட்சிப்படுத்துகின்றோம்.
உமது மேலான மாட்சியின் பொருட்டு
உமக்கு நன்றி கூறுகின்றோம்.
ஆண்டவராகிய இறைவா, வானுலக அரசரே,
எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவா,
ஒரே மகனாய் உதித்த ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே,
ஆண்டவராகிய இறைவா, இறைவனின் செம்மறியே,
தந்தையின் திருமகனே,
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்குபவரே,
எங்கள் மன்றாட்டை ஏற்றருளும்.
தந்தையின் வலப் பக்கம் வீற்றிருப்பவரே,
எங்கள் மேல் இரக்கமாயிரும்.
ஏனெனில் இயேசு கிறிஸ்துவே,
நீர் ஒருவரே தூயவர்.
நீர் ஒருவரே ஆண்டவர்.
நீர் ஒருவரே உன்னதர்.
தூய ஆவியாரோடு, தந்தையாகிய இறைவனின்
மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
இறைவா, உம் திருமகன் சாவுக்குத் தம்மைக் கையளிக்கும் வேளையில் நிலைத்து நிற்கும் அன்பின் புதிய பலியையும் திருவிருந்தையும் தமது திரு அவைக்கு அளித்தார்; அதனால் இப்புனிதமிக்க திரு உணவில் அடிக்கடி பங்குகொள்ளும் நாங்கள் இத்துணை மேலான மறைநிகழ்விலிருந்து அன்பின் முழுமையையும் வாழ்வின் நிறைவையும் பெற்றுக்கொள்ள அருள்புரிவீராக.
எல்லோரும்: ஆமென்!
வாசகம்
முதல் வாசகம்:
பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம். 12: 1-8, 11-14
எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்:
அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.
நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது ‘ஆண்டவரின் பாஸ்கா'. ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.
இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
பதிலுரைப் பாடல்:
திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)
பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்கு கொள்வதே.
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். - பல்லவி
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி
இரண்டாம் வாசகம்:
அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம். 11: 23-26
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, “இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, “இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்” என்றார்.
ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும் வரை அறிவிக்கிறீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி.
நற்செய்திக்கு முன் வசனம்: யோவான் 13: 34 (அல்லேலூயா சொல்லப்படுவதில்லை)
'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள், என்கிறார் ஆண்டவர்.
நற்செய்தி வாசகம்:
இயேசு தமக்குரியோர் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம். 13: 1 - 15
பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.
இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், “ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?” என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, “நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்” என்றார். பேதுரு அவரிடம், “நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை” என்றார். அப்போது சீமோன் பேதுரு, “அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்” என்றார். இயேசு அவரிடம், “குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை” என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் ‘உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை’ என்றார்.
அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: “நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும் ‘ஆண்டவர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்” என்றார்.
கிறிஸ்துவின் வாழ்வு தரும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்குப் புகழ்.
மறையுரை முடிந்தபின், அருள்பணியாளர் நலனை முன்னிட்டுக் காலடிகளைக் கழுவும் சடங்கை நடத்தலாம்.
இறைமக்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோரை வசதியான இடத்தில் தயார் செய்யப்பட்ட இருக்கைகளுக்குப் பணியாளர்கள் அழைத்து வருகின்றார்கள். பின்னர் அருள்பணியாளர் (தேவையானால், திருப்பலி மேலுடையை அகற்றிவிட்டு) அவர்கள் ஒவ்வொருவரிடமும் சென்று, பணியாளர் துணையோடு காலடிகளின் மீது தண்ணீர் ஊற்றித் துடைக்கின்றார்.
இதற்கிடையில் பின்வரும் பாடல்களோ வேறு பொருத்தமான பாடல்களோ பாடப்படும்.
பல்லவி 1 (யோவா 13: 4, 5, 15)
ஆண்டவர் பந்தியிலிருந்து எழுந்த பின்னர்
குவளை ஒன்றில் தண்ணீர் எடுத்து,
சீடர்களின் காலடிகளைக் கழுவத் தொடங்கினார்.
