பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் சில . . .
தகைசால் பள்ளி ( School of Excellence )
பள்ளி பராமரிப்புக்கென தனி நிதி
திறன் வகுப்பறைகள்
ஆங்கில மொழி ஆய்வகங்கள்
சிறந்த தலைமையாசிரியருக்கான அண்ணா தலைமைத்துவ விருது
நடமாடும் அறிவியல் ஆய்வகங்கள்
ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி
கணினி நிரல் மன்றம் ( Computer Coding Club )
எந்திரனியல் ( Robotics Club )
மாணவர்களுக்கு இணையப் பாதுகாப்பு மற்றும் Ethical Hacking தொடர்பான பயிற்சிகள் வழங்குதல்
ஹேக்கத்தான் ( Hackathon ) போட்டிகள் ஆண்டுதோறும் நடத்துதல்
பள்ளி சதுரங்க ஒலிம்பியாட் போட்டிக்கு பயிற்சி
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இருப்பிடத்திலேயே கல்வி
நூலக நண்பர்கள் திட்டம்
புதிய எழுத்தறிவுத்திட்டம் ( தமிழ்நாட்டில் 15 வயதிற்கு மேற்ப்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாக 4.80 இலட்சம் நபர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுக்கல்வி வழங்குதல் )
தமிழக பள்ளிக்கல்வி வரலாற்றுப்பின்னணி :-
பலர் கூடி விவாதிக்கும் அமைப்புக்கு சங்கம் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டது.
அறங்கூர் அவையம்,
சமணப்பள்ளி,
பௌத்தப்பள்ளி
போன்ற அமைப்புகள் சங்க காலத்திலும் சங்க மருவிய காலத்திலும் செயல்பட்டு வந்தன.
சமண சமயத்தை சேர்ந்த திகம்பரத்துறவிகள் தங்கள் தங்குமிடங்களிலேயே கல்வியையும், சமய கருத்துகளையும் கற்றுக்கொடுத்தனர். பள்ளி என்ற சொல்லுக்கு படுக்கை என்று பொருள். அவர்களின் படுக்கையின் மீது மாணவர்கள் அமர்ந்து கற்றதனால் பள்ளிக்கூடம் என அழைக்கப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் கிராமங்கள் தோறும் பெருமளவு திண்னைப் பள்ளிகள் இருந்தன. அவற்றை தெற்றுப்பள்ளிகள் என்றும் அழைத்தனர்.
எட்டாக்கனி :-
ஆங்கிலேயர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர் கல்வி தனியார் வசமிருந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி வசதி கிடைத்தது. மிகப் பெரும்பான்மையினருக்கு கல்வியின் பயன் கிட்டவில்லை. பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் கல்வி வட்டத்துக்கு வெளியே ஒதுக்கப்பட்டனர். எண்ணும் எழுத்தும் இவர்களுக்கு எட்டாக் கனிகள் ! இந்த அவல நிலை 1813 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதே ஆண்டு சாசனச் சட்டப்படி லண்டன் பாரளுமன்றம் இந்தியாவின் கல்விக்கு ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்கியது.
மன்றோவின் ஆய்வு :-
இந்தியாவிற்கு வந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியார் கல்வியின் பயன் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டனர். குறிப்பாக சென்னை ராஜதானி ஆளுநராயிருந்த சர் தாமஸ் மன்றோ முதன் முதலில் 1822 ஆம் ஆண்டு ஒரு ஆய்வை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர்களைக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டில் நிலவிய கல்விநிலை பற்றிக் குறிப்பிடப்பிட்டிருந்தவை
பல மாவட்டங்களில் பள்ளிகள் செயல்பட்டுக்கொண்டிருந்தன.
இப் பள்ளிகளில் உயர் வகுப்பார் மட்டுமே படித்து வந்தனர்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது.
அரசாங்கத்துக்கும், கல்வி வளர்ச்சிக்கும் என்வித தொடர்பும் இல்லாமலிருந்தது.
சலுகை வகுப்புகளுக்கு அளிக்கப்பட்ட கல்வியும் ஒரே சீராக இல்லை.
1,34,76,923 மக்கள் தொகை கொண்ட சென்னை ராஜதானியில் 12,498 பள்ளிகள் இருந்தன.
தமிழ்நாட்டில் அறிவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முதல் கல்வி ஆய்வு இதுவேயாகும்.
