இவர் திருமழிசை என்னும் இடத்தில் பார்கவ முனிவர் கனகாங்கி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். பின் திருவாளன் என்பவரால் வளர்க்கப்பட்டார். இவர் திருமாலின் ஆழியான சக்கரத்தின் அம்சமாவார்.

கனிக்கண்ணன் என்பவரை சீடராக்கக் கொண்டு பல இடங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டுள்ளார். வயது முதிந்த பெண்ணிற்கு இளமையை திருப்பி அளித்த பெருமை இவரைச் சாரும்.