இந்த முன்மாதிரியைச் சீடர்களுக்கு விட்டுச் சென்றார்.
பல்லவி 2 (யோவா 13: 12, 13, 15)
இயேசு தம் சீடர்களோடு இரவு விருந்து அருந்தியபின்
அவர்களுடைய காலடிகளைக் கழுவி, அவர்களிடம் கூறினார்:
ஆண்டவரும் போதகருமான நான் உங்களுக்குச் செய்தது
என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?
நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு
நான் உங்களுக்கு முன் மாதிரி காட்டினேன்.
பல்லவி 3 (யோவா 13: 6, 7, 8)
ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?
அதற்கு இயேசு: "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால்
என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.
முன் மொழி: எனவே சீமோன் பேதுருவிடம் அவர் வந்தபோது
பேதுரு அவரை நோக்கிக் கூறினார்:
"ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"
முன்மொழி: "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது,பின்னரே புரிந்து கொள்வாய்."
"ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப்போகிறீர்?"
பல்லவி 4 (யோவா 13:14)
ஆண்டவரும் போதகருமான நானே உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால்,
நீங்களும் மற்றவருடைய காலடிகளைக் கழுவக்
கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
பல்லவி 5 (யோவா 13:35)
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.
முன்மொழி: இயேசு தம் சீடருக்குக் கூறினார்:
நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து
நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்.
பல்லவி 6 (யோவா 13:34)
புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்:
நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போலவே
நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்கிறார் ஆண்டவர்.
பல்லவி 7 (1 கொரி 13:13)
உங்களிடம் நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு
இம்மூன்றும் நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது.
முன்மொழி: இப்போது நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு
இம்மூன்றும் நிலையாய் உள்ளன.
இவற்றுள் அன்பே தலைசிறந்தது. - உங்களிடம் நம்பிக்கை.
காலடிகளைக் கழுவிய பின் அருள்பணியாளர் தம் கைகளைக் கழுவித் துடைக்கின்றார். மேலுடையை மீண்டும் அணிந்துகொண்டு தமது இருக்கைக்கு வருகின்றார்.
எல்லோரும்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
அப்பத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தைப் பெற்றுள்ளோம்; நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
இரசத்தை அர்ப்பணித்தல்:
அருட்பணி: ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தைப் பெற்றுள்ளோம். திராட்சைச் செடியும் மனித உழைப்பின் பயனுமான இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.
எல்லோரும்: இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.
அருட்பணி: சகோதர சகோதரிகளே, என்னுடையதும் உங்களுடையதுமான இப்பலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்.
எல்லோரும்: ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும், மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும், புனிதத் திரு அவை அனைத்தின் நலனுக்காகவும் உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.
அருட்பணி: ஆண்டவரே, எப்பொழுதெல்லாம் இப்பலியின் நினைவு கொண்டாடப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் எங்கள் மீட்பின் செயல் நிறைவேற்றப்படுகின்றது; எனவே நாங்கள் இம்மறைநிகழ்வுகளில் தகுதியுடன் பங்கேற்க எங்களுக்கு அருள்புரிவீராக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
தூய்மைமிகு நற்கருணையின் தொடக்கவுரை I
கிறிஸ்துவின் பலியும் அருளடையாளமும்
அருட்பணி: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக.
அருட்பணி: இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல்லோரும்: ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.
அருட்பணி: நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல்லோரும்: அது தகுதியும் நீதியும் ஆனதே.
அருட்பணி:
ஆண்டவரே, தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.
என்றுமுள்ள மெய்யான குருவாகிய அவர் நிலையான பலிமுறையை ஏற்படுத்தினார்; மீட்பு அளிக்கும் பலிப்பொருளாக முதன்முதல் தம்மையே உமக்கு ஒப்புக்கொடுத்து, தம் நினைவாக நாங்களும் பலி செலுத்த வேண்டுமென்று கற்பித்தார். எங்களுக்காகப் பலியான அவருடைய திரு உடலை உண்ணும்போதெல்லாம் நாங்கள் வலிமை பெறுகின்றோம். அவர் எங்களுக்காகச் சிந்திய திரு இரத்தத்தைப் பருகும்போதெல்லாம் நாங்கள் கழுவப்பட்டுத் தூய்மை அடைகின்றோம்.
