14- ANDHA NALUM VANDHIDATHO
அந்த நாளும் வந்திடாதோ !
அனைவரும் கூடி, அவன் புகழ் பாடி
நிர்மல யமுனா நதியினில் ஆடி
.வனம் வழி திரிந்து ... வரதனைத்தேடி
அனுதினம் அமுதனை தரிசனம் செய்த
அந்த நாளும் வந்திடாதோ !
( there is a saxophone interlude here barely for a few seconds..
A stroke of genius by S.V.Venkataraaman).
வானவர் நாணிடும் மங்கையரோடு ,
மா தவத்தோரும் மயங்கிடுமாறு ,
தேனின் இனித்திடும் தீங்குழலூதி ,
மானிடமே அதிமேலெனச்செய்தான் !
--
கானகம் சென்று ஆநிரை கன்று
கருணை மாமுகில் மேயத்திட அன்று
புனித மேனியில் புழுதியும் கண்டு
வானோர் பூமியை விழைந்ததும் உண்டு !
போதமில்லா ஒரு பேதை மீரா !
பிரபு கிரிதாரி ,ஹ்ருதய சஞ்சாரி !
வேதம் வேதியர் திரிசனும் தேடும்
பாத மலர்கள் நோக நடந்த
அந்த நாளும் வந்திடாதோ !