ஸ்ரீமன் நாராயண பக்தி ரஸம்

ம. சத்ய ப்ரஸாத் 

July 8, 2020 – 10:00 PM

--

--

மெட்டு

தா-தன-னன; தன-தன்-னன; தன-

தானன...தன்-நானன...

தானன-தன-தந்தன; தன-

தானன-தன-நானன

--

--

நூல்

பாற் கடலிலே, பலதலையுள்ள - ஒரு

பாம்பின் மேல் துயில் மாதவா!

பாரெனை, வந்து சேரெனை – இப்

பாரினில், கோடி ஆதவா!

--

மீனென, வேதம் மீட்டு நீ, அதை

வீணென விடவில்லயே!

வீணையை மீட்டும் நாரதர், அவர்

ஆணையே உன் நாமமே!

--

ஆமையாய் வந்து, அமுதினைத் தந்து,

ஆசையாய் தேவர் காத்தவா!

உன்பதம் பற்றும் பக்தன் நான், எனக்

அமுதமும் வேறு வேண்டுமோ!

--

பன்றியாய் புவி தூக்கி நீ, கடல்

வென்ற நீல வண்ணனே!

நன்றியால் நான் கரைகிறேன், உடன்

ஒன்றி நின்று கரை சேரவெய்!

--

பக்தன் பங்கமாய் வந்த இரண்யனை, நர

சிங்கமாய், அங்கம், அங்கமாய்,

மடியில் கிழித்து, ரத்தம் குடித்து முடித்து –

ப்ரஹலாதனின் உயிர் காத்தவா!

--

உன் பாதமே, வினோதமே – மூவ்

உலகளந்த, சிறு வாமனா!

பக்த ரக்ஷகா, ஆபத் பாந்தவா – ஆதி

சக்தியே, விஸ்வ ரூபமே!

--

உயர் அன்னையின் சிரம் அறுத்த பின்

உயிர் மீட்ட பரசு ராமனே!

ராமனே என் தலைவனாம், ஏய்

காமனே, நீ ஒழிந்திடு!

--

வில்லாளனே, செயல் வீரனே,

பொல்லாத என்வினை போக்கவா!

வேத மெய்ப்பொருள் ராமனே – என்

வேதனை நீ தீர்க்க வா!

--

பல, ராம நாமம் ஜபித்தே –

பலராமனான சேஷனே!

உருகினேன், நான் மருகினேன் – உடன்

அருகில் வா, என் ஐயனே!

--

யாதவா, இங்கு ஒடிவா - இக்

க்ஷணத்தில், பாடி ஆடிவா!

மாலனே, பக்தர் தோழனே – தவ

சீலனே, மாயக் கண்ணனே!

--

இருள் விலக்கினாய், அருள் பருகவே,

மருள் அழித்தெனை காக்கவா!

கலி கல்கியான பின்னும் - பக்தன்

கலங்கிடாமல் காப்பாய்!

--

உனதடிமை நான், உனதுடமை நான்,

உன் நாமம் ஒன்றே சொர்கமாம்!

என்றும் கோவிந்தா என்று கதறுவேன்,

உன்னுள் இரண்டர நான் கலந்திட!

--

--

ஓம் நமோ பகவதே வாசுதேவாய!

--

-x-




Back to table of contents