ஆகவே வானதூதர், முதன்மை வானதூதரோடும், அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோரோடும் வான்படைகளின் அணிகள் அனைத்தோடும் சேர்ந்து நாங்கள் உமது மாட்சியைப் புகழ்ந்து பாடி முடிவின்றிச் சொல்வதாவது:
எல்லோரும்:
தூயவர், தூயவர், தூயவர்.
வான்படைகளின் கடவுளாம் ஆண்டவர்.
விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன.
உன்னதங்களிலே ஒசன்னா!
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர்.
உன்னதங்களிலே ஒசன்னா!
அருட்பணி:
ஆகவே கனிவுமிக்க தந்தையே, இக்கொடைகளையும் இக்காணிக்கைகளையும் புனித மாசற்ற பலிப்பொருள்களையும் நீர் ஏற்று ஆசி வழங்கிட உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மைத் தாழ்மையுடன் இறைஞ்சி மன்றாடுகின்றோம்.
உமது புனிதக் கத்தோலிக்கத் திரு அவைக்காக இவற்றை நாங்கள் முதலில் உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்; உலகெங்கும் அதற்கு அமைதியும் பாதுகாப்பும் ஒற்றுமையும் அளித்து அதனை வழிநடத்தியருளும். உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை சிங்கராயர் (லியோ 14), க்காகவும் எங்கள் ஆயர் (பெயர்)* _____ க்காகவும் திருத்தூதர் வழிவரும் உண்மையான கத்தோலிக்க நம்பககையைக் கடைப்பிடிப்போர் அனைவருக்காகவும் இக்காணிக்கைகளை ஒப்புக்கொடுக்கின்றோம்.
ஆண்டவரே, உம் அடியார்களாகிய (பெயர்) ______, ஆகியோரையும் நினைவுகூர்ந்தருளும்.
அருள்பணியாளர் தம் கைகளைக் குவித்து, யார் யாருக்காக மன்றாட விரும்புகின்றாரோ அவர்களுக்காகச் சிறிது நேரம் வேண்டுகின்றார். பின்னர் தம் கைகளை விரி. தொடர்கின்றார்:
இங்கே கூடியுள்ள அனைவரையும் நினைவுகூர்ந்தருளும். உம் மீது இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் இறைப்பற்றையும் நீர் அறிவீர். இவர்களுக்காக நாங்கள் இவற்றை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். இவர்களும் தமக்காகவும் தம்மவருக்காகவும் இப்புகழ்ச்சிப் பலியை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றார்கள். தங்களுடைய ஆன்மாக்களின் மீட்புக்காகவும் தாங்கள் எதிர்நோக்கியிருக்கும் நலவாழ்வுக்காகவும் பாதுகாப்புக்காகவும் என்றும் வாழ்பவரும் உயிருள்ளவரும் உண்மையுள்ளவருமான கடவுளாகிய உமக்கு இவர்கள் தங்கள் பொருத்தனைகளைச் செலுத்துகின்றார்கள்.
உம்முடைய புனிதர் அனைவருடனும் உறவு கொண்டுள்ள நாங்கள், முதன்முதலாக, இறைவனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் தாயும் என்றும் கன்னியுமான மாட்சிக்கு உரிய மரியாவையும் அதே கன்னியின் கணவரான புனித யோசேப்பு, திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமான பேதுரு, பவுல், அந்திரேயா (யாக்கோபு, யோவான், தோமா, யாக்கோபு, பிலிப்பு, பார்த்தலமேயு, மத்தேயு: சீமோன், ததேயு; லீனஸ், கிளீட்டஸ், கிளமெண்ட், சிக்ஸ்துஸ், கொர்னேலியுஸ், சிப்பிரியான், லாரன்ஸ், கிரிசோகொனுஸ், ஜான், பால், கோஸ்மாஸ், தமியான்) ஆகியோரையும் வணக்கத்துடன் நினைவுகூருகின்றோம். இவர்களுடைய பேறு பயன்களாலும் வேண்டல்களாலும் நாங்கள் யாவற்றிலும் உமது உதவி பெற்றுக் காக்கப்படுமாறு அருள் புரியும். (எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)
இறைவா, இக்காணிக்கையைப் புனிதப்படுத்தி, 'உமக்கு உரிமையுடையதாகவும் தகுதியுடையதாகவும் உமக்கு ஏற்புடையதாகவும் உகந்ததாகவும் இருக்கச் செய்தருளும்.' இவ்வாறு உம் அன்புத் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் இது மாறுவதாக.
