10-

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

பீம்ப்ளாஸ் ராகம்


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

.

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்

-

..உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே

ஓதும் வேதத்தின் உள் நின்றொளிர்வாள்

.

கள்ள மற்ற முனிவர்கள் கூறும்

கருணை வாசகத் துட்பொருளாவாள்

-

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்

மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்

.

கீதம் பாடும் குயிலின் குரலைக்

கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்

-

கோதகன்ற தொழிலுடைத்தாகிக்

குலவு சித்திரம் கோபுரம் கோயில்

.

ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்

இன்பமே வடிவாகிடப் பெற்றாள்

---