26-எப்படிப் பாடினரோ-கர்நாடக தேவகாந்தாரி

https://youtu.be/54yIqReUGl4

எப்படி பாடினரோ அடியார்

அப்படிப் பாட நான்

ஆசை கொண்டேன் சிவனே !

அப்பரும் சுந்தரரும்

ஆளுடைப் பிள்ளையும்

அருள் மணி வாசகரும்

பொருளுணர்ந்து உன்னையே (எப்படி பாடினரோ)

குருமணி சங்கரரும்

அருமை தாயுமானாரும்

அருணகிரி நாதரும்

அருட்ஜோதி வள்ளலும்

கருணைக்கடல் பெருகி

காதலினால் உருகி

கனித்தமிழ் சொல்லினால்

இனிதுனை அனுதினம் (எப்படி பாடினரோ