அவர் தாம் பாடுபடுவதற்கு முந்திய நாள், வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில், அப்பத்தை எடுத்து, வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, எல்லாம் வல்ல இறைவனும் தம் தந்தையுமாகிய உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி, அதைப் பிட்டு, தம் சீடர்களுக்கு அளித்துக் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள்;
ஏனெனில் இது உங்களுக்காகக் கையளிக்கப்படும் என் உடல்.
அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்திய பின், எழில் மிகு இக்கிண்ணத்தை வணக்கத்துக்கு உரிய தம் திருக் கைகளில் எடுத்து, மீண்டும் உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி, தம் சீடர்களுக்கு அளித்து, அவர் கூறியதாவது:
அனைவரும் இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள்;
ஏனெனில் இது புதிய, நிலையான உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம்.
இது பாவ மன்னிப்புக்கென்று உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.
அருட்பணி: நம்பிக்கையின் மறைபொருள்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
அருட்பணி:
ஆகவே ஆண்டவரே, உம் திருமகனும் எங்கள் ஆண்டவருமாகிய கிறிஸ்துவின் புனிதமிக்க பாடுகளையும் இறந்தோரிடமிருந்து அவர் உயிர்த்தெழுந்ததையும் இவரது மாட்சிக்கு உரிய விண்ணேற்றத்தையும் உம் ஊழியர்களும் உம் புனித மக்களுமாகிய நாங்கள் நினைவு கூருகின்றோம். நீர் எங்களுக்கு வழங்கியுள்ள கொடைகளிலிருந்து நிலைவாழ்வு தரும் புனித அப்பத்தையும் முடிவில்லா மீட்பு அளிக்கும் திருக்கிண்ணத்தையும் தூய, புனித, மாசற்ற பலிப்பொருளாக மாண்புக்கு உரிய உமக்கு நாங்கள் ஒப்புக்கொடுக்கின்றோம்.
இவற்றை இரக்கத்துடனும் கனிவுடனும் கண்ணோக்கியருளும். நீதிமானாகிய உம் ஊழியன் ஆபேலின் காணிக்கைகளையும் எங்கள் நம்பிக்கையின் தந்தை ஆபிரகாமின் பலியையும் உம்முடைய தலைமைக் குரு மெல்கிசேதேக் உமக்கு அளித்த காணிக்கைகளையும் நீர் உளம் கனிந்து ஏற்றுக்கொண்டது போல, இவற்றையும் புனிதப் பலியாகவும் மாசற்ற பலிப்பொருளாகவும் ஏற்றுக்கொள்ளும்.
எல்லாம் வல்ல இறைவா, உம்முடைய வானதூதர் தம் திருக் கைகளால் இப்பலிப்பொருள்களை மாண்புக்கு உரிய உமது விண்ணகத் திருப்பீடத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உம்மைப் பணிந்து வேண்டுகின்றோம். இத்திருப் பீடத்திலிருந்து உம்முடைய திருமகனின் புனிதமிக்க உடலையும் இரத்தத்தையும் பெறுகின்ற நாங்கள் அனைவரும், எல்லா விண்ணக ஆசியையும் அருளையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ளச் செய்தருளும். (எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)
ஆண்டவரே, நம்பிக்கையின் அடையாளத்தோடு எங்களுக்கு முன் சென்று அமைதியில் துயில் கொள்ளும் (பெயர்) _____, (பெயர்) _____ ஆகிய உம் அடியார்களையும் நினைவுகூர்ந்தருளும்.