கல்விக்குறிப்பு :-
சென்னை ராஜதானியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் தாமஸ் மன்றோ ஒரு வரலாற்றுச் சிறப்புடைய குறிப்பைத் தயாரித்தார். இக்குறிப்பில் மூன்று முக்கியப் பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் இரண்டு அரசாங்கப்பள்ளிகளைத் திறக்க வேண்டும்.
இதே போன்று, ஒவ்வொரு தாலுக்காவிலும் ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும். இப்பள்ளிகளின் வாயில்கள் அனைவருக்கும் திறக்கப்பட வேண்டும்.
இப்பள்ளிகளின் வளர்ச்சிக்காக அரசாங்கம் ஆண்டு தோறும் ரூ.50,000 நிதி ஒதுக்க வேண்டும்.
இப்பரிந்துரைகளின் பேரில் சென்னை ராஜதானியில் 1826 ஆம் ஆண்டு பொதுக் கல்வி போர்டு ( Board of Public Instruction ) உருவாக்கப்பட்டது. இதுவே கல்வித்துறையின் துவக்கமாகும்.
விரிவான கல்வித் திட்டம் :-
1854 ஆம் ஆண்டு சர் சார்லஸ் உட் தலைமை ஆளுநர் டல்ஹெசி பிரபுவின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு அகல் விரிவான கல்வித்திட்டத்தை தயாரித்தார். இத்திட்டத்தில் பல புரட்சிகரமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. இப்பரிந்துரைகளின்படி சென்னை அரசாங்கம் பொதுக் கல்வித்துறை (Department of Public Instruction) யைத் தோற்றுவித்தது.
பொதுக் கல்வித்துறை :-
சென்னை ராஜதானியில் பொதுக்கல்வித்துறை துவங்கப்பட்ட பின் பள்ளிகளுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. பள்ளிகளுக்கு மாணியம் வழங்குதவற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
1855 இல் பள்ளிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. 1881 ஆம் ஆண்டில் மிகப் பெரும்பான்மையான பள்ளிகள் அரசாங்க உதவி பெறும் பள்ளிகள் ஆயின. அதவாவது தமிழ்நாட்டில் ஒரு சிலருக்கு மட்டுமே பயன்பட்டுவந்த தனியார் பள்ளிகளுக்கு பதில் அரசு பொதுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்வி புரட்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.
கல்வி அங்கீகாரம் :-
தல போர்டுகள் சட்ட ( Local Board Act, 1871 ) த்தின்படி
தல போர்டுகள் பள்ளிகளைத் திறக்கவும்,
அப்பள்ளிகளுக்கான அரசு மானியம் பெறுவதற்கும் உரிய அதிகாரங்கள் அளிக்கப்பட்டது.
1920 இல் சென்னை துவக்கக்கல்விச் சட்டம் இயற்றப்பட்டது.
இச்சட்டத்தின்படி தல நிறுவனங்கள் துவக்கக் கல்வி வளர்ச்சிக்காக நலத் தீர்வையோ, சொத்து வரியோ விதிப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றன. அது மட்டுமல்ல துவக்கக்கல்வி, மாவட்ட போர்டுகளிலிருந்து தாலுகாக போர்டுகளுக்கும், நகராட்சி மன்றங்களுக்கும் மாற்றப்பட்டது. அதே போன்று துவக்கப்பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் அதிகாரம் மாவட்ட கல்வி மன்றங்களுக்க மாற்றப்பட்டது.
1939 இல் மாவட்ட போர்டுகள் கலைக்கப்பட்டதால் துவக்கப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் அதிகாரம் மீண்டும் கல்வித் துறையிடமே ஒப்படைக்கப்பட்டது.
வரலாற்று நிகழ்வுகள் :-
1706 - டச்சுக்காரர்களின் சமயப் பரப்பு சங்கம் தமிழகத்தில் முதல் முதலாக கல்விப்பணியில் ஈடுபட்டது.
1819 - பள்ளிக்கூட புத்தகச் சங்கம் தொடங்கப்பட்டது.
1822 - ஹண்டர் கல்விக்குழு அமைக்கப்பட்டது.
1826 - பொதுக்கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.
