35-*-தாயின் மணிக்கொடி-THAAYIN maNikkodi

mp4 created on 12-9-2017

If there is any problem in playing the embedded mp4 , look for popout button at

top right corner and you get download option.

Download, preserve and listen

https://www.youtube.com/watch?v=FGLLYfqjbX8

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்

தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்

உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே

பாங்கின் எழுதித் திகழும்-செய்ய

பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

பட்டுத் துகிலென லாமோ?-அதில்

பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று

மட்டு மிகந்தடித் தாலும்-அதை

மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்

இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்

எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-

மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்

மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்

காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்

நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்

நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

அணியணி யாயவர் நிற்கும்-இந்த

ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?

பணிகள் பொருந்திய மார்பும்-விறல்

பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!

செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்

தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,

சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்

சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்

காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,

பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்

பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.

பூதலம் முற்றிடும் வரையும்-அறப்

போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,

மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்

மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்

பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,

துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்

தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்

சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!

தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்

தேவி துவஜம் சிறப்புற வாழ்க!

******************************************************************************************************************

UPLOADED TO YOUTUBE ON 12-9-2017

(தாயின்)

(தாயின்)

(தாயின்)

(தாயின்)

(தாயின்)

(தாயின்)

(தாயின்)

(தாயின்)

(தாயின்)