நட்பு
அம்மையாய் வலியைத் தாங்கி
ஆதரவு தந்து ஊக்குவித்து
இன்பம்தனை பகிர்ந்து கொண்டு
ஈவிரக்கத்துடன் துக்கத்தில் பங்கெடுத்து
உரிமையுடன் கை கோர்த்து
ஊமையாகவே கதைகள் பலபேசி
எதிர்ப்பார்ப்பின்றி அன்பு சொரிந்து
ஏமாற்றங்களை தடவிக் கொடுத்து
ஐயமின்றி எண்ணங்களை சீர்திருத்தி
ஒற்றுமையாய் வாழ்நாளை கழித்து
ஓசையின்றி இயற்கையை ரசித்து
ஔவையைப் போல் வழிகாட்டி
அஃதே சேர்ந்திருப்பதாம் நட்பு
-பத்மஜா