கிரேஸ் சர்குணம் அவர்களைப் பற்றி சிலவரிகள்


மிகவும் மிகவும் பிரியமான, தேவனை அதிகம் நேசிக்கும் , 40 வருடங்களாக கணவனை இழந்து ஆண்டவருக்கென்று வாழும் ஒரு சகோதரியை பற்றி எழுத விரும்புகிறேன். நாங்கள் டெல்லியில் இருந்த நாட்களிலும் இவர்களிடம் அதிக ஐக்கியம் உண்டு.  இவர்கள் அதிகம் படித்தவர் அல்ல. ஆனால் தமிழில் நன்றாக எழுத முடியும். இவர்களுக்கு பண உதவி செய்வது சிலர் மாத்திரம். தன் சரீரத்தில் நீரழிவு நோயுடன் ஒரு பெரிய ஊழியம் செய்து வருகிறார்கள். ஒரு கண்ணில் பார்வை இல்லை. வயது 80 வயது நெருங்கி வருகிறது. "டெபோரா" என்ற ஒரு அருமையான தமிழ் பத்திரிகை வெளியிட்டு வருகிறார்கள். இவர்களின் பெயர் கிரேஸ் சர்குணம். அநேக உபத்தரவத்தின் பாதையில் சிறு வயது முதல் கடந்து வந்தவர்கள். இப்போது மிகுந்த உபத்தரவத்தின் நடுவில் இந்த தமிழ் பத்திரிகையை நடத்தி வருகிறார்கள்.  ஞானமணி அம்மாளின் வாழ்க்கை சரீரத்தை இவர்கள் எழுதி ஒரு புத்தகத்தை வெளியிட்டார், இந்த பத்திரிகையின் பெயர் முள்வேலிக்குள் பரதேசி. நான் இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இதை இந்த இணைய தளத்தில் வெளியிட்டேன். இப்போது இந்த புத்தகத்தை E Book அல்லது மின்புத்தகம் ஆக இங்கேயே படிக்கலாம். 



T . யோபு அன்பழகன்