ஆண்டவரே, இவர்களுக்கும் கிறிஸ்துவில் இளைப்பாறும் அனைவருக்கும் ஆறுதலும் ஒளியும் அமைதியும் நிறைந்த இடத்தை ஈந்திட வேண்டும் என இறைஞ்சி மன்றாடுகின்றோம். (எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக. ஆமென்.)
பாவிகளாகிய உம் அடியார்கள் நாங்களும் உமது பேரிரக்கத்தை எதிர்நோக்கி இருக்கின்றோம். உம்முடைய திருத்தூதர்களும் மறைச்சாட்சியருமாகிய திருமுழுக்கு யோவான், ஸ்தேவான், மத்தியா, பர்னபா, (இஞ்ஞாசியார், அலெக்சாண்டர், மார்சலீனுஸ், பீட்டர், பெலிசிட்டி, பெர்பேத்துவா, ஆகத்தா, லூசி, ஆக்னஸ், செசிலியா, அனஸ்தாசியா) ஆகியோருடனும் உம் புனிதர் அனைவருடனும் எங்களுக்கும் பங்களித்தருளும். எங்கள் தகுதியை முன்னிட்டு அன்று, மாறாக உமது மிகுதியான மன்னிப்பினால் அப்புனிதர்களோடு நாங்களும் தோழமை கொள்ள எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
இவர் வழியாகவே, ஆண்டவரே, நீர் இவற்றை எல்லாம் எப்போதும் நல்லவையாக்கி, புனிதப்படுத்தி, உய்வித்து, ஆசி அளித்து எங்களுக்கு வழங்குகின்றீர்.
அருட்பணி: இவர் வழியாக, இவரோடு, இவரில், எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே, தூய ஆவியாரின் ஒன்றிப்பில், எல்லாப் புகழும் மாட்சியும், என்றென்றும் உமக்கு உரியதே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: மீட்பரின் கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறைப்படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்:
எல்லோரும்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக!
உமது ஆட்சி வருக! உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக!
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல,
எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.
அருட்பணி: ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து, எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள உம்மை மன்றாடுகின்றோம். உமது இரக்கத்தின் உதவியால் நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று, யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக. நாங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்துக்காகவும் எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல்லோரும்: ஏனெனில் ஆட்சியும் வல்லமையும் மாட்சியும் என்றென்றும் உமதே.
அருட்பணி: ஆண்டவரே இயேசு கிறிஸ்துவே, "அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கின்றேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன்" என்று உம் திருத்தூதர்களுக்கு மொழிந்தீரே; எங்கள் பாவங்களைப் பாராமல் உமது திரு அவையின் நம்பிக்கையைக் கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல்லோரும்: ஆமென்.
அருட்பணி: ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல்லோரும்: உம் ஆன்மாவோடும் இருப்பதாக.
அருட்பணி: ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்துகொள்வோம்.
எல்லோரும்:
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்கள் மேல் இரக்கமாயிரும்.
உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியே, எங்களுக்கு அமைதியை அளித்தருளும்.
அருட்பணி: இதோ, இறைவனின் செம்மறி, இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்: செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்.
எல்லோரும்: ஆண்டவரே, நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன்; ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும், எனது ஆன்மா நலம் அடையும்.
(1 கொரி 11:24-25)
"இவ்வுடல் உங்களுக்காகக் கையளிக்கப்படும்; புதிய உடன்படிக்கையின் இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படுகிறது. நீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இதைச் செய்யுங்கள்" என்கிறார் ஆண்டவர்.
அருட்பணி: மன்றாடுவோமாக!
எல்லாம் வல்ல இறைவா, எங்களுக்கு அருள்புரிவீராக; உம் திருமகனின் இரவு விருந்தினால் இவ்வுலகில் ஊட்டம் பெறும் நாங்கள் என்றென்றும் நிறைவு அடையத் தகுதி பெறுவோமாக.
எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல்லோரும்: ஆமென்.
தூய்மை மிகு நற்கருணை இடமாற்றம்
பாடுவாய் என் நாவே, மாண்புயர் கீதம் பாடவும்