Post date: Jan 14, 2014 6:09:53 AM
பொங்கும் மங்கலம் என்றும் தந்திடும்
வல்லப கணபதி வீரத்தின் மாருதி
எங்கும் இனிமையும் மகரத்தின் மலர்ச்சியும்
தந்திடும் பொங்கலாம் அறுவடை நன்னாளில்
அவர்பதம் பணிந்து மனம்தனில் துதித்து
துவர்மனம் விடுத்து மலர்முகம் பூண்டு
பிறர்நலன் கருதும் பாங்கினைக் கொண்டு
வாழுமென் நாளும் பொங்கல்நன்..னாளாம்