Kudos to மனித நேய பாண்டியன்

Post date: Dec 19, 2010 7:56:52 AM

SVV அறக்கட்டளை மூலம் திரு பாண்டியன் ஆற்றி வரும் மனிதநேயத் தொண்டுகள் பல... இது நம்மில் பலர் அறியாதது...!

அவர் நமது நகர் வாசி என்பதும் கூட நம்மில் பலர் அறியாததே..! ஆம் .. கம்பர் தெருவில் வசிக்கும் திரு பாண்டியன் அவர்கள் ஒரு முத்துலட்சுமி நகர் வாசி என்பதுமல்லாமல் அவர் நம் சங்கத்தின் உறுப்பினரும் கூட..!

19-12-2010 அன்று SVV அறக்கட்டளையும் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகமும் இணைந்து நடத்திய, மகா கவி இரவிந்த்ரநாத் தாகூர் 150 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பல வித்தகர்களுக்கு விருது வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அவ்வமயம், பல்வேறு துறைகளில் தன்னலமற்ற தொண்டாற்றும் சான்றோரை கண்டதுமன்றி ...அவ்வாறு தொண்டாற்றும் மனித நேயப் பண்பாளர் நம்மில் வசிக்கிறார் என அறிந்ததும் நமக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்வு மட்டுமின்றி நம் நகருக்கு ஒரு பெருமை சேர்க்கும் செய்தியும் கூட என்றால் அது மிகையாகாது !

உருவிற் சிறுத்த இவர் உள்ளத்தில் உயர்ந்தவர் ...! மூர்த்தி சிறிதெனினும் மனித நேயத்தின் கீர்த்தி பெரிது பெற்ற இவருக்கு மனித நேய பாண்டியன் என்ற அடை மொழி சாலப் பொருத்தம் .. !

வாழ்க பாண்டியன் பல்லாண்டு... வளர்க இவர் தொண்டு பன்மடங்கு ..!

நமது நகர் வாசி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ச இராசேந்திரன் மற்றும் பழம் பெரும் குணசித்திர நடிகர் திரு ராகவன் அவர்களிடம் பொன்னாடை போர்த்தப் பெறும் திரு பாண்டியன் ........