14

நெஞ்சுக்கு நீதியும் ,தோளுக்கு வாளும்,



Nenjukku_neethiyum_Rendition_By_MSS_amma_1_.mp4

நெஞ்சுக்கு நீதியும் ,தோளுக்கு வாளும்,

நிறைந்த சுடர்மணிப்பூண் !.

பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம்

இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ! ..

வஞ்சனையின்றிப் பகையின்றி சூதின்றி

வையக மாந்தரெலாம் ,

தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர்

சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்! ...

-----

நம்புவதே வழி என்ற மறைதனை

நாமின்று நம்பிவிட்டோம்

கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால்

உனைக் கும்பிடுவேன் மனமே!

அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்

அச்சமில்லாதபடி

உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்

சக்தி ஓம். ஓம் ஓம்

-

வெள்ளை மலர் மிசை வேதக்

கருப்பொருளாக விளங்கிடுவாய் ..

தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு

விண்ணப்பம் செய்திடுவேன்!

எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி

இராதெந்தன நாவினிலே

வெள்ளமெனப் பொழிவாய்

சக்தி ஓம், சக்தி ஓம், சக்தி ஓம்!