07-
பிள்ளைப் பிராயத்திலே-
BARATHY AND NCVASANTHAKOOKILAM CLASSIC
பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணைமேல்-அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
வெள்ளை மலரணைமேல்-அவள்
வீணையும் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதம்-கண்டேன்
வெள்ளை மனம் பறிகொடுத் தேன், அம்மா!..
( திலங் )
-----------------------------------------------
ஆடி வருகையிலே அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள் !
கையில் ஏடு தரித்திருப்பாள் ,
அதில் இங்கிதமாக பதம் படிப்பாள் !
நாடி அருகனைந்தால் பல்
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள் !
கூடி மகிழவோம் என்றால் விழிக்கோணத்திலே
நகை காட்டி செலவாள் !
( பீம்ப்ளாஸ் )
---------------------------------------------------
ஆற்றங்கரைதனிலே
தனியானதோர் மண்டப மீதினிலே
காற்றை நுகர்ந்திருந்தேன் ,
கன்னி கவிதை கொணர்ந்து தந்தாள் !
ஏற்று மனம் மகிழ்ந்தே
" அடி! என்னோடிணங்கி மண்ம் புரிவாய் என்று
கேட்டிட்ட போதினிலே
இளம் புன்னகை பூத்து மறைந்து விட்டாள் !
(கமாஜ் )
---------------------------------------------------
THIS IS THE CORRECT VERSION.
HAVING ALL THE THREE STANZAS