பொதுக்காலம் 15-ஆம் வாரம்
11/07/2026
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
சனிக்கிழமை - திருப்பலி மாலை 7.45 மணிக்கு
பொதுக்காலம் 15-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
வருகை பாடல்
உதயங்கள் தேடும் இதயங்கள் தனிலே இறையருள் மலர🎶
மணங்கள் பூக்கள் சிந்த வசந்தம் வாழ்வில் பொங்க
வாரும் இறைகுலமே (2)
1. இரவினில் தவித்திட்ட வேளையிலே - முழு
நிலவாய் நிலமதில் நடந்தவனே
இடர்தனில் துடித்திட்ட பொழுதினிலே - எங்கள்
இதயத்தில் மலர்ந்திடும் சுடரொளியே
பாவம் நம்மிலே மறையாதோ தேவன்
பாதம் நம்மிலே பதியாதோ
சோகங்கள் மறைந்திட அருள்புரிவாய்
2. கவலைகளால் மனம் கலங்கையிலே - உந்தன்
கரங்களால் என்னைத் தாங்க வந்தாய்
ஆறுதல் தேடி நான் அலைகையிலே - உந்தன்
விழிகளில் கருணை மழை பொழிந்தாய்
புதிய உறவுகள் மலர்ந்திடவே - உந்தன்
அன்பின் பலியினில் கலந்திடவே
ஓர்குலமாய் ஒன்று கூடிவந்தோம்
முதல் வாசகம்
மழை நிலத்தை நனைத்து, விளையச் செய்கிறது.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 55: 10-11
ஆண்டவர் கூறுவது:
மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன; அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும். அது என் விருப்பத்தைச் செயல்படுத்தி, எதற்காக நான் அதை அனுப்பினேனோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் என்னிடம் திரும்பி வருவதில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 65: 9abc. 9d-10. 11-12. 13 (பல்லவி: லூக் 8: 8)
பல்லவி: நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ விளைச்சலைக் கொடுத்தன.
9abc
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது. – பல்லவி
9d
நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர்.
10
அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். – பல்லவி
11
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன.
12
பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. – பல்லவி
13
புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை! – பல்லவி
இரண்டாம் வாசகம்
கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 18-23
சகோதரர் சகோதரிகளே,
இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது. ஏனெனில், படைப்பு பயனற்ற நிலைக்கு உட்பட்டுள்ளது; தானே விரும்பியதால் அப்படி ஆகவில்லை; அதை உட்படுத்தினவரின் விருப்பத்தால் அவ்வாறு ஆயிற்று; எனினும் அது எதிர்நோக்கை இழந்த நிலையில் இல்லை. அது அழிவுக்கு அடிமைப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளின் பிள்ளைகளுக்குரிய பெருமையையும் விடுதலையையும் தானும் பெற்றுக்கொள்ளும் என்கிற எதிர்நோக்கோடு இருக்கிறது.
இந்நாள்வரை படைப்பு அனைத்தும் ஒருங்கே பேறுகால வேதனையுற்றுத் தவிக்கின்றது என்பதை நாம் அறிவோம். படைப்பு மட்டும் அல்ல; முதல் கொடையாகத் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டுள்ள நாமும் கடவுள் நம்மைத் தம் பிள்ளைகளாக்கப்போகும் நாளை, அதாவது நம் உடலை விடுவிக்கும் நாளை எதிர்நோக்கிப் பெருமூச்சு விடுகிறோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதை, அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாரும் என்றென்றும் நிலைத்திருப்பார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் விதைக்கச் சென்றார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23
அக்காலத்தில்
இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்:
“விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்றார்.
சீடர்கள் அவர் அருகே வந்து, “ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: “விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன். இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது:
‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது; காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான்.
பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள்.
முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
உம்மிடம் கொண்டு வந்தேன் - 2
ஏற்று அருளும் இறைவா
இரக்கம் தந்தருளும்
சிலுவையின் மறுபுறத்தே
சிறுமை யாவும் அறைந்தேன்
பலியிது தகும் பலியே - நான்
பலிப் பொருள் வேரறியேன்
உரிமை வாழ்வு பெறவே
வெறுமையாகிப் பணிந்தேன்
அறிவியல் தந்த கனிகள்
அளவில்லாத பிணிகள்
அன்பு மறந்த பாதை - அதில்
அனுதினம் பெரும் வாதை
அறிந்து வருந்திப் பணிந்தேன்
அன்பின் பலியில் இணைந்தேன்
இதய வேந்தே ஆராதனை
(அப்பத்தின் வடிவில் நெஞ்சத்தை திறக்கும்
ஆண்டவா உமக்கே ஆராதனை) (2)
நதிகள் கடலில் கலக்கும் நேரம்
அமைதி பிறக்கும் நேரம் - எங்கள்
இதயம் உறவில் நிலைக்கும் நேரம்
உம்மில் நிலைக்கும் நேரம்
(இயேசுவே உம்மை வணங்கும் நேரம்
எம்மனம் இறைமயமாகும்) (2)
வாழ்வு தரும் வார்த்தை எல்லாம்
காதில் ஒலித்திடுமே
கருத்தில் நிலைத்திடுமே – ஆராதனை
குடும்ப உறவில் புனிதம் வேண்டும்
குறைகள் நீங்க வேண்டும் - இங்கு
வாடும் இளைஞர் மாண்பு நெறியில்
மகிழ்ந்தே சிறக்க வேண்டும்
(வீதியிலே... வீட்டினிலே...
நேயமே நிலவிட வேண்டும்) (2)
வானமுதே வாழ்பவரே
வாழ்வு தாருமய்யா
வலிமை தாருமய்யா - ஆராதனை
என்னையே நான் மறக்கின்றேனே (2)
உந்தன் அன்பை உலகம் அறியம்
எந்தன் மனமே சான்று கூறும்
அன்பு அன்னையே (2)
வாழ்விழந்த பிள்ளையாவும்
உந்தன் பிள்ளைகளே
உந்தன் அன்பை பாடும்போது
இல்லை எல்லைகளே
இறைவனே உன் சேவை கண்டு
இறையரசி என்று சூட்டி
எம்மை காக்க வைத்தார்
கருணை பொழிய வைத்தார்
2. வழி இழந்து வருந்துவோரை
தேற்றும் அன்னையே
வாழ்க்கை பாணம் போகும்போது
துணையாய் நின்றவளே
அன்னையே உந்தன் அன்பை கண்டு
அவளியெங்கும் பெருமை சொல்வேன்
எம்மை வாழ வைத்தாய்
வளமை பொங்க வைத்தாய்
வருகை பாடல்
பொதுக்காலம் 15-ஆம் வாரம
பொதுக்காலம் 16-ஆம் வாரம்
Click on the 🎶 button to listen to the hymn.
வருகை பாடல்
அன்புப் பணியினை வாழ்வென ஏற்றிடும் நேரம்🎶
அரிய நேரம் அல்லவா – இந்த
நேரத்திலே, புது இராக்கத்திலே எழும்
அனந்தம் நாம் சொல்லவா – அன்பு
இயேசுவின் அணியில், எளியவர் பணியில், எழுபவர் வாருங்களே
நேசத்தின் துணையில், நடந்திட உலகில், முனைபவர் சேருங்களே
பேசரும், இந்த பேரருள் கண்டு இறைவனைப் பாருங்களே – 2
நன்கு இறைவனைப் பாருங்களே – அன்பு
பாரினில் நலன்கள், சேர்ந்திட மலர்ந்த, புதுமலர் பாருங்ளே
நீதியின் அரசை, நிறுவிட முழங்கும், புதுக்குரல் கேளுங்களே
பேரருள் நதி பாய்ந்திடும் இந்த திருப்பலி சேருங்களே – 2
இந்த திருப்பலி சேருங்களே – அன்பு
முதல் வாசகம்
எம் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 12: 13, 16-19
ஆண்டவரே, உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின் மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்ட வேண்டும்?
உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின் மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும் போதெல்லாம் செயல் புரிய உமக்கு வலிமை உண்டு.
நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 86: 5-6. 9-10. 15-16 (பல்லவி: 5a)
பல்லவி: ஆண்டவரே, நீர் நல்லவர்; மன்னிப்பவர்.
