02-
செந்தமிழ் நாடெனும் போதினிலே
chenchurutti raagam
செந்தமிழ் நாடெனும் போதினிலே
chenchurutti raagam
செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே
-
காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி-
என
மேவி யாறு பலவோடத்-திரு
மேனி செழித்த தமிழ்நாடு
-
நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.
-
கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
------------
THE FINISHING LINES ARE IN MADHYAMAVATHI
வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத
மணித் திருநாடு!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
CHENCHURUTTI RAAGAM