14- ANDHA NALUM VANDHIDATHO

அந்த நாளும் வந்திடாதோ !

அனைவரும் கூடி, அவன் புகழ் பாடி

நிர்மல யமுனா நதியினில் ஆடி

.வனம் வழி திரிந்து ... வரதனைத்தேடி

அனுதினம் அமுதனை தரிசனம் செய்த

அந்த நாளும் வந்திடாதோ !

( there is a saxophone interlude here barely for a few seconds..

A stroke of genius by S.V.Venkataraaman).

வானவர் நாணிடும் மங்கையரோடு ,

மா தவத்தோரும் மயங்கிடுமாறு ,

தேனின் இனித்திடும் தீங்குழலூதி ,

மானிடமே அதிமேலெனச்செய்தான் !

--

கானகம் சென்று ஆநிரை கன்று

கருணை மாமுகில் மேயத்திட அன்று

புனித மேனியில் புழுதியும் கண்டு

வானோர் பூமியை விழைந்ததும் உண்டு !

போதமில்லா ஒரு பேதை மீரா !

பிரபு கிரிதாரி ,ஹ்ருதய சஞ்சாரி !

வேதம் வேதியர் திரிசனும் தேடும்

பாத மலர்கள் நோக நடந்த

அந்த நாளும் வந்திடாதோ !