1835 - சென்னை மருத்துவப் பள்ளி தொடங்கப்பட்டது. பின்பு 1851 ஆம் ஆண்டு மருத்துவக் கல்லூரியாக வளர்ந்தது.
1836 - சென்னை மாநிலப் பள்ளி
1840 - சென்னை கிருத்துவப் பள்ளி
1841 - சென்னை பச்சையப்பன் பள்ளி
1849 - பெண்களுக்கான உயர்நிலைப்பள்ளி
1854 - பொதுக்கல்வித்துறை நிறுவப்பட்டு முதல் பொதுக்கல்வி இயக்குநர் (DPI) நியமிக்கப்பட்டார்.
1857 - சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது.
1859 - 1794 இல் தொடங்கப்பட்ட ஸ்கூல் ஆஃப் சர்வே நிறுவனம் 1859 இல் கிணிடி பொறியியல் கல்லூரியாக மாறியது.
1890 - கன்னிமாரா பொது நூலக உருவாக்கம்
1891 - சென்னை சட்டக் கல்லூரி
1892 - பொதுக்கல்வித் துறை தோற்றுவிக்கப்பட்டது.
1910 - இடைநிலைக் கல்வி வாரியம் தொடங்கப்பட்டது.
1911 - பள்ளியிறுதி வகுப்பு (SSLC) மாநில அளவிலான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
1921 - சென்னை துவக்கக் கல்வி விதிமுறைகள் செயல்படுத்தப்பட்டன.
1924 - தேர்ந்தெடுக்கப்பட்ட சிலப் பள்ளிகளில் கட்டாய இலவசக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
1929 - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் நிறுவப்பட்டது.
1935 - இந்திய அரசுச் சட்டத்தின்படி கல்வி மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
1953 - சட்டப் படிப்புகள் இயக்கம் துவங்கப்பட்டது.
1955 - ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் துவக்கப்பட்டது.
1956 - மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
1957 - தொழில் நுட்பக் கல்வி இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
1960 - பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச சீருடைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1964 - உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை இலவசக் கல்வி அளிக்கப்பட்டது.
1965 - கல்லூரிக் கல்வி இயக்ககம் துவங்கப்பட்டது.
1969 - தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் துவங்கப்பட்டது.
1972 - பொது நூலகங்கள் தோற்றுவிக்கப்பட்டது.
1975 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் துவங்கப்பட்டது.
1976 - முறை சாரா மற்றும் முதியோர் கல்வி இயக்ககம் ஆரம்பிக்கப்பட்டது.
1978 - மேல்நிலைக் கல்வி ( 10 + 2 ) அறிமுகப்படுத்தப்பட்டது.
1981 - பஞ்சாயத்து ஒன்றியப் பள்ளி ஆசிரியர்கள் அரசாங்கப் பணியாளர்களாயினர்.
1982 - சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1985 - எட்டாம் வகுப்பு வரை இலவசப் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்கப்பட்டன.
1986 - துவக்கக் கல்வி இயக்ககம் துவங்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை நடைமுறை படுத்தப்பட்டது. நகராட்சி / பேரூராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியோர் அரசாங்கப் பணியாளர்களாயினர்.
1987 - ஆசிரியர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது.
1988-90 ஒன்றிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை தேசிய கல்விக் கொள்கையின்படி பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டன.
1990 - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கம் துவங்கப்பட்டது.
1995-96 முதல் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரையான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது.
2001 - மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது.
2001-02 விலையில்லா மிதி வண்டி வழங்ககும் திட்டம் தொடக்கம் ( 11 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மாணவிகள் )
2009 - கட்டாய கல்வி உரிமைச் சட்டம் ( 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும் )
2010-11 ஒன்றிலிருந்து ஆறாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2011-12 மடிக்கணினி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
2012-13 முப்பருவமுறை அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
2021-22 அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள்
இல்லம் தேடிக்கல்வித் திட்டம் (26.09.2021 )
நான் முதல்வன் திட்டம் (01.03.2022)
நம் பள்ளி நம் பெருமை திட்டம் (19.04.2022 )
எண்ணும் எழுத்தும் திட்டம் (13.03.2022)
இளந்தளிர் இலக்கியத் திட்டம் & குழந்தை எழுத்தாளர்களுக்குக் கவிமணி விருது வழங்குதல் ( 26.08.2021)
2022-23 முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் - அறிமுகம்