52-pozhuthu pularnthathu-barathy

பாரதியின்

"பாரத மாதா திருப்பள்ளிஎழுச்சி "


பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,

புன்மை யிருட்கணம் போயின யாவும்;

எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;

தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்

தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;

விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!

வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!