5
என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
6
ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். – பல்லவி
9
என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
10
ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! – பல்லவி
15
என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள்மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்.
16
என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். – பல்லவி
இரண்டாம் வாசகம்
தூய ஆவியார் தாமே நமக்காகப் பரிந்து பேசுகிறார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 8: 26-27
சகோதரர் சகோதரிகளே,
தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெறமுடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார். உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறை மக்களுக்காகப் பரிந்து பேசுகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 11: 25 காண்க
அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-43
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.
பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், ‘முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்’ என்று கூறுவேன்” என்றார்.
இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.”
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.”
இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேச வில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது. அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவர் அருகே வந்து, “வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்” என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்:
“நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர்.
எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
அறுவடை வரை, இரண்டையும் வளர விடுங்கள்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்திற்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்து விட்டுப் போய்விட்டான்.
பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, ‘ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘இது பகைவனுடைய வேலை’ என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், ‘நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?’ என்று கேட்டார்கள். அவர், ‘வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், “முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்” என்று கூறுவேன்’ என்றார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
அன்போடு வந்தோம் காணிக்கை தந்தோம்🎶
கனிவோடு ஏற்பாய் ஆண்டவரே- உம்
பலியோடு சேர்ப்பாய் தூயவரே
பொன்னான வாழ்வைப் புடமிட்டு வைத்தோம்
பூவாக மணம் வீச வைத்தோம் – 2
புதிரான வாழ்வே எதிரானதாலே – 2
பொலிவாகச் செய்வாய் ஆண்டவரே - உம்
அருளோடு அணைப்பாய் மாபரரே
அருளான வாழ்வு இருளானதாலே
திரியாக எமை ஏற்றி வைத்தோம் – 2
திரியாகக் கருகி மெழுகாக உருகி – 2
பலியாக வைத்தோம் ஆண்டவரே - புது
ஒளியாக மாற்றும் தூயவரே
என்னோடு நீ பேச வந்தாய், என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் – 2🎶
என் தெய்வமே, என் தெய்வமே
நீயின்றி நானில்லையே, உன் நினைவின்றி வாழ்வில்லையே
இதய தாகம் நீ, இருளில் தீபம் நீ
உதயக் காலம் நீ, உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன், கண்மூடி நான் வழிமாறினேன்
தீராத துன்பங்களில், நீ தாயாகி தாலாட்டினாய்
உயிரின் தீபம் நீ, உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ, மலரின் மணமும் நீ
என் பாதையில் முன்போக வா, கண் போலவே எனைக் காக்க வா
ஆதாரம் நீயாகவே, உன் அன்பொன்றே எனதாகவே
எங்கள் முகம் பாரம்மா, எங்கள் குறை தீரம்மா🎶
புனிதை நீர் அல்போன்சம்மா
எங்கள் கல்வி நன்றாக, என்றும் பண்பில் முன்னேற
அருள் செய்வாய் அல்போன்சம்மா
பாதம் பணிந்தோம் உம் குழந்தைகளாய்
நீர் பரிந்துரைப்பாய் வான் தந்தையிடமாய்
குழந்தைகள் மீது அன்பு கொண்ட அல்போன்சம்மா
பணிந்து நடந்து பாடம் கற்கும் பண்பு வேண்டும்
பெற்றோர் உள்ளம் சந்தோஷத்தைக் காண வேண்டும்
உண்மை மாற நெஞ்சத்தோடு பேச வேண்டும்
உள்ளங்களில் பக்தி குடிகொள்ள வேண்டும்
எங்கள் அன்பு தாயே, நீர் ஏற்பாயே
இறைவனிடம் நீர் பரிந்துரைத்து
இவை அனைத்தும் எங்கள் வழி கிடைத்து
உன்னால் எங்கள் உள்ளம் மகிழ்வாகட்டுமே
மன்னித்து நீர் மனம் மகிழ்ந்த மழைலயம்மா – அன்று
குடமாளூரில் நீயும் தானே குழந்தையம்மா
குழந்தை நாங்கள் உம்மைப் போல ஞானம் பெற
தவறேதும் செய்யா வண்ணம் காப்பாற்றம்மா
வருகை பாடல்
பொதுக்காலம் 16-ஆம் வாரம்