02- KAATRINILAE VARUM

காற்றினிலே வரும் கீதம்

கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம் !

கல்லும் கனியும் கீதம் !---

பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம் !

பண்ணொலி பொங்கிடும் கீதம் !

காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்

மதுர மோகன கீதம் !

நெஞ்சினில் இன்பக்கனலை எழுப்பி

நினைவழிக்கும் கீதம்!

------------------------------------------------

சுனை வண்டுடன் சோலைக்குயிலும்

மனம் குவிந்திடவும்,

வான வெளிதனில் தாராகணங்கள்

தயங்கி நின்றிடவும்

ஆ! என் சொல்வேன்! மாயபிள்ளை

வேய்ங்குழல் பொழி கீதம்

------------------------------------------------

நிலா மலர்ந்த இரவினில் தென்றல்

உலாவும் நதிக்கரையில்

நீல நிறத்து பாலகன் ஒருவன்

குழல் ஊதி நின்றான் !

காலமெல்லாம் அவன் காதலை எண்ணி

உருகும என் உள்ளம் !