13- UDAL URUGA

உடல் உருக , உள்ளம் உருக

ஊண் எல்லாம் நெக்குருக

குழல் ஊதி இசை பாடி எனை தேடிவந்து

கடல் வண்ணத்திருமேனி

எழிற்கோலம் காட்டி

( பூர்விகல்யாணி )

கனவினிலே எனை மணந்த கண்ணா !

கிரிதரனே!

படமுடியாத்துயரம் இந்தப்பேதை

படவில்லையோ

பாவி உயிர் உன் பிரிவால் தேய்வ்தறிந்திலையோ ! (ஸஹானா )

இடர்க்கடலில் மீராவை தவிக்கவிட்டே

இன்று எங்கு சென்றாய்! என்னரசே!

எங்கு நீ சென்றாய்! என்னரசே!

எங்கு மறைந்தனயோ! (நாதநாமக்ரியா)