அம்மா
எத்தனையோ பெரும்-நோவில் மகவுஎனைப் பெற்று
தத்தி-விளை..யாடிய-வென் மென்பதத்தைக் கட்டி
முத்தனைய என்-மகனே என்று-எனைப் போற்றி
புத்தி-தரும் நல்-விஷயம் பலது-எனக் குரைத்து
சிந்தனையை எப்போதும் எந்நலனில் வைத்து
சீராட்டிப் பாலூட்டி வளர்த்த-எந்தன் பெற்றோரை
நல்ல-தவம் செய்து-பின்னால் நானடைந்து பெற்றதனால்
நல்-மகவு மட்டுமில்லை நானுமுமைப் பெற்றோனே
__________________________________________________________________________________________________________________________________________________