Thiruvillakku Mahimai

திருவிளக்கு மகிமை

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி

விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு

விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

-- 10வது திருமுறை

எண்ணில்திரு விளக்குநெடு

நாளெல்லாம் எரித்துவரப்

புண்ணியமெய்த் தொண்டர்செயல்

புலப்படுப்பார் அருளாலே

உண்ணிறையும் பெருஞ்செல்வம்

உயர்த்தும்வினைச் செயல்ஓவி

மண்ணிலவர் இருவினைபோல்

மாண்டதுமாட் சிமைத்தாக.

திருவிளக்குத் திரியிட்டங்கு

அகல்பரப்பிச் செயல்நிரம்ப

ஒருவியஎண் ணெய்க்குஈடா

உடல்உதிரங் கொடுநிறைக்கக்

கருவியினால் மிடறரிய

அக்கையைக் கண்ணுதலார்

பெருகுதிருக் கருணையுடன்

நேர்வந்து பிடித்தருளி.

எயிலணையும் முகில்முழக்கும்

எறிதிரைவே லையின்முழக்கும்

பயில்தருபல் லியமுழக்கும்

முறைதெரியாப் பதியதனுள்

வெயில்அணிபல் மணிமுதலாம்

விழுப்பொருளா வனவிளக்கும்

தயிலவினைத் தொழின்மரபில்

சக்கரப்பா டித்தெருவு.

தேவர்பிரான் திருவிளக்குச்

செயல்முட்ட மிடறரிந்து

மேவரிய வினைமுடித்தார்

கழல்வணங்கி வியனுலகில்

யாவரெனாது அரனடியார்

தமையிகழ்ந்து பேசினரை

நாவரியுஞ் சத்தியார்

திருத்தொண்டின் நலமுரைப்பாம்.

பணிகொள்ளும் படம்பக்க

நாயகர்தங் கோயிலினுள்

அணிகொள்ளுந் திருவிளக்குப்

பணிமாறும் அமையத்தில்

மணிவண்ணச் சுடர்விளக்கு

மாளில்யான் மாள்வனெனத்

துணிவுள்ளங் கொளநினைந்தவ்

வினைமுடிக்கத் தொடங்குவார்.

மனமகிழ்ந்து மனைவியார்

தமைக்கொண்டு வளநகரில்

தனமளிப்பார் தமையெங்கும்

கிடையாமல் தளர்வெய்திச்

சினவிடையார் திருக்கோயில்

திருவிளக்குப் பணிமுட்டக்

கனவினும்முன் பறியாதார்

கையறவால் எய்தினார்.