30-THEERAADHA VILAIYAATTU PILLAI *தீராத விளையாட்டுப் பிள்ளை ,

EMBEDDED MP4 MAY NOT WORK.

BUT YOU CAN CLICK AT TOP RIGHT (POP OUT..FULL SCREEN) .

YOU GET OPTION TO DOWNLOAD.

AND AFTER DOWNLOADING, CAN LISTEN IN VLC PLAYER

EMBEDDED MP4

தீராத விளையாட்டுப் பிள்ளை ,

கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை

தின்னப் பழம் கொண்டு தருவான் ,

பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்னப்பன் என்னைய்யன் என்றால்

அதை எச்சில் படுத்திக் கடித்துக் கொடுப்பான்

(SINDHUBAIRAVI)

அழகுள்ள மலர்கொண்டு வந்தே-என்னை

அழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்;

குழலிலே சூட்டுவேன்” என்பான்-என்னைக்

குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.

(KAMAJ) (தீராத)

பின்னலைப் பின்னின் றிழப்பான்;-தலை

பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;

வன்னப் புதுச்சேலை தனிலே-புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.

(SHANMUGAPRIYA) (தீராத)

புல்லாங் குழல்கொண்டு வருவான்-அமுது

பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்,

கள்ளர்ல் மயங்குவது போலே அதைக்

கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம்.

(MAAND)