Sankara Vijayam - காஞ்சி முனிவர் சத்சரிதம்

சுத்தசத்வ சதானந்தம் சிவரூப சுபோத்பவம்

மானுஷ வேஷினம்-சாந்தம் சத்யதர்ம சம்ரக்ஷணம்

சஹஜ சௌலப்ய-பாவம் பவ-ப்ராரப்த நிக்ரஹம்

ஸ்ரீசந்த்ரசேகர சத்குரும் பாதபத்மம் ப்ரணமாம்யஹம்

*சுத்த சத்வ சதானந்த சிவரூபமாக சஹஜ பாவத்துடன் கூடிய பெரெளிமையைப் பூண்டு சாந்த ஸ்வரூபமாக சத்ய தர்மத்தைக் காக்கும் முகமாகவும் மனிதகுலத்தின் பவபயத்தைப் போக்கும் மார்க்கத்தை உபதேசிக்கும்உயர் நோக்கத்திற்காகவும் மனித காயத்தில் அவதரித்த ஸ்ரீ சந்த்ரசேகர சத்குருவின் பாதகமலங்களைப் பணிந்து நமஸ்கரிக்கிறேன்.

அரிது அரிது மனித்தப் பிறப்பு

அதனினும் அரிது இறைஉணர் வுறுதல்

அதனினும் அரிது பெரியவர் உறவு

அதனினும் அரிது அவர்வாய்ச் சொல்லால்

இறைஉயர் வறிதல் அரும்பெரும் பேறே..!

அப்படிப்பட்ட அறிய பேறு நமக்கு இப்பொழுது கிடைத்திருக்கிறது.

ஜகத்குரு சங்கரரின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புத அருள் நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக,

ஸ்ரீ. கணேச சர்மா

அவர்களின் உபன்யாசம்

“மஹா பெரியவா சரித்ரம்”

ஏப்ரல் 2 - 8 தேதிகளில்

தினமும் மாலை 7 முதல் 8:30 வரை

நமது ஆலயத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அனைவரும் கேட்டு களித்து பயனுறுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

______________________