42-சங்க நாதம் கேட்குது
A WONDERFUL SONG BY N.C.VASANTHAKOKILAM
TRAGEDY THAT IT is LOST FOR POSTERITY!
can anyone help me in locating and preserving it?
POEM BY NAMAKKAL KAVIGNYAR
RAMALINGAM PILLAI
********************************************
சங்க நாதம் கேட்குது
சாந்த காந்தி சத்தியத்தின்
சங்க நாதம் கேட்குது
------------------------------------
ஆய்ந்து பார்க்க தேவை யில்லை
அதிலிருக்கும் நன்மையை
சாந்த காந்தி சத்தியத்தின்
சங்கநாதம் கேட்குது
----------------------------------------
மாந்தருக்குள் சமூக வாழ்வு
மாறுகின்ற பொழுதிலே
ஓய்வில்லாமல் எமது நாட்டைத்
துயிலெழுப்பும் ஓசையாம்
சங்கநாதம் கேட்குது!
-----------------------------------------------------
கர்ம வீரன் காந்தி என்னும்
காள மேகக் கர்ஜனை
தர்ம மான மழைபொழிந்து
தரணி முற்றும் குளிரவே
வர்ம மான வார்த்தை யாவும்
வாது சூது செய்திடும்
மர்ம மான எதையும் விட்ட
ராச மார்க்க மதிதரும்.
----------------------------------------------------------
சங்க நாதம் கேட்குது
சாந்த காந்தி சத்தியத்தின்
சங்கநாதம் கேட்குது.
*******************************************
full poem
சங்க நாதம் கேட்குது!
சாந்த காந்தி சத்தி யத்தின்
சங்க நாதம் கேட்குது!
ஆய்ந்து பார்க்கத் தேவை யில்லை
அதிலிருக்கும் நன்மையை
மாந்தருக்குள் சமுக வாழ்வு
மாறும் இந்தப் பொழுதிலே
சோர்ந்தி டாமல் நமது நாட்டை
துயில்எ ழுப்பும் ஓசையாம். 1
இடிஇடித்து மின்னல் மின்னி
இருள் கவிந்தே எங்கணும்
கிடுகிடுத்து உலகம் எங்கும்
கிலிபி டித்த வேளையில்
குடுகு டுத்த கிழவர் காந்தி
குமரர் நாணக் கூவினார்
துடிது டித்து உண்மை போற்றும்
தொண்டர் யாரும் கூடுவோம். 2
வீடுபற்றி வேகும் போது
வீணை மீட்டும் வீணர்போல்
நாடு முற்றும் புதிய வாழ்வை
நாடு கின்ற நாளிலே
பாடு மிக்க சேவை விட்டுப்
பதவி மோகம் பற்றினால்
கேடு என்ற எச்ச ரிக்கை
கிழவர் காந்தி கூக்குரல். 3
கடல்கலங்கப் புயல்அ டித்துத்
தத்த ளிக்கும் கப்பலின்
திடமி குந்த தெளிவு கொண்ட
திசைய றிந்த மாலுமி
இடம றிந்து காலங் கற்ற
இந்த நாட்டின் மந்திரி
கடன றிந்த காந்தி போதம்
கவலை போக்கும் மந்திரம். 4
கர்ம வீரன் காந்தி என்னும்
காள மேகக் கர்ஜனை
தர்ம மான மழைபொழிந்து
தரணி முற்றும் குளிரவே
வர்ம மான வார்த்தை யாவும்
வாது சூது செய்திடும்
மர்ம மான எதையும் விட்ட
ராச மார்க்க மதிதரும். 5
வீரம்என்றும் சூரம் என்றும்
வெறிகொ டுக்கும் பேச்சினால்
காரம் உள்ள வார்த்தை யாவும்
யாரை என்ன செய்திடும்?
தீரர் ஞான காந்தி சங்கம்
திசைமு ழங்கக் கேட்குது
சேர வாரும் மனித வாழ்க்கை
சீர்தி ருத்த வேண்டுவோர்.
https://www.youtube.com/watch?v=nHOth3THeAM