12-கனைத்து இளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

நினைத்து முலை வழியே நின்று பால் சோர

நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்

பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்

இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்

அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்