அம்மா

எத்தனையோ பெரும்-நோவில்  மகவுஎனைப் பெற்று

தத்தி-விளை..யாடிய-வென் மென்பதத்தைக் கட்டி

முத்தனைய என்-மகனே என்று-எனைப் போற்றி

புத்தி-தரும் நல்-விஷயம் பலது-எனக் குரைத்து

சிந்தனையை எப்போதும் எந்நலனில் வைத்து

சீராட்டிப்  பாலூட்டி வளர்த்த-எந்தன் பெற்றோரை

நல்ல-தவம் செய்து-பின்னால்  நானடைந்து பெற்றதனால்

நல்-மகவு மட்டுமில்லை  நானுமுமைப் பெற்றோனே

__________________________________________________________________________________________________________________________________________________