ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாதோர் பணியாளர்களின் உண்மைத்தன்மை விவரம் கோருதல்
மாவட்டக்கல்வி அலுவலம்
கடலூர்
ந.க.எண் 5647/ஆ5/2013 நாள் 06.01.2014
(கடலூர் ஒன்றியம் நீங்கலாக) கடலூர் கல்வி மாவட்டத்திலுள்ள அரசு/அரசு நிதியுதவி பெறும்/நகராட்சி உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களின் உண்மைத்தன்மை விவரம் அறியப்படாத 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றுகளின் விவரங்களை இணைப்பில் இவ்வலுவலக இணையத்தளத்தில் உள்ள படிவத்தில் 05-02-2014க்குள் ஆன்லைனில் பதிவுகள் மேற்கொண்டு உரிய மதிப்பெண் சான்றுகளின் நகல்களில் தலைமையாசிரியரே மேலொப்பமிட்டு ஒரு நகல் மட்டும் இவ்வலுவலகத்தில் நேரடியாக 05-02-2014க்குள் ஒப்படைக்க சம்மந்தப்பட்டப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் உண்மைத்தன்மை அறிய இதுவே கடைசி வாய்ப்பு என்பதால் எந்த ஒரு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களின் பெயரும் விடுபடாமல் உறுதி செய்து கொண்டு முகப்பு கடித்தில் உறுதிச்சான்றிதழ் வழங்க வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் நேரடியாக அரசுத்தேர்வுகள் இயக்கத்திற்கு மதிப்பெண் சான்றுகளின் உண்மைத்தன்மைக்கோரும் கடிதம் அனுப்பக்கூடாது என கண்டிப்பாக அறிவுறுத்தப்பபடுகிறது. மீறினால் சம்மந்தபட்டப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுத்தேர்வுகள் இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஓன்றுக்கு மேற்பட்ட மதிப்பெண் சான்றுகள் இருப்பின் ஆண்டு வாரியாக தனித்தனியே தனியரது பெயரை பதிவு செய்யப்பட வேண்டும்.
படிவத்தில் மாதம் மற்றும் ஆண்டை குறிப்பிடும் (Mar-99/Apr-99/Jun-99/Sep-99/Oct-99) போது அடைப்பில் குறிப்பிட்டுள்ள படி பதிவு செய்யப்பட வேண்டும்.
படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் பதிவு செய்து உறுதி செய்த பின்னரே சப்மிட் செய்ய வேண்டும்
இணைப்பு
பதிவு மேற்கொள்ள வேண்டிய இவ்வலுவலக இணையதள தொடர்பு
https://docs.google.com/forms/d/1ZZYRZgY1ivcJyLBk-pJmgI_SI5Ma6GFqibikIfxDfO4/viewform
(ஓம்/-வ.மல்லிகா)
மாவட்டக்கல்வி அலுவலர்
கடலூர்