22-அம் கண் மா ஞாலத்து அரசர்

அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே

சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்

அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்

எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்