நானும் ஒரு விவசாயிக் குடும்பத்தில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட பாடல்களை நேரிடையாக கேட்கும் வாய்ப்பு இன்றி, பிறர் எழுதக் கூடிய கட்டுரையின் மூலம் படித்து தெரிந்து கொள்ளுவதற்கு மிகவும் வெட்கப்படுகிறேன்.
இவ்வாறான நாட்டுப்புறப் பாடல்கள் தற்போது நாட்டுப்புற மக்களிடையே அருகியே காணப்படுகிறது.இதற்குக் காரணம் நாட்டுப்புற மக்களிடையே ஏற்பட்டுள்ள அறிவியல் புரட்சியே ஆகும். விரைவில் அறிவியல் நம்மை நமது கலாச்சார,பண்பாட்டுப் பிணைப்பில் இருந்து விலக்கி விடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
இவ்வாறான கருத்துக்களை உலகறியச் செய்த தமிழ் பெருமக்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டவனாகிறேன்...