52-pozhuthu pularnthathu-barathy
பாரதியின்
பாரதியின்
"பாரத மாதா திருப்பள்ளிஎழுச்சி "
"பாரத மாதா திருப்பள்ளிஎழுச்சி "
பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!