இந்து மாமன்றம் ரூகலாண்ட்

திருமணசேவை

நோர்வே நாட்டின் சட்ட விதிமுறைகளுக்கு அமைய இந்து சமய முறைப்படி
திருமணம் நடாத்தி வைக்கும் சேவைக்கு இந்து மாமன்றத்திற்கு
அரசின் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.
திருமண சேவைகளை குருக்களோ பொறுப்பாளரோ அல்லது ஏற்பாட்டாளரோ
நிலையத்தின் சார்பில் நடாத்தி வைப்பார்கள்.

மணமக்கள் அரச விவாக சேவை அலுவலகத்துக்குச் சென்று பதிவாளர் முன்னிலையில்
தமது திருமணப்பதிவை நடத்தி வந்த வழக்கத்தை மாற்றி அதற்குப் பதிலாக அவர்கள் விரும்பும் இடத்தில்
விரும்பிய நேரத்தில் திருமண பதிவையும் திருமண சடங்குகளையும் ஒரே வேளையில்
அல்லது வேறு வேறு தருணங்களில் வீட்டிலோ, மண்டபத்திலோ அல்லது
கோவிலிலோ நடத்திவைக்க எமது நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.