Kanampulla nayanar

கணம்புல்ல நாயனார் புராணம்

முன்புதிரு விளக்கெரிக்கும்

முறையாமங் குறையாமல்

மென்புல்லும் விளக்கெரிக்கப்

போதாமை மெய்யான

அன்புபுரி வார்அடுத்த

விளக்குத்தந் திருமுடியை

என்புருக மடுத்தெரித்தார்

இருவினையின் தொடக்கெரித்தார்.

தாவாத பெருஞ்செல்வம்

தலைநின்ற பயன்இதுவென்

றோவாத ஓளிவிளக்குச்

சிவன்கோயில் உள்ளெரித்து

நாவாரப் பரவுவார்

நல்குரவு வந்தெய்தத்

தேவாதி தேவர்பிரான்

திருத்தில்லை சென்றடைந்தார்.

தங்கள்பிரான் திருவுள்ளம்

செய்துதலைத் திருவிளக்குப்

பொங்கியஅன் புடன்எரித்த

பொருவில்திருத் தொண்டருக்கு

மங்கலமாம் பெருங்கருணை

வைத்தருளச் சிவலோகத்

தெங்கள்பிரான் கணம்புல்லர்

இனிதிறைஞ்சி அமர்ந்திருந்தார்.

மூரியார் கலியுலகில்

முடியிட்ட திருவிளக்குப்

பேரியா றணிந்தாருக்

கெரித்தார்தங் கழல்பேணி

வேரியார் மலர்ச்சோலை

விளங்குதிருக் கடவூரில்

காரியார் தாஞ்செய்த

திருத்தொண்டு கட்டுரைப்பாம்.

You can listen to the story of Sri Kanampulla nayanar in a tamil discourse at the following site:

http://www.esnips.com/doc/79a37b39-bcf6-42f1-af5e-d8a33d9b90e6/46kaNampulla-nAyanAr