22-SANTHAMULEGA(SAAMA RAGAM)
embedded mp4
f there is any problem in playing the embedded mp4 , look for popout button at
top right corner and you get download option.
Download, preserve and listen
![](https://www.google.com/images/icons/product/drive-32.png)
SRI.V.GOVINDHAN
http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2009/08/1-1-saantamu-leka-raga-saama.html
தியாகராஜ கிருதி - ஸா1ந்தமு லேக - ராகம் ஸா1ம - Saantamu Leka - Raga Saama
பல்லவி
ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
ஸாரஸ த3ள நயன
அனுபல்லவி
தா3ந்துனிகைன வேதா3ந்துனிகைன (ஸா1)
சரணம்
சரணம் 1
தா3ர ஸுதுலு த4ன தா4ன்யமுலுண்டி3ன
ஸாரெகு ஜப தப ஸம்பத3 கல்கி3ன (ஸா1)
சரணம் 2
ஆக3ம ஸா1ஸ்த்ரமுலன்னியு சதி3வின
பா4க3வதுலனுசு பா3கு3க3 பேரைன (ஸா1)
சரணம் 3
யாகா3தி3 கர்மமுலன்னியு ஜேஸின
பா3கு3க3 1ஸகல ஹ்ரு2த்3பா4வமு தெலிஸின (ஸா1)
சரணம் 4
ராஜாதி4 ராஜ ஸ்ரீ ராக4வ த்யாக3-
ராஜ வினுத ஸாது4 ரக்ஷக 2தனகுப(ஸா1ந்தமு)
பொருள் - சுருக்கம்
தாமரையிதழ்க் கண்ணா! அரசர்க்கரசனே, இராகவா! தியாகராசனால் போற்றப் பெற்றோனே! சாதுக்களைக் காப்போனே!
(மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
தவசிக்காகிலும், வேதாந்திக்காகிலும் (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
மனைவி, மக்கள், செல்வம், தானியங்களுடைத்தாயினும்,
எவ்வமயமும் செப, தவச் செல்வங்களுண்டாகினாலும்,
ஆகம சாத்திரங்களனைத்தினையும் கற்றிடினும்,
பாகவதரெனச் சிறக்க பெயர் பெற்றிடினும்,
வேள்வி முதலான கருமங்களனைத்தும் இயற்றிடினும்,
(அவற்றின்) உட்கருத்தினையெல்லாம் நன்கறிந்திடினும்,
(மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
தனக்கு உபசாந்தமின்றி சௌக்கியமில்லை.
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸா1ந்தமு/ லேக/ ஸௌக்2யமு/ லேது3/
(மன) அமைதி/ இன்றி/ சௌக்கியம்/ இல்லை/
ஸாரஸ/ த3ள/ நயன/
தாமரை/ இதழ்/ கண்ணா/
அனுபல்லவி
தா3ந்துனிகி/-ஐன/ வேதா3ந்துனிகி/-ஐன/ (ஸா1)
தவசிக்கு/ ஆகிலும்/ வேதாந்திக்கு/ ஆகிலும்/ (மன) அமைதியின்றி...
சரணம்
சரணம் 1
தா3ர/ ஸுதுலு/ த4ன/ தா4ன்யமுலு/-உண்டி3ன/
மனைவி/ மக்கள்/ செல்வம்/ தானியங்கள்/ உடைத்தாயினும்/
ஸாரெகு/ ஜப/ தப/ ஸம்பத3/ கல்கி3ன/ (ஸா1)
எவ்வமயமும்/ செப/ தவ/ செல்வங்கள்/ உண்டாகினாலும்/ (மன) அமைதியின்றி...
சரணம் 2
ஆக3ம/ ஸா1ஸ்த்ரமுலு/-அன்னியு/ சதி3வின/
ஆகம/ சாத்திரங்கள்/ அனைத்தினையும்/ கற்றிடினும்/
பா4க3வதுலு/-அனுசு/ பா3கு3க3/ பேரு/-ஐன/ (ஸா1)
பாகவதர்/ என/ சிறக்க/ பெயர்/ பெற்றிடினும்/ (மன) அமைதியின்றி...
சரணம் 3
யாக3/-ஆதி3/ கர்மமுலு/-அன்னியு/ ஜேஸின/
வேள்வி/ முதலான/ கருமங்கள்/ அனைத்தும்/ இயற்றிடினும்/
பா3கு3க3/ ஸகல/ ஹ்ரு2த்3-பா4வமு/ தெலிஸின/ (ஸா1)
நன்கு/ எல்லா/ (அவற்றின்) உட்கருத்தினை/ அறிந்திடினும்/ (மன) அமைதியின்றி...
சரணம் 4
ராஜ-அதி4 ராஜ/ ஸ்ரீ ராக4வ/ த்யாக3ராஜ/
அரசர்க்கரசனே/ ஸ்ரீ ராகவா/ தியாகராசனால்/
வினுத/ ஸாது4/ ரக்ஷக/ தனகு/-உப(ஸா1ந்தமு/)
போற்றப் பெற்றோனே/ சாதுக்களை/ காப்போனே/ தனக்கு/ உபசாந்தம்/ இன்றி...