

|
*
*
*
*
*
*
*
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள் நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.(அல்-குரான் 7.3)
"மனிதர்களுக்காக தோற்றுவிக்கப் பட்ட (சமுதாயங்களுள்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள்அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, நல்லதை செய்ய ஏவுகிறீர்கள்; தீயதைவிட்டு விலக்குகிறீர்கள்" (அல்குர் ஆன் 3 :110). "ஒரு கூட்டத்தாரைக்கொண்டு இன்னொரு கூட்டத்தாரை அல்லாஹ் அழிக்காவிட்டால், பூமியில் குழப்பத்தால் சீர்குலைந்து போயிருக்கும்" (அல்குர்ஆன் 2:251).
இது ஒரு புதிய மதமோ, தத்துவமோ அல்ல! மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இறைவன் தனது இறைத்தூதர்கள் மூலமாக அனுப்பி அருளிய சத்திய வாழ்க்கை நெறியே அது! உலகில் வாழும் ஐவரில் ஒருவருக்கு இஸ்லாம் ஒரு மார்க்கம் மட்டுமல்ல, மாறாக, அவர்களின் முழுமையான வாழ்க்கை வழிமுறையுமாகும். இறைவனால் முஸ்லிம்கள் என சிறப்பிக்கப்பட்ட மக்கள் பின்பற்றும் மார்க்கமான இஸ்லாம் அமைதியும், அருளும் கொண்ட மிக உன்னதமான இறைமார்க்கமாகும். பாவமன்னிப்பும், பரஸ்பர அன்பும் பாராட்டும் வாழ்வியல் நெறியும் ஆகும். இதை விடுத்து மற்றவர்கள் தமது நம்பிக்கையுடன் இணைத்துள்ள ஏனைய வழிமுறைகள், செயற்பாடுகள் எதுவொன்றுக்கும் இஸ்லாத்துடன் எந்த தொடர்பும் இல்லை. |