பொதுக்காலம் 11-ஆம் வாரம்
13/06/2026
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
பொதுக்காலம் 11-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
வருகை பாடல்
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா
வரம் தருவாயே உருவானவா – 2
எனைச்சூழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாகி எனையாள்பவா – 2
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு – 2
குணமாக்க வருவாயப்பா எனை உனதாக்கி அருள்வாயப்பா
உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா – 2
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே – 2
நாதா உன் புகழ்பாடுவேன் எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்
பொதுக்காலம் 11ஆம் வாரம் - ஞாயிறு
முதல் வாசகம்
எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 19: 2-6a
அந்நாள்களில்
இரபிதீமிலிருந்து பயணம் மேற்கொண்ட இஸ்ரயேல் மக்கள் சீனாய் பாலைநிலத்தை வந்தடைந்து, பாலைநிலத்தில் பாளையம் இறங்கினர். அங்கே மலைக்கு முன்பாக இஸ்ரயேலர் பாளையம் இறங்கினர். ஆனால் மோசே கடவுளிடம் ஏறிச் சென்றார்.
அப்போது ஆண்டவர் மலையினின்று அவரை அழைத்து, யாக்கோபின் குடும்பத்தார்க்கு நீ சொல்ல வேண்டியது - இஸ்ரயேல் மக்களுக்கு நீ அறிவிக்க வேண்டியது - இதுவே: “நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள். மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 100: 1-2. 3. 5 (பல்லவி: 3c)
பல்லவி: நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்!
1
அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்!
2
ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! - பல்லவி
3
ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! - பல்லவி
5
ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். - பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்து நமக்காக உயிரைக் கொடுத்ததால் நாம் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6-11
சகோதரர் சகோதரிகளே,
நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்த காலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய்த் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப் பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ? நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அதுமட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவு கொண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மாற் 1: 15
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 36- 10: 8
அக்காலத்தில்
திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து.
இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: “பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
உம்மில் இணைவேன் பலியாக – 2
நொறுங்குண்ட இதயத்தை
விரும்பிடும் தெய்வமே
உடைந்திட்ட உள்ளமதை நாடிடும் அன்பரே
உமக்காய் உம்மில் வாழ ஆசிக்கின்றேன்
ஆபேலை போல ஆர்வமாய் தருவேன்
கைம்பெண்ணை போல
முழுமையாய் தருவேன் – 2
சிறந்தது எதுவோ அதையே தருவேன்
இருப்பதை உவந்தே உமக்கே தருவேன்
என்னையே முழுவதும் தருகின்றேன்
உமக்காய் வாழ விழைகின்றேன்
ஆபிரகாம் போல தயங்காது தருவேன்
யோபுவை போல அனைத்தையும்
இழப்பேன் – 2
முழுமை எதுவோ அதையே தருவேன்
வாழ்வின் பயனை நிறைவாய் தருவேன்
என்னையே முழுவதும் தருகின்றேன்
உமக்காய் வாழ விழைகின்றேன்
என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா - 2🎶
உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே
உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
1. அணைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம் (2)
ஆனால் இயேசுவே உன் அன்பிற்கழிவுண்டோ (2)
என் இனிய அன்பே எழுந்து வா
2. வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் உலகில் பல உண்டு
தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு (2)
ஆனால் இயேசுவே நல் நண்பன் நீரன்றோ (2)
என் இனிய நண்பா எழுந்து வா
அன்புத் தந்தையே கருணை தெய்வமே🎶
எங்கள் அந்தோணியாரே
புனித நகரிலே புதுமை புரிந்திடும்
பதுவைப் புனிதரே வாழ்க
வாழ்க வாழ்க வண்ணத் திருவடி புனிதர் பூவடி வாழ்க
1. பணியில் வாழ்வும் பகிர்வில் நிறைவும்
வரவும் உம் வரவால்
தணியும் நோய்கள் தகரும் பிணிகள்
தலைவா உன் தயவால்
தவிக்கும் உள்ளம் தனை உயர்த்த
தர்மம் தான் என்றாய்
உரிமை வாழ்வை உலகிற்கு உயர்த்த புனித நகரிலே
2. இறைவன் ஒளியில் நாங்கள் செல்ல
வழியைச் சொன்னவரே
இறை நல்வாழ்வில் நிதமும் வாழப்
பாதை தந்தவரே
எந்தன் நெஞ்சில் நீ இருந்து
உண்மை நெறி செல்ல
இறைவன் வாக்கை வாழ்ந்து காட்ட புனித நகரிலே
கோடி விண்மீன் வானத்திலேக் கண்டேனம்மா🎶
அது கூடி ஒன்றாய் திருமுடியில் நின்றதேனம்மா – 2
சத்தியத்தின் பேரொளியாம்
தேவ அன்னை – 2
அந்த உத்தமியின் ஒளிக்கு விண்மீன் உறவு கொண்டதே
வானத்திலே ஒளி வீசி வளரும் வெண்மதி
தாய் பாதத்திலே எழில் காட்டி இருப்பதும் என்ன – 2
ஞானத்தைப் படைத்த தேவன்
தாயல்லவா – 2
அன்னை தாள் பணிந்த வெண்மதியின் நிலையைச் சொல்லவா
ஆரோக்கியம் தேடி வந்தோர்
ஆலமரக் குளத்தடியில்
அருள்நிறை மரியே என்று
ஜெபிப்பதும் என்ன – 2
கருணைத் திருவுருவாம் கன்னி மரியாள் தந்த காட்சிக்கு மாதாகுளம் சாட்சியாகுமே – 2
கோடான கோடி மக்கள்
குறைகளைத் தீர்க்கும்
அன்னை வீடாக வேளைநகர் இருப்பதேனம்மா – 2
தீராத பிணி தீர்க்கும் ஆரோக்கியமாதா – 2
உன் திருப்பாதம் பட்ட மண்
வேளாங்கண்ணி – 2
வருகை பாடல்
பொதுக்காலம் 11-ஆம் வாரம்