21-ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்

தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்

மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்

ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்