MySpace Graphics       In The Name Of Allah..     MySpace Graphics

சூரா அல்-பாத்திஹா (1 - 7)الْحَمْدُ للّهِرَبِّ الْعَالَمِينَஅனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (1:1) الرَّحْمـنِ الرَّحِيمِ (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். (1:2) مَـالِكِ يَوْمِ الدِّينِ (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). (1:3) إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். (1:4) اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! (1:5) صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (1:6) غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல. (1:7) ......ஹதிஸ்எனக்காகவே நேசிப்பவர்கள் எங்கே? எனது நிழல் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் அவர்களுக்கு நிழல் தருகிறேன் என்று அல்லாஹ் கூறுவான் என நபி(ஸல்) கூறினார்கள். அபூஹுரைரா(ரலி) : முஸ்லிம் ஒரு மனிதன் தனது நண்பனின் மார்க்கத்தில் ஆகிவிடுகிறான். எனவே யாரை நண்பனாகத் தேர்வு செய்வது என்பதில் கவனமாக இருக்கவும் என்பது நபிமொழி. அபூஹுரைரா(ரலி) : அபூதாவூத், திர்மிதீ முஃமினிடம் தவிர நீ நட்புக் கொள்ளாதே! உனது உணவை இறையச்சமுடையவர்களே உண்ணட்டும்! என்பது நபிமொழி. அபூதாவூத், திர்மிதீ நல்ல நணபர் கஸ்தூரி விற்பனை செய்பவர் போன்றவர். தீய நண்பர் துருத்தி ஊதுபவர் போன்றவர். கஸ்தூரி விற்பவர் உனக்கு இலவசமாக அதைத் தரக்கூடும், அல்லது உன்னிடம் அதை விற்கக் கூடும், அல்லது அதன் நறுமணத்தை நீ நுகரக் கூடும். துருத்தி ஊதுபவர் உனது ஆடையை எரித்துவிடக் கூடும், அல்லது அவரிடமிருந்து கெட்ட வாடையை நீ அடைய நேரும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அபூமூஸா(ரலி) : புகாரி, முஸ்லிம் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் மற்ற எவரைவிடவும் அதிகம் நேசித்தல். ஒருவரை விரும்புவது என்றால் அல்லாஹ்வுக்காகவே அவரை விரும்புதல், நெருப்பில் போடப்படுவதை வெறுப்பது போல் குஃப்ருக்கு செல்வதை வெறுத்தல் ஆகிய மூன்று பண்புகள் உள்ளவர் ஈமானின் சுவையை உணர்வார் என்பது நபிமொழி. அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம் ஒருவர் தமது சகோதரரை விரும்பினால், தான் அவரை விரும்புவதை அவரிடம் தெரிவித்து விடட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள். மிக்தாத்(ரலி): அபூதாவூத், திர்மிதீ ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து யுக முடிவு நாள் எப்போது? என்றார். அதற்காக எதைத் தயார் செய்து வைத்துள்ளீர்? என நபி(ஸல்) கேட்டார்கள். “அல்லாஹ்வின் நேசத்தையும், அவனது தூதரின் நேசத்தையும் தான்” என்று அவர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “நீர் யாரை நேசிக்கிறீரோ அவர்களுடன் இருப்பீர்” என்றார்கள். அனஸ்(ரலி) : புகாரி, முஸ்லிம் மனிதன் யாரை நேசிக்கின்றானோ அவனுடனே (மறுமையில்) இருப்பான் என்பது நபிமொழி. அபூமூஸா(ரலி) : புகாரி, முஸ்லிம்   
இஸ்லாம்                                                                                                                                                           செய்திகள் 

                                                                                                                                                                 

இஸ்லாமிய பெயர்கள்                                                                                                                             கல்வி

 

சமுதாய அமைப்புகள்                                                                                                                              அன்றாடதேவைகள் 

                                                 

                                                                                   தமிழ் இஸ்லாமிய தளங்கள்                              

MySpace Graphics

ஹதிஸ் தொகுப்பு மற்றும் ஸகாபாக்கள் வரலாறு..

 

   

 
 
 
javascript programmer, html codes
CURRENT MOON