26-எப்படிப் பாடினரோ-கர்நாடக தேவகாந்தாரி
https://youtu.be/54yIqReUGl4
எப்படி பாடினரோ அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே !
அப்பரும் சுந்தரரும்
ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும்
பொருளுணர்ந்து உன்னையே (எப்படி பாடினரோ)
குருமணி சங்கரரும்
அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும்
அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி
காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால்
இனிதுனை அனுதினம் (எப்படி பாடினரோ