14
நெஞ்சுக்கு நீதியும் ,தோளுக்கு வாளும்,
நெஞ்சுக்கு நீதியும் ,தோளுக்கு வாளும்,
நிறைந்த சுடர்மணிப்பூண் !.
பஞ்சுக்கு நேர் பல துன்பங்களாம்
இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ! ..
வஞ்சனையின்றிப் பகையின்றி சூதின்றி
வையக மாந்தரெலாம் ,
தஞ்சமென்றே உரைப்பீர் அவள் பேர்
சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்! ...
-----
நம்புவதே வழி என்ற மறைதனை
நாமின்று நம்பிவிட்டோம்
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால்
உனைக் கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும் பதம்
சக்தி ஓம். ஓம் ஓம்
-
வெள்ளை மலர் மிசை வேதக்
கருப்பொருளாக விளங்கிடுவாய் ..
தெள்ளு தமிழ்க் கலைவாணி நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்!
எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி
இராதெந்தன நாவினிலே
வெள்ளமெனப் பொழிவாய்
சக்தி ஓம், சக்தி ஓம், சக்தி ஓம்!