இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ் எந்நோயையும் அதற் குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவ தில்லை
என அபூ ஹுரைரா (ரலி) அறி வித்தார்.
( புஹாரி - 5678 )
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்
நபி (ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு.
தேன் அருந் துவது, இரத்தம் வெளி யேற்றும் கருவி யால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக் கொள்வது ஆகிய னவே அந்த மூன்று மாகும்.
(ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டா மென என் சமுதாயத் தாருக்கு நான் தடை விதித்கிறேன் என்று கூறினார்கள். (புஹாரி - 5680)
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். (புஹாரி - 5695 )
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். (புஹாரி - 5699 )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்கு மார்களின் கூட்டங்களை கடக்கும் போது ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள் என்று சொல்லப் படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)
ஹிஜாமா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்)என்கிற அடிப்படைய்ல் செய்தால், அதற்கான நன்மைகள் இவ்வுலகத்திலும், மறுமை நாளிலும் கிடைக்கும்.
ஹிஜாமா மூலம் இரத்த ஓட்டத்தை சமசீர் செய்து Kinetic energy என்ற ஆற்றலை அதிகப்படுத்துகிறது. இது இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்றுகிறது. இதனால் சில வகையான நோய்கள் விரைவாக குணமடைய உதவுகிறது.
ஹிஜாமா இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக்கையாக தடுக்கலாம். அதாவது வரும் முன் காப்போம் (Prevention better than cure). ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற நோய்களின் பாதிப்பதை குறைக்க உதவும்.
ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 70% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது. இதை நாம் ஆங்கிலம் மற்றும் பாரம்பரிய மருத்துவதுடன் இனைந்து செய்தால் நம் உடல் நோய் மிகவேகமாக குணமடையும். நாம் உடல்நிலை சரியில்லாமல் நோய்வாய்ப்பட்டு இருக்கும் சமயத்திலும், நாம் உட்கொள்ளும் மருந்திலிருந்தும், அதிகநச்சுப்பொருட்கள் (Toxins), கழிவுப்பொருட்கள் (Waste metabolic product) உடலிருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் (Subcutaneous area) களிலும் தேங்கிவிடுகிறது. அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.
வருடத்திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வதனால் இடைப்பட்ட காலம் காலங்களில் எற்ப்பட்ட, உடலில் தேங்கிவிடுகிற கழிவுகளை நீக்கி, இரத்ததை சுத்தப்படுத்தி, இரத்த சுழற்சி மேம்படுத்தலாம், புதிய ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை (Natural Biological Balance) மேம்படுத்துவதன் மூலம்பல உடல் சார்ந்த நோய்களை தடுக்கலாம்.
இம்முறையால் சுத்த இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells – RBC, WBC ), இரத்தப்புரதங்கள் (Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை
ஹிஜாமா சிகிச்சையில் இடுப்பு, மூட்டு, தலை,தோல் பட்டை, குதிகால் - வலிகள், தைராய்டு, ஒற்றை தலை வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா,அதிக உடல் எடை, மனநிலை கோளாறு,முடி கொட்டுதல், தோல் நோய்கள், நரம்பு புடைப்பு நோய்,ஆராதபுண்,பய உணர்வு.மாதவிடாய் பிரச்சினை ஆகியவைகளுக்கு சிறந்த நிவாரணம் உள்ளது.
இறைவன் அருளால்