பொதுக்காலம் 18-ஆம் வாரம்
01/08/2026
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
பொதுக்காலம் 18-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
வருகை பாடல்
அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்🎶
ஆனந்தமாய் புகழ்கீதம் என்றும் பாடுவோம் - 2
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் - 2
தாயின் கருவிலே உருவாகும் முன்னரே
அறிந்து எங்களை தேர்ந்த தெய்வமே
பாவியாகினும் பச்சைப் பிள்ளையாகினும்
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர்
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்
உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்த திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்
முதல் வாசகம்
விரைந்து வந்து உண்ணுங்கள்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 1-3
இறைவன் கூறுவதாவது:
“தாகமாய் இருப்பவர்களே, நீங்கள் அனைவரும் நீர்நிலைகளுக்கு வாருங்கள்; கையில் பணமில்லாதவர்களே, நீங்களும் வாருங்கள்; தானியத்தை வாங்கி உண்ணுங்கள். வாருங்கள், காசு பணமின்றித் திராட்சை இரசமும் பாலும் வாங்குங்கள்.
உணவாக இல்லாத ஒன்றிற்காக நீங்கள் ஏன் பணத்தைச் செலவிடுகின்றீர்கள்? நிறைவு தராத ஒன்றிற்காய் ஏன் உங்கள் உழைப்பை வீணாக்குகிறீர்கள்? எனக்குக் கவனமாய்ச் செவிகொடுங்கள்; நல்லுணவை உண்ணுங்கள்; கொழுத்ததை உண்டு மகிழுங்கள்.
எனக்குச் செவிகொடுங்கள், என்னிடம் வாருங்கள்; கேளுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வடைவீர்கள். நான் உங்களுடன் ஓர் என்றுமுள உடன்படிக்கையைச் செய்துகொள்வேன்; தாவீதுக்கு நான் காட்டிய மாறாத பேரன்பை உங்களுக்கும் காட்டுவேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 145: 8-9. 15-16. 17-18 (பல்லவி: 16)
பல்லவி: ஆண்டவரே எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
8
ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்.
9
ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். – பல்லவி
15
எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர்.
16
நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். – பல்லவி
17
ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே.
18
தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். – பல்லவி
இரண்டாம் வாசகம்
எந்தப் படைப்புப் பொருளும் கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 35, 37-39
சகோதரர் சகோதரிகளே,
கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?
ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். ஏனெனில் சாவோ, வாழ்வோ, வானதூதரோ, ஆட்சியாளரோ, நிகழ்வனவோ, வருவனவோ, வலிமை மிக்கவையோ, உன்னதத்தில் உள்ளவையோ, ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்போ நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவின் வழியாய் அருளப்பட்ட கடவுளின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கவே முடியாது என்பது என் உறுதியான நம்பிக்கை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 4: 4b
அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அனைவரும் வயிறார உண்டனர்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 13-21
அக்காலத்தில்
இயேசு புறப்பட்டுப் படகிலேறிப் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட திரளான மக்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக் கண்டு அவர்கள்மீது பரிவு கொண்டார்; அவர்களிடையே உடல் நலமற்றிருந்தோரைக் குணமாக்கினார்.
மாலையானபோது, சீடர் அவரிடம் வந்து, “இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, நேரமும் ஆகிவிட்டது. ஊர்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான உணவு வாங்கிக்கொள்ள மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்” என்றனர். இயேசு அவர்களிடம், “அவர்கள் செல்ல வேண்டியதில்லை; நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்றார்.
ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து, “எங்களிடம் இங்கே ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் தவிர வேறு எதுவும் இல்லை” என்றார்கள். அவர், “அவற்றை என்னிடம் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.
மக்களைப் புல் தரையில் அமருமாறு ஆணையிட்டார். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டுச் சீடர்களிடம் கொடுத்தார். சீடர்களும் மக்களுக்குக் கொடுத்தார்கள்; அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். பெண்களும் சிறு பிள்ளைகளும் நீங்கலாக உணவு உண்ட ஆண்களின் தொகை ஏறத்தாழ ஐயாயிரம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
உம்மில் இணைவேன் பலியாக
நொறுங்குண்ட இதயத்தை
விரும்பிடும் தெய்வமே
உடைந்திட்ட உள்ளமதை
நாடிடும் அன்பரே
உமக்காய் உம்மில் வாழ ஆசிக்கின்றேன்
ஆபேலை போல ஆர்வமாய் தருவேன்
கைம்பெண்ணை போல முழுமையாய் தருவேன்
சிறந்தது எதுவோ அதையே தருவேன்
இருப்பதை உவந்தே உமக்கே தருவேன்
என்னையே முழுவதும் தருகின்றேன்
உமக்காய் வாழ விழைகின்றேன்
ஆபிரகாம் போல தயங்காது தருவேன்
யோபுவை போல அனைத்தையும் இழப்பேன்
முழுமை எதுவோ அதையே தருவேன்
வாழ்வின் பயனை நிறைவாய் தருவேன்
என்னையே முழுவதும் தருகின்றேன்
உமக்காய் வாழ விழைகின்றேன்
நீயே எனது வாழ்வு இயேசையா – (2)
நான்கு திசையும் பாதைகள்
சந்திக்கின்ற வேளைகள்
நன்மை என்ன தீமை என்ன
அழியாத கோலங்கள் – (2)
நீயே எங்கள் வழியாவாய்
நீதியின் பாதையில் பொருளாவாய் – (2)
உமது பாதப்பதிவுகள் எமது வாழ்வின் தெளிவுகள்
அவற்றில் நான் நடந்தால் வெற்றியின் கனிகள் — நீயே
துன்ப துயர நிகழ்வுகள்
இருளின் ஆட்சிக் கோலங்கள்
தட்டுத் தடுமாறி விழத்
தகுமான சூழல்கள் – (2)
நீயே எங்கள் ஒளியாவாய்
நீதியின் பாதையின் சுடராவாய் – (2)
உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உனதருள் தாரும் — நீயே
சம்மனசுகளின் இராக்கினியான கன்னிகையே
தயவுள்ள தாயே…🎶
இராக்கினியே இராக்கினியே சம்மனசுகளின் இராக்கினியே
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
இராக்கினியே இராக்கினியே மலையுச்சியின் இராக்கினியே
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
கனிவுள்ள மாதாவே, கருணையின் மாதாவே, கர்த்தரின் மாதாவே
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
இராக்கினியே இராக்கினியே சம்மனசுகளின் இராக்கினியே
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
சிங்கை பக்தர்களின் அன்னையே
குன்றின் மேல் வீற்றிருக்கும் அன்னையே
பாவத்தின் மீட்பை எமக்களிக்க
இயேசுவை தந்த அன்னை நீர் தானே
உமது அன்பு மெய்யானது
உமது கனிவு மேலானது
இராக்கினியே இராக்கினியே சம்மனசுகளின்
இராக்கினியே எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
இராக்கினியே இராக்கினியே எங்கள் பாதுகாவலியே
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
கானான் திருமண குறைவை
இயேசுவிடம் நீரே சொன்னீரே
சீடர்களை அருகிலே அழைத்து
இயேசு சொல்வதை செய்யுங்கள் என்றீரே
குறையெல்லாம் நிறைவாகி மகிழ்வானது
இறைவனின் மகிமை ஒளிர்விட்டது
இராக்கினியே இராக்கினியே சம்மனசுகளின்
இராக்கினியே எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
இராக்கினியே இராக்கினியே பிள்ளைகளை காப்பவளே
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
மீட்க வந்த இரட்சகரை தாங்கியே
கல்வாரியின் சோகத்தையும் தாங்கியே
உலகின் அன்னையாய் என்றுமே - எம்
மகிழ்ச்சியின் காரணமாய் வாழ்ந்திரே
வாழ்கவே வாழ்கவே இராக்கினியே
எங்கள் பங்கின் அன்பு இராக்கினியே
இராக்கினியே இராக்கினியே சம்மனசுகளின்
இராக்கினியே எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
இராக்கினியே இராக்கினியே நோயினின்று காப்பவளே
எங்களுக்குகாக வேண்டிக்கொள்ளும்
வருகை பாடல்
பொதுக்காலம் 18-ஆம